முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஏப்ரல், 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பாகிஸ்தானுக்கு பதிலடி தருவதில் இந்திய முப்படைகளுக்கு முழு சுதந்திரம்: பிரதமர் உறுதி

பாகிஸ்தானுக்கு பதிலடி தருவதில் இந்திய முப்படைகளுக்கு முழு சுதந்திரம்: பிரதமர் நரேந்திர மோடி உறுதி பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடி தருவதற்கான உயர்மட்ட ஆலோசனை கூட்டம், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டில்லியில் இன்று நடந்த கூட்டத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான், முப்படை தளபதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பேசிய நரேந்திர மோடி, எதிரிகள் மீது எந்த இடத்தில், எந்த நேரத்தில் எந்த     இலக்குகள் மீது தாக்குதல் நடத்துவதில் முப்படைகள், தாங்களே முடிவு செய்து கொள்ளலாம் என்றார். இன்று டில்லியில் உள்துறை அமைச்சகத்தில் பாதுகாப்பு தொடர்பான முக்கியக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், மத்திய உள்துறை செயலாளர் கோவிந்த் மோகன்,எல்லைப் பாதுகாப்புப் படை, அசாம் ரைபிள்ஸ் மற்றும் தேசிய பாதுகாப்புப் படையின் இயக்குநர் ஜெனரல்கள், மற்றும் மத்திய ரிசர்வ் காவல் படை மற்றும் மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையின் மூத்த அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து டில்லியில் ...

காஞ்சிபுரம் சங்கர மடம் சந்யாச ஸ்வீகார மஹோத்ஸவம்.

காஞ்சிபுரம் சங்கர மடத்தில் சன்யாச ஸ்வீகர மஹோத்ஸவம்- சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிஜியின் சந்யாச ஸ்வீகார மஹோத்ஸவம். சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள்! காஞ்சி சங்கர மடத்தின் இளைய மடாதிபதியாக, கணேச சர்மா பொறுப்பேற்றார். அவருக்கு காஞ்சி மடாதிபதி ஜகத்குரு சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், சன்யாச தீட்சை வழங்கினார். காஞ்சி சங்கர மடத்தின் இளைய பீடாதிபதியாக பொறுப்பேற்றுள்ள கணேச சர்மாவுக்கு, சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி என்று, பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பெயர் சூட்டினார். பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், இளைய பீடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆகியோர் இணைந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினர்.     அட்சய திருதியை என்பது ஹிந்துக்கள் மற்றும் சமணர்களின் புனித நாள். சித்திரைத் திங்கள் வளர்பிறையில் அமாவாசைக்கு அடுத்த மூன்றாம் நாளாகிறது. முதல் யுகமான கிருத யுகத்தில் உலகம் தோற்றுவித்த நாள். அட்சய திருதியை துறவறத்துடன் நேரடியாகத் தொடர்புடையது அல்ல,இன்றைய தினத்தோடு கணேஷ சர்மா டிராவிட் என்ற நாமம் போய் விடும். இன்றோடு ...

பி எஸ் ஏ புதுமை சிறப்பு குறிகாட்டிகளின் மதிப்பீடு' (சுற்று 2) குறித்த மைல்கல் அறிக்கை வெளியீடு

பொது நிதியுதவி பெறும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்களின் புதுமை சிறப்பு குறிகாட்டிகளின் மதிப்பீடு' (சுற்று 2) குறித்த மைல்கல் அறிக்கையை முதன்மை அறிவியல் ஆலோசகர் வெளியிட்டார். இந்திய அரசாங்கத்திற்கான முதன்மை அறிவியல் ஆலோசகர் அலுவலகம் (PSA) இன்று "பொது நிதியளிக்கப்பட்ட ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்களின் புதுமை சிறப்பு குறிகாட்டிகளின் மதிப்பீடு" என்ற தலைப்பில் (சுற்று 2) ஆய்வு அறிக்கையை வெளியிட்டது , இது இந்தியாவின் பொது நிதியளிக்கப்பட்ட ஆராய்ச்சி சுற்றுச்சூழல் அமைப்பு முழுவதும் புதுமை செயல்திறனை தரப்படுத்துதல் மற்றும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. இந்திய தொழில்துறை கூட்டமைப்பு (CII) மற்றும் தொழில்நுட்பம், புதுமை மற்றும் பொருளாதார ஆராய்ச்சி மையம் (CTIER) ஆகியவை இந்த ஆய்வுக்கு அறிவு கூட்டாளர்களாக பணியாற்றி, மதிப்பீட்டு கட்டமைப்பை வலுப்படுத்த தங்கள் நிபுணத்துவத்தை பங்களித்தன. புது தில்லியில் இன்று நடைபெற்ற 15 வது CII உலகளாவிய கண்டுபிடிப்பு மற்றும் IP உச்சி மாநாடு 2025 இன் போது, ​​இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் பேராசிரியர் அஜய் குமார் சூட் இந்த அறிக...

சிலை கடத்தல் வழக்கில் ஓய்வு ஐஜி பொன்.மாணிக்கவேலுவை சிபிஐ விசாரிக்க தடை நீக்கம் செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு

சிலைக்கடத்தலில் ஓய்வு பெற்ற காவல் துறை ஐ.ஜி. பொன் மாணிக்க வேலுக்கு எதிரான  CBI விசாரணைக்கு உயர் நீதிமன்றம் விதித்த தடையை உச்ச நீதிமன்றம் நீக்கியது. சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் பொன் மாணிக்கவேல். அவர் அதே பிரிவில் துணைக் கண்காணிப்பாளராகப் பணியாற்றிய காதர் பாட்ஷா மீது நடவடிக்கை எடுத்திருந்தார். இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் காதர் பாட்ஷா தாக்கல் செய்த வழக்கை விசாரித்த  உயர்நீதிமன்றம், பொன் மாணிக்கவேலுக்கு எதிரான CBI விசாரணைக்குத் தடை விதித்து உத்தரவிட்டது. அதை எதிர்த்து காதர் பாட்ஷா உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத் – சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்த போது, “இந்த வழக்கில் CBI விசாரணை தொடர்ந்தாலும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தடை விதிக்க வேண்டும்” என பொன் மாணிக்கவேல் தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை வைத்த போது அதற்கு நீதிபதிகள், ”உங்கள் மீது தவறில்லை என்றால், ஏன் குற்றப்பத்திரிகைக்கு தடை விதிக்கக் கோருகிறீர்கள்?” எனக் கேள்வி எழுப்பினர். ”த...

பாராளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை கூட்ட பிரதமருக்கு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடிதம்

காஷ்மீர் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து விவாதிக்க பாராளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை கூட்ட பிரதமர் நரேந்திர மோடிக்கு பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் தனித்தனியாக கடிதம் எழுதி உள்ளனர். அதில் பயங்கரவாதத் தாக்குதல் பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. மக்கள் கொந்தளித்து போய் இருக்கிறார்கள். எனவே இது தொடர்பான விவாதம் தேவை பாராளுமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்டுக என்று இவர்கள் கூறியுள்ளனர். நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்ட வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடிதம் அனுப்பியுள்ளார். ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த 22 ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டண்ட் பிரண்ட் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இச்சம்பவம் நாடு முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பல்வேறு தடை ந...

கடனை வலுக்கட்டாயமாக வசூலித்தால் ஐந்தாண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூபாய்.5 லட்சம் அபராதம் மாநிலத்தின் புதிய சட்டம்

கடனை கட்டாயப்படுத்தி வலுக்கட்டாயமாக வசூலித்தால்  ஐந்தாண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூபாய்.5 லட்சம் அபராதம் விதிக்க வகைசெய்யும் மசோதாவை சட்டப்பேரவையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்தார். இந்த மசோதா இன்று 29-ம் தேதி நிறைவேற்றப்பட்டது. கடன்களை வசூலிக்க சட்டவிரோத கந்து வட்டி செயல்பாடுகளில் ஈடுபடுவோருக்கு சிறை தண்டனை விதிக்க வகைசெய்யும் மசோதாவை சட்டப்பேரவையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தாக்கல் செய்தார். மசோதாவில்  பணக் கடன் வழங்குவோர் மற்றும் அடகுக் கடைகள் உரிமம் மூலம் தொழிலை ஒழுங்குமுறைப்படுத்தி, கடும் வட்டியில் இருந்து மக்களை காப்பதில் முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு விளங்குவதாகவும் தமிழ்நாடு அடகு கடைக்காரர்கள் சட்டம்-1943, தமிழ்நாடு பணக் கடன் வழங்குவோர் சட்டம்-1957, தமிழ்நாடு கந்துவட்டி தடை சட்டம்-2003 ஆகியவற்றை அரசு இயற்றியுள்ளது. ஆனாலும், பொருளாதாரத்தில் பின்தங்கிய, நலிந்த பிரிவினர், குறிப்பாக சிறு விவசாயிகள், விவசாயக் கூலித் தொழிலாளர்கள், மகளிர் சுயஉதவிக் குழுவினர், பணியாளர்கள், நடைபாதை வியாபாரிகள், பால் பண்ணைத் தொழிலாளர்கள், கட்டிடப் பணியாளர்கள், புலம...

மதுரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலய சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது

மதுரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலய சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது  உலகப் புகழ்பெற்ற பாண்டிய நாட்டின் பேரரசி மதுரை ஸ்ரீ மீனாட்சி அம்மன் சுந்தரேசுவரர் கோவிலின் சித்திரைத் திருவிழா இன்று ஏப்ரல் மாதம்.29-ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி மே மாதம் 10-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. முதல் நாளான இன்று கொடியேற்றத்தை முன்னிட்டு சுவாமி சன்னதி முன்புள்ள கொடிமரத்தைச் சுற்றியுள்ள கம்பத்தடி மண்டபம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. சுவாமி சன்னதியிலிருந்து ஸ்ரீ மீனாட்சி அம்மன், பிரியாவிடை சுந்தரேசுவரர் தனித்தனியாக வெள்ளி சி்ம்மாசனத்தில் சுவாமி சன்னதி முன்புள்ள கம்பத்தடி மண்டபத்தில் தங்கக் கொடிமரம் முன்பு வெள்ளி சிம்மாசனத்தில் காலை 10.35 மணியளவில் எழுந்தருளினர். யாகசாலை அமைத்து வேதமந்திரங்கள் முழங்க பூஜைகள் நடைபெற்றது. பின்னர் காலை 10.48 மணியளவில் தங்கக் கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. பின்னர் தர்ப்பைப்புல், மலர்களால் கொடிமரம் அலங்கரிக்கப்பட்டது. பின்னர் கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. கொடிமரத்தின் மேலிருந்து மலர்கள் தூவினர். இதில் அறங்காவலர் குழுத் தலை...