முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

குற்றவாளியுடன் கூட்டு சேர்ந்த ஒழுங்கீனக் காவல் ஆய்வாளர் பணி நீக்கம்

குற்றவாளியுடன் கூட்டு சேர்ந்த ஒழுங்கீனக் காவல் ஆய்வாளர்  பணி நீக்கம் 

திருச்சிராப்பள்ளி மாவட்டம் கானகிளியநல்லூர் காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணியாற்றிய பெரியசாமி  தொடர்ந்து பல்வேறு குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டதன் காரணமாக அவரை காவல்துறை பணியிலிருந்து நீக்கி உத்தரவிடப்பட்டது. அது தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், “குற்றம் சாட்டப்பட்ட பெரியசாமி  05.நவம்பர்.2020 ஆம் தேதி முதல் 24.ஏப்ரல்.2022 ஆம் தேதி வரை நாகப்பட்டினம் நகரக் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணிபுரிந்தார்.


அப்போது நாகப்பட்டினம் நகரக் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீச்சாங்குப்பம் கடற்கரை பழைய மீன்பிடித் துறைமுகத்தில் படகில் 400 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருள் இலங்கைக்கு கடத்துவதற்காக தயார் நிலையில் இருந்த போது தனிப்படை உதவி ஆய்வாளர் மற்றும் பார்ட்டியுடன் பறிமுதல் செய்யப்பட்டு குற்றம் சாட்டப்பட்டவரால் நாகப்பட்டினம் நகரக் காவல் நிலையத்தில் கஞ்சா கடத்தல்காரர்களைக் கைது செய்தனர். மேலும் நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தி சிறையில் அவர்கள் அடைக்கப்பட்டனர். அந்த நபர்கள் ஐந்து பேரில்  ஐந்தாவது நபரான சிலம்புச் செல்வன் (த/பெ: செந்தில்வேல்) என்பவர் கஞ்சா கடத்தலுக்கு முளையாக  செயல்பட்டுள்ளார். இந்த நிலையில் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு அவரிடமும் வாக்குமூலம் பெற்று அவரை முதல் குற்றவாளியாக வழக்கில் சேர்க்ககாமல் இருந்துள்ளார்.

ஒழுங்கீனமாக நடந்து கொண்ட காவல் ஆய்வாளர் பணி நீக்கம் செய்யப்பட்டார். 

மேலும் அவருக்கு சொந்தமான படகுகள், மற்றும் இடங்களில் தேடுதல் வேட்டை நடத்தி இந்த குற்ற வழக்கிற்கு ஆதரவாக சாட்சியங்கள் மற்றும் தடயங்களை சேகரிக்காமலும்  சிலம்புச் செல்வனை இந்தக் குற்ற வழக்கிலிருந்து காப்பாற்றும் நோக்கில் செயல்பட்டு வந்துள்ளார். மேலும் குற்ற வழக்கு தொடர்பாக பெரியசாமி தனது கடமையிலிருந்து தவறி ஒழுங்கீனமாக நடந்து கொண்டுள்ளார். இந்த  வழக்கில் சம்பந்தப்பட்டவர்கல் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா 400 கிலோ கிராம் கடத்தலுக்காக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்ட  நிலையில் அவர்களது வங்கிக் கணக்குகள் மற்றும் அசையும் அசையா சொத்துக்களை முடக்குவது தொடர்பாக எந்த விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் எதிரிகளுக்கு சாதகமாகச் செயல்படும் வகையில் நடந்து கொண்டு தனது கடமையிலிருந்து தவறியுள்ளார். இலங்கைக்கு கடத்த இருந்த 400 கிலோ கிராம் கஞ்சா போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டு குற்றம் சாட்டப்பட்டவரால் நாகப்பட்டினம் நகர காவல் நிலைய வழக்கின் எதிரிகளை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் அடைப்புக் காவல் செய்ய எந்த விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் எதிரிகளுக்கு சாதகமாக செயல்படும் வகையில் நடந்து கொண்ட குற்றம் சாட்டப்பட்டவரின் செயலானது ஒழுங்கீனமான மற்றும் கடமை தவறினார். அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா போதைப்பொருள் 20 கிலோகிராமிற்கு மேல் கண்டுபிடிக்கப்பட்டு பதிவு செய்யப்படும் குற்ற வழக்குகள் போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவுக்கு மாற்றுவது தொடர்பாக அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில் குற்றம் சாட்டப்பட்டவரால் பதிவு செய்யப்பட்ட நாகப்பட்டினம் நகர காவல் நிலைய வழக்கின் தடயப்பொருள் 400 கிலோகிராம் கஞ்சா இருந்துள்ளது. இது தெரிந்திருந்தும் மேற்படி தலைமை அலுவலக அறிவுரை படி போதை பொருள் நுண்ணறிவு பிரிவிற்கு மாற்றுவதற்கான நடவடிக்கை ஏதும் தொடராமலிருந்து தனது கடமையிலிருந்து தவறிய ஒழுங்கீனமான நடந்துள்ளார். தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநரின் அறிவுரைப்படி கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையினை முற்றிலும் ஒழிக்கும் வகையில் ஆப்ரேசன் கஞ்சா வேட்டை 20 மூலம் காவல் துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் நாகப்பட்டிணம் நகரக் காவல் நிலைய அலுவலராக இருந்த குற்றம் சாட்டப்பட்டவரால் பதிவு செய்யப்பட்ட நாகப்பட்டினம் நகர காவல் நிலைய குற்ற ஆய்வாளர் சீருடையில் தனியார் விடுதியில் ஒன்றாக அமர்ந்து குற்றம் சாட்டப்பட்டவர் உணவு சாப்பிடும் புகைப்படமானது தொலைக்காட்சி, செய்தித்தாள் மற்றும் சமூக ஊடகங்களில் வாயிலாக வெளியாகி பொது மக்கள் மத்தியில் காவல்துறையின் நன்மதிப்பை கெடுக்கும் வகையில் நடந்துள்ளார். இப்படி தொடர்ந்து பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட காவல் ஆய்வாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க காவல்துறைத் தலைவர் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர் காவல் பணியிலிருந்து முழுமையாக நீக்கப்படுகிறார்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பொது நீதி யாதெனில்:- இந்தச் செயல் அல்லது சம்பவம் நடந்து மூன்று வருடங்கள் கடந்து விட்டது. தற்போது பணி நீக்கம் என்பது வேறு ஏதோ அரசியல் காரணங்களால் நிகழ்த்தப்பட்டதாக இருக்கலாம் என்பதே பொதுமக்கள் பார்வை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...