உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கி USA அதிபர் டொனால்ட் டிரம்ப் துணை அதிபா் ஜே.டி. வான்ஸ் சந்திப்பு தோல்வி
அமெரிக்க ஐக்கிய நாடுகளின் அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் துணை அதிபா் ஜே.டி. வான்ஸை வாஷிங்டனில் வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை பிப்ரவரி மாதம். 28 ஆம் தேதி சந்தித்துப் பேசிய .
உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கி அங்கு அவா்களின் காட்டமான விமா்சனத்தை எதிா்கொண்டு பேச்சுவாா்த்தையிலிருந்து பாதியிலேயே வெளியேறிய நிலையில் உக்ரைனில் கனிம வளங்களை வெட்டி எடுத்துக்கொள்வதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்காக ஸெலென்ஸ்கி அமெரிக்காவுக்குச் சென்றார்.
அங்கு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு முன் உக்ரைனுக்காக பாதுகாப்பு உத்தரவாதத்தை உறுதிப்படுத்த வேண்டுமென ஸெலென்ஸ்கி கேட்டுக்கொண்டார்.
இந்த விவகாரத்தில் அமெரிக்காவுக்கு நிபந்தனைகள் விதிக்கும் நிலையில் உக்ரைன் இல்லை எனவும் தாங்கள் சொல்வதைக் கேட்டு கனிம ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதைத் தவிர ஸெலென்ஸிக்கு வேறு வழியில்லை எனவும் டொனால்ட் டிரம்ப்பும் ஜே.டி. வான்ஸும் கூறினா்.
தங்களை மறுத்து பேசுவதன் மூலம் அமெரிக்காவை ஸெலென்ஸ்கி அவமதிப்பதாகவும் டொனால்ட் டிரம்ப் குற்றஞ்சாட்டினாா்.
இந்த காரசார விவாதத்தின் விளைவாக, தங்கள் நாட்டு கனிம வளங்களை வெட்டியெடுக்கும் உரிமையை அமெரிக்காவுக்கு அளிப்பதற்கான வரைவு ஒப்பந்தத்தில் கையொப்பமிடாமலேயே ஓவல் அலுவலகத்தை விட்டு ஸெலென்ஸ்கி வெளியேறியதைத் தொடர்ந்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு ஸெலென்ஸ்கி பதிலளித்தார். அதில், டொனால்ட் டிரம்ப்பை சந்திக்க வரும்போது ஏன் கோட் அணியவில்லை என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில்.
அதற்கு பதிலளித்த ஸ்லெலென்ஸ்கி, ’’எங்கள் நாட்டின் நீடித்துவரும் போர் முடிவுக்கு வந்திருந்தால் கோட் அணிந்து வந்திருப்பேன் எனவும், அதுவரை அதுபோன்ற ஆடம்பரமான உடைகளை அணிவதில்லை’’ எனப் பதிலளித்தார்.
’’எங்கள் நாட்டில் போர் முடிவுக்கு வந்தால் உங்கள் உடைகளை விட ஆடம்பரமான உடைகளை அணிவேன்’’ எனவும் குறிப்பிட்டார்
கருத்துகள்