முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழ்நாடு அரசு சட்டமன்றப் பேரவையில் மீண்டும் நிறைவேற்றி அனுப்பிய 10 மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளித்தது உச்சநீதிமன்றம்

தமிழ்நாடு அரசு சட்டமன்றப் பேரவையில் மீண்டும் நிறைவேற்றி அனுப்பிய 10 மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளித்தது உச்சநீதிமன்றம்.


குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பி வைத்த 10 மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளிப்பதாக 

உச்சநீதிமன்றத்திற்கு சிறப்பு அதிகாரங்கள் வழங்கும் சட்டப்பிரிவு 142 ன் படி உச்சநீதிமன்றம் உத்தரவு . 

"எங்களுக்கு இதை விட்டால் வேறு வழி தெரியவில்லை” என குறிப்பிட்டு மசோதாக்களுக்கு உடனடி ஒப்புதல் வழங்கியது. 



தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களை ஆளுநர் நிறுத்தி வைத்தது சட்டவிரோதம்.

ஆளுநர் தன்னிச்சையாக செயல்பட முடியாது;       மாநில அரசின் ஆலோசனைப்படியே செயல்பட வேண்டும் - உச்சநீதிமன்றம்.

பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்திருக்க வேண்டும்.

மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பியது சட்டவிரோதம்.





மசோதாக்கள் மாற்றப்பட்டிருந்தால் மட்டுமே குடியரசுத் தலைவருக்கு அனுப்ப முடியும், தமிழ்நாடு அரசு  தொடந்த வழக்கில் உச்ச நீதிமன்றம். உத்தரவு. ஆளுநர் திருப்பி அனுப்பி, இன்று நீதிமன்றத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள 10 மசோதாக்களின் விவரம் ~ 


1) சென்னை பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதா,

2) தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக திருத்த மசோதா

3) தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதா

4) தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதா

5) தமிழ்நாடு அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக திருத்த மசோதா

6) தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதா

7) தமிழ் பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதா

8) தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக மசோதா

9) அண்ணா பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதா

10) அத்துடன் தமிழ்நாட்டில் புதிதாக சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைப்பதற்கான சட்டத் திருத்த மசோதாவாகும்




அரசியலமைப்பு சாசனம் 200-வது பிரிவின் படிதான் ஆளுநர் செயல்பட வேண்டும். அரசியலமைப்பு படியே ஆளுநர் ர் செயல்பட வேண்டுமே தவிர அரசியல் சார்போடு செயல்படக்கூடாது. மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது குறித்து ஆளுநர்கள் ஒரு மாதத்திற்குள் முடிவெடுக்க வேண்டும். இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.கவர்னருக்கு என தனிப்பட்ட (VETO) அதிகாரமில்லை. பொதுவான விதியின் படி, மாநில அரசின் ஆலோசனைகள் மற்றும் பரிந்துரையின்படியே ஆளுநர் செயல்பட முடியும்.  ஆளுநர் தனது விருப்பப்படி செயல்பட முடியாது,




அதற்கு அரசியலமைப்பு இடமளிக்கவில்லை. தமிழ்நாடு ஆளுநர் செயல்பாடுகள் அரசியலமைப்பு சட்டப்படி வரையறுக்கப்பட்ட நோக்கத்துக்கு எதிரானதாக உள்ளது. இந்த நிலையில் பல்கலைக்கழக வேந்தர் பதவியிலிருந்து ஆளுநர் விடுவிக்கப்பட்டிருப்பதாக திமுகவின் மூத்த வழக்கறிஞரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வில்சன் கூறியுள்ளார். இதையடுத்து 

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய சட்டமுன்வடிவுகளுக்கு ஆளுநர்  ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைத்திருந்தது சட்டவிரோதமானது; அந்தச் சட்டமுன்வடிவுகளுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கப்பட்டதாகக் கருதப்பட வேண்டுமென்றும்உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது குறித்து சட்டமன்றப் பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்தோடு உரையாற்றினார். இந்த நிலையில்           சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று திமுக மூத்த வழக்குரைஞர் வில்சன் செய்தியாளர்களைச் சந்தித்தார்,   அப்போது உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து விளக்கமளித்தார்."வேந்தர் பதவியில் இனி ஆளுநர் நீடிக்க வேண்டிய அவசியமில்லை. பல்கலைக்கழக வேந்தர் பதவியிலிருந்து ஆளுநர் நீக்கப்பட்டார். இனி, பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர்களை நியமிப்பதில் தமிழ்நாடு அரசுக்கே அதிகாரம் கிடைத்திருக்கிறது. மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர் காலம் தாழ்த்தக் கூடாது எனவும், மீண்டும் அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஒரு மாதத்தில் ஒப்புதல் அளிக்க வேண்டும் என தீர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

மேலும், சென்னை அருகே புதிய சித்த மருத்துவப் பல்கலைக்கழகம். அமைக்கும் மசோதாவுக்கும், தமிழ்நாடு மீன் வளப் பல்கலைக்கழகத்தை ஜெ. ஜெயலலிதா பல்கலைக்கழகம். என பெயர் மாற்றம் செய்யும் மசோதாவுக்கும் தற்போது ஒப்புதல் கிடைக்கப்பெற்றுள்ளது" என வில்சன் கூறினார்.                     


ஒரு மாநில அரசு அரசியலமைப்பு  சட்டத்திற்க்கு விரோதமான தீர்மானங்களை சட்டமன்றத்தில் இயற்றும் போது ஒரு ஆளுநராக ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைக்கும் போது அதே ஒரு மாநில ஆளுநருக்கு எதிராக அந்த சட்டவிரோத தீர்மானத்திற்க்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளிக்குமானால் அந்த மாநிலத்திற்க்கு ஆளுநர் என்பவர் எதற்கு எல்லாத்தையும் உச்ச நீதி மன்றமே செல்படுத்தலாமென்றால் மத்தியிலும், மாநிலத்திலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக அரசுகள் எதற்கு என்பதுதான் தற்போது அரசியல் கட்சிகள் மத்தியில் எழும் கேள்வியாக உள்ளது? மாநில ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி ஏற்றதிலிருந்து நிர்வாக ரீதியிலான மசோதாக்கள் 48 க்கு ஒப்புதல் வழங்கியுள்ளார், 3 மசோதாக்கள் ஜனாதிபதியின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது


தேங்கி இருந்து தற்போது உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு வந்த பத்து மசோதா ( 11 ல்) மசோதாக்கள் அனைத்தும் பல்கலைக்கழகங்களின் வேந்தர் உரிமை மற்றும் துணை வேந்தர்கள் நியமனம் குறித்துத் தான், இது UGC வகுத்துள்ள விதிகளின் படி தான் நிறுத்தப்பட்டுள்ளது, இதில் சட்ட மீறல் எதுவும் இல்லை என விவாதம் வந்ததா? என்பதும் அல்லது பிரிவு 142 ன் படி மட்டுமே 
தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில் ஆளுநரிடம் விளக்கம் அவர் தரப்பில்  கேட்ட விபரம் என்ன என்பதை இனி அரசியல் சாசன அமர்வுக்கு இந்த வழக்கில் மேல்முறையீடு செய்யப்படுமா ? என்பது குறித்தும் தகவல் வந்தால் தான் தெரியும் இதுவரை விபரம் தெரியவரவில்லை.  

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...