தமிழ்நாடு அரசுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு.
பல்கலைக் கழகத்தின் புதிய துணைவேந்தர் தேடுதல் குழுவில் யுஜிசி பிரதிநிதி இடம்பெற வேண்டுமென்ற நிலை காரணமாக தமிழ்நாடு அரசுக்கும் ஆளுநருக்கும் தொடர்ந்து மோதல் போக்கு நீடிக்கிறது. சென்னை பல்கலைக்கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கு புதிய துணைவேந்தர்களை நியமிப்பதில் சிக்கல் ஏற்பட்டது தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தற்போது நிலுவையிலிருந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.யுஜிசி விதிமுறைகளின்படி அமைக்கப்பட்ட தேடுதல் குழுவின் பரிந்துரையின் படிதான் பல்கலைக்கழங்களில் துணைவேந்தர் நியமனம் நடைபெற வேண்டுமென்று பேராசிரியர் பி.எஸ்.ஸ்ரீஜித் - டாக்டர் எம்எஸ்.ராஜஸ்ரீ வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. எனவே, யுஜிசி பிரதிநிதி இல்லாமல் தேடுதல் குழுவை அமைத்து அரசு ஆணை வெளியிடப்பட்டிருப்பது யுஜிசி விதிமுறைகளுக்கும், உச்ச நீதிமன்ற உத்தரவுக்கும் முற்றிலும் முரணானது. அதனால், யுஜிசி பிரதிநிதி இல்லாமல் தேடுதல் குழுவை நியமித்து வெளியிடப்பட்ட அறிவிக்கையை திரும்பப் பெற வேண்டும் என்றும், யுஜிசி பிரதிநிதியுடன் வேந்தர் நியமித்த தேடுதல் குழு தொடர்பான அறிவிக்கையை வெளியிட வேண்டுமென்றும் தமிழ்நாடு அரசை ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார்.” எனக் கூறப்பட்டுள்ளது.தமிழ்நாடு ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறிப்பதாவது: “மாநில பல்கலைக்கழகங்களின் வேந்தர் என்ற முறையில் தமிழ்நாடு ஆளுநர், தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தரை நியமனம் செய்வதற்கான தேடுதல் குழுவை நியமித்துள்ளார். உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக விதிமுறைகள் மற்றும் பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) விதிமுறைகளின் அடிப்படையில் அந்த தேடுதல் குழுவில் வேந்தரின் பிரதிநிதி, தமிழ்நாடு அரசின் பிரதிநிதி, பல்கலைக்கழக செனட் பிரதிநிதி மற்றும் யுஜிசி பிரதிநிதி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
உச்ச நீதிமன்ற உத்தரவின் படி, மாநில பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் தேடுதல் குழுவில் யுஜிசி பிரதிநிதி இடம்பெற வேண்டியது கட்டாயமாகும். யுஜிசி பிரதிநிதி உள்ளிட்ட 4 பேர் அடங்கிய தேடுதல் குழு நியமனம் தொடர்பான அறிவிக்கையை வெளியிடுமாறு தமிழ்நாடு அரசுக்கு 2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 24-ஆம் தேதி ஆளுநர் உத்தரவிட்டிருந்தநிலையில், உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத் துணைவேந்தர் தேடுதல் குழு தொடர்பான அரசாணையை தமிழ்நாடு அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 28-ஆம் தேதி அன்று வெளியிட்ட அரசாணையில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மீறி, வேண்டுமென்றே யுஜிசி பிரதிநிதி நீக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் தொடர்பாக யுஜிசி பிரதிநிதி இல்லாமல் அமைக்கப்பட்டுள்ள தேடுதல் குழுவை திரும்பப் பெற வேண்டும் என்றும் யுஜிசி பிரதிநிதியுடன் வேந்தர் அமைத்துள்ள தேடுதல் குழுவை ஏற்று அறிவிப்பு வெளியிட வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுறுத்தியுள்ளார்.
கருத்துகள்