முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நிதியைச் சேர்க்க நீதிக்கே வைக்கப்பட்ட 'தீ'-நீதிபதி குறித்து அலகாபாத் வழக்கறிஞர்கள் சங்கம் கொதிப்பு.

நிதியைச் சேர்க்க நீதிக்கே  வைக்கப்பட்ட 'தீ'-நீதிபதி குறித்து அலகாபாத் வழக்கறிஞர்கள் சங்கம் கொதிப்பு.             


டில்லி உயர் நீதிமன்றத்தின் நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் கட்டுக் கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், அவரை பணியிட மாற்றம் செய்ய உச்சநீதிமன்றத்தில் கொலிஜியம் முடிவு செய்துள்ளது.   டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா. நேற்று, அவரது வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது.

தீயணைப்புப் படையினரும் காவல்துறையினரும் உடனடியாக வந்து தீயைக் கட்டுப்படுத்தினர். ஆனால் அந்தக் கதை ஒரு பெரிய திருப்பத்தை எடுத்து இன்னும் பெரிய தீயை மூட்டுகிறது - அவரது அறைகளில் ஒன்றில் பணம் நிறைந்திருப்பதை தீயணைப்பு வீரர்கள் கண்டுபிடித்தனர்.  அதன்பேரில், தீயை அணைக்க வந்த போது, நீதிபதியின் வீட்டில் உள்ள அறையில் கட்டுக் கட்டாக ரூபாய் நோட்டுக்கள் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும், அதனைப் பறிமுதல் செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இந்த சம்பவம் நீதித்துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்த  உச்சநீதிமன்றத்தின் கொலீஜியம் அமைப்பில் உள்ள 5 உறுப்பினர் நீதிபதிகளும் ஒருமனதாக திட்டமிட்டுள்ளனர். மேலும், டில்லியிலிருந்து அலகாபாத் உயர்நீதிமன்றத்திற்கு யஷ்வந்த் வர்மாவை பணியிட மாற்றம் செய்யவும் கொலிஜியம் முடிவு செய்துள்ளது.

ஆனால், அவரை ஏற்க முடியாது எனக்கூறி அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.



அதேவேளையில், ஒரு சிலரோ, நீதித்துறைக்கு களங்கத்தை ஏற்படுத்திய யஷ்வந்த் வர்மா மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். மேலும், அவரை பதவி விலகவும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த முடிவை திரும்பப் பெற வேண்டும். அலகாபாத் உயர்நீதிமன்றம் என்ன குப்பைத் தொட்டியா என கேள்வி எழுப்பி உள்ளனர்.   முதற்கட்ட விசாரணையில், ரூபாம்.11 கோடி பணம் எரிந்துவிட்டதாகவும், இவை அனைத்துமே கணக்கில் வராத பணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த விவகாரத்தைத் தொடர்ந்து யஷ்வந்த் தனது பதவியை ராஜிநாமா செய்ய வலியுறுத்தப்படலாம், அவர் அதற்கு சம்மதிக்கவில்லை என்றால் விரைவில் உள்விசாரணை தொடங்கி நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும், விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், நாடாளுமன்றத்தால் அவர் பதவி நீக்கம் செய்யப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.நீதிபதி யஷ்வந்த் வர்மா

06.01.1969 ஆம் தேதியன்று அலகாபாத்தில் பிறந்தார். டெல்லி பல்கலைக்கழகத்தின் ஹன்ஸ்ராஜ் கல்லூரியில் பி.காம் [ஹானர்ஸ்] பட்டப்படிப்பை முடித்தார்  மத்தியப் பிரதேசம் ரேவா பல்கலைக்கழகத்தால் எல்.எல்.பி பட்டம் பெற்றார், அதன் பிறகு  08.08.1992 ஆம் தேதியன்று வழக்கறிஞராக பணி செய்து வந்தார். அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக, அரசியலமைப்பு, தொழிலாளர் மற்றும் தொழில்துறை சட்டங்கள், கார்ப்பரேட் சட்டங்கள், வரிவிதிப்பு மற்றும் தொடர்புடைய சட்டக் கிளைகள் தொடர்பான விஷயங்களைக் கையாளும் பல்வேறு வழக்குகள் கையாண்டிருந்தார். 2006 ஆம் ஆண்டு முதல் பதவி உயர்வு வரை அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் சிறப்பு ஆலோசகராகவே இருந்தார். 2012 ஆம் ஆண்டு முதல் ஆகஸ்ட் மாதம் 2013 ஆம் ஆண்டு வரை உத்தரபிரதேச மாநிலத்திற்கான தலைமை நிலை ஆலோசகராகப் பணியாற்றினார், பின்னர் நீதிமன்றத்தால் மூத்த வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார்.


2014 அக்டோபர் 13 ஆம் தேதியன்று அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பிப்ரவரி 01, 2016 ஆம் நாளன்று கொலீஜியம் பரிந்துரை மூலம் அந்த நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாகப் பதவியேற்றார். அக்டோபர் 11, 2021ஆம் தேதியன்று டெல்லி உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.          இதில் பொது நீதி யாதெனில்: இவர் மீது நடத்தப்படும் விசாரணையில் நிரபராதிகளிளின் நீதி நிதியால் மறைக்கப்பட்டிருந்தால் இந்த நீதிமான் சிறைக்குச் செல்ல வேண்டியவரே.  ஏழை நிரபராதிகளின் நீதி நிதியால் மறைக்கப்பட்டிருந்தால் இவர் தண்டனை பெறும் நாளில் தான் நீதி நிலைபெறும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...