முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

திமுக அரசியல் ஆதாயங்களை விட நமது குழந்தைகளின் நலனுக்கு முன்னுரிமை கொடுக்க அமைச்சர் வேண்டுகோள்

திமுக அரசியல் ஆதாயங்களை விட நமது குழந்தைகளின் நலனுக்கு முன்னுரிமை கொடுக்க அமைச்சர் வேண்டுகோள்


பிஎம்ஸ்ரீ பள்ளிகளுக்கு தமிழ்நாடு அரசின் ஒப்புதல் கடிதத்தை வெளியிட்டார் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்.

'எக்ஸ்' சமூக வலைதளத்தில் இந்தகா கடிதத்தை வெளியிட்டவர் கூறியுளளதாவது: பிஎம்ஸ்ரீ பள்ளிகளுக்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் தொடர்பாக கூறி நாடாளுமன்றத்தை நான் தவறாக வழிநடத்துவதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டினார். நாடாளுமன்றத்தில் நான் சொன்னதில் உறுதியாக இருக்கிறேன். 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15 ஆம் தேதியில் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அனுப்பிய ஒப்புதல் கடிதத்தை பகிர்கிறேன்.


தி.மு.க., நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் எவ்வளவு வேண்டுமானாலும் பொய்களை அடுக்கி வைக்கலாம். ஆனால், உண்மை சரிந்து விழும்போது தட்டிக் கேட்பது கிடையாது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிான தி.மு.க., அரசு மக்களுக்கு நிறைய பதில் சொல்ல வேண்டியுள்ளது. மொழிப் பிரச்னையை திசைதிருப்பும் தந்திரமாகப் பேசி தங்கள் வசதிக்கு ஏற்ப உண்மைகளை மறுப்பது என்பது அவர்களின் நிர்வாகத்தை காப்பாற்றாது.



தேசிய கல்விக் கொள்கை மீதான இந்த திடீர் நிலைப்பாடு ஏன்? தி.மு.க.,வின் அரசியல் செல்வாக்கை மீட்டெடுப்பதற்காகவே இந்த மாற்றம். தி.மு.க.,வின் இந்த பிற்போக்குத்தனமான அரசியல், தமிழ்நாட்டிற்கும் அதன் மாணவர்களின் பிரகாசமான எதிர்காலத்திற்கும் அவமானம்.


தேசிய கல்விக் கொள்கையை அரசியல் பார்வையில் பார்க்க வேண்டாம். அரசியல் ஆதாயங்களை விட தமிழ்நாட்டில் உள்ள நமது குழந்தைகளின் நலனுக்கு முன்னுரிமை கொடுங்கள். இவ்வாறு அந்தப் பதிவில் அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.

தி.மு.க.,வின் வெற்றுப் பேச்சுகள் தொடர்ந்து மற்றொரு பதிவில் தர்மேந்திர பிரதான் கூறியதாவது: மொழித்திணிப்பு மற்றும் தேசிய கல்விக் கொள்கை குறித்த தி.மு.க.,வின் சமீபத்திய கூச்சல், அக்கட்சியின் பாசாங்குத் தனத்தை வெளிப்படுத்துகிறது. தேசிய கல்விக் கொள்கை எதிர்ப்பு என்பது, தமிழ் மொழி , கலாசாரம் மற்றும் பெருமையை பாதுகாப்பதற்கு எந்தத் தொடர்பும் இல்லை. அரசியல் ஆதாயத்திற்காக தான் எதிர்க்கிறது.

தமிழ் மொழியை மேம்படுத்த போராடுவதாக தி.மு.க., கூறுகிறது. ஆனால், உண்மையில் தமிழ்மொழி, கலாசாரம் மற்றும் இலக்கிய சிந்தனைகளை ஊக்கப்படுத்தவும், மேம்படுத்தவும் எதுவும் செய்யவில்லை.

ஆனால், தரவுகளின் படி, 2018 - 19 ஆம் கல்வியாண்டில் தமிழ் வழிக்கல்வியில் 65.87 லட்சம் ஆக இருந்த மாணவர் சேர்க்கை 2023-24 ல் 46.83 லட்சமாக குறைந்துள்ளது. ஐந்து ஆண்டுகளில் 19.05 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்க்கை குறைந்துள்ளது.

67 சதவீத மாணவர்கள் ஆங்கில வழி பள்ளியில் படிக்கின்றனர். அதே நேரத்தில் தமிழ் வழியில் மாணவர் சேர்க்கை 54 சதவீதத்தில் (2018 -19) இருந்து 36 சதவீதம் (2023- 24) ஆகக் குறைந்துள்ளது.

அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழியில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை ஐந்தாண்டுகளில் 3.4 லட்சத்தில் இருந்து 17.7 லட்சமாக ஐந்து மடங்கு அதிகரித்து உள்ளது.

அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை 7.3 லட்சமாக குறைந்துள்ளது.

இது தமிழகத்தில், தமிழ் வழியில் மாணவர் சேர்க்கை தொடர்ந்து குறைந்து வருவதை காட்டுகிறது.  இது மொழி விருப்பத்தில் ஏற்பட்ட மாற்றமல்ல, காலனித்துவ மனநிலையின் மாற்றமாகும். வேலை மற்றும் அந்தஸ்துக்கு ஆங்கிலம் நுழைவு வாயிலாக கருதப்படுகிறது. இந்திய மொழிகள் பின்தங்கிய நிலையின் அடையாளமாக காணப்படுகின்றன.

தாய் மொழிக் கல்வியை ஊக்குவிப்பது என்பது தேசிய கல்விக் கொள்கையின் முக்கியமான அம்சங்களில் ஒன்றாகும். இளம் மனங்களில் விமர்சன சிந்தனையை வளர்ப்பதற்கும், இந்திய மக்கள் தொகையின் முழு திறனையும் வெளிக் கொண்டு வருவதற்கும் இது மிகவும் உறுதியான பாதையில் ஒன்றாகும்.

தேசியக் கல்விக் கொள்கை மற்றும் மொழித்திணிப்பு குறித்த தி.மு.க.,வின் வெற்றுப் பேச்சுகள் மூலம் அவர்களின் தோல்வியை மறைக்க முடியாது. தமிழகத்தின் எதிர்காலத்தை பணயம் வைத்து அதிகாரம் செலுத்துவது என்ற அவர்களின் அரசியல் திட்டம் தெள்ளத் தெளிவாக தெரிகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...