பத்ம விருதுகள் 2025 அறிவிக்கப்பட்டு தமிழ்நாட்டில் 3 பேர் பத்ம பூஷன் விருதும் 10 பேர் பத்மஸ்ரீ விருதும் பெற்றனர்.
அமராவதி திரைப்படம் மூலம் அறிமுகமாகி தமிழ் திரையுலகில் தனக்கென தனி இடம் பிடித்தது, கார் பந்தயம், துப்பாக்கிச் சுடுதல், பைக் சுற்றுப்பயணம் என தனக்குப் பிடித்த துறைகளிலும் தனி முத்திரை பதித்து, இன்று கலைத்துறையில் பெரும் சாதனைகள் படைத்ததற்காக மத்திய அரசின் உயரிய விருதான பத்ம பூஷண்
நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள் பத்ம விபூஷண், பத்ம பூஷண் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய மூன்று பிரிவுகளில் வழங்கப்படுகின்றன. கலை, சமூகப்பணி, பொது நலன், அறிவியல் மற்றும் பொறியியல், வர்த்தகம் மற்றும் தொழில், மருத்துவம், இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, மக்கள் சேவை போன்ற பல்வேறு துறைகளில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. சிறப்பான சேவைக்காக 'பத்ம பூஷண்' விருதும் எந்தவொரு துறையிலும் சிறப்பான சேவைக்கு 'பத்மஸ்ரீ' விருதும் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் குடியரசுத் தினத்தன்று இந்த விருதுகள் அறிவிக்கப்படுகின்றன.
இந்த விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் வழக்கமாக மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் விழாவில் குடியரசுத் தலைவரால் வழங்கப்படுகின்றன. 2025-ஆம் ஆண்டிற்கான 139 பத்ம விருதுகளை வழங்க குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்து இன்று வழங்கினார். 7 பேருக்கு பத்ம விபூஷண், 19 பேருக்கு பத்ம பூஷண், 113 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. விருது பெற்றவர்களில் 23 பேர் பெண்கள், இந்த பட்டியலில் வெளிநாட்டினர் மற்றும் வெளிநாடுவாழ் இந்தியர் மற்றும் பிஐஓ மற்றும் ஓசிஐ பிரிவைச் சேர்ந்த 10 பேர் மற்றும் மரணத்திற்குப் பின் விருது பெறும் 13 பேரும் அடங்குவர்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த நல்லி குப்புசாமி செட்டிக்கு வர்த்தகம் மற்றும் தொழில்துறை பிரிவிலும் நடிகர் ஏ அஜித்குமார், ஷோபனா சந்திரகுமார் ஆகியோருக்கு கலைப் பிரிவிலும் பத்மபூஷன் விருதுகள் அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டது.
கலைக்கான பத்மஸ்ரீ விருது தமிழ்நாட்டைச் சேர்ந்த புரிசை கண்ணப்ப சம்பந்தம், குருவாயூர் துரை, ராதாகிருஷ்ணன் தேவசேனாபதி, வேலு ஆசான் புதுச்சேரியைச் சேர்ந்த பி. தட்சிணாமூர்த்தி ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. இலக்கியம், கல்வி, இதழியல் பிரிவில் தினமலர் லட்சுமிபதி ராமசுப்பையர், சமையல் பிரிவில் தாமு என்ற கே தாமோதரன், அறிவியல் மற்றும் பொறியியல் பிரிவில் எம் டி ஸ்ரீனிவாஸ், விளையாட்டுகள் பிரிவில் ஆர் அஸ்வின், வர்த்தகம் மற்றும் தொழில்துறை பிரிவில் ஆர் ஜி சந்திரமோகன், இலக்கியம் மற்றும் கல்விப் பிரிவில் சீனி விஸ்வநாதன் ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
நடிகர் அஜித் குமார் குடியரசுத் தலைவரிடமிருந்து பத்ம பூஷண் விருதைப் பெற்றுக்கொண்டார்.
2025-ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிப்பை மத்திய அரசு கடந்த ஜனவரி மாதம். 25 ஆம் தேதி வெளியிட்டதன்படி நிகழாண்டில் 7 போ் பத்ம விபூஷண் விருதுக்கும், 19 போ் பத்ம பூஷண் விருதுக்கும், 113 போ் பத்மஸ்ரீ விருதுக்கும் தோ்வாகினர். தமிழ்நாட்டில் நடிகா் அஜித் குமாா், நடிகை ஷோபனா, நல்லி குப்புசாமி செட்டி ஆகிய மூவருக்கு பத்ம பூஷண் விருதும், பாரதி ஆய்வாளா் சீனி விஸ்வநாதன் உள்பட 10 பேருக்கு பத்மஸ்ரீ விருதும் என மொத்தம் 13 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், டில்லி குடியரசுத் தலைவா் மாளிகையில் இன்று விருதுகள் வழங்கப்பட்டன. நிகழ்வில், குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு நடிகர் அஜித் குமாருக்கு பூத்ம பூஷண் விருதை வழங்கினா்
தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 பேருக்கு பத்ம ஸ்ரீ விருது
குருவாயூர் துரை (கலை)
தாமு என்ற கே.தாமோதரன் (சமையல் கலை)
லட்சுமிபதி ராமசுப்பையர் (இலக்கியம் - கல்வி - இதழியல்)
எம்.டி.ஸ்ரீனிவாஸ் (அறிவியல் - பொறியியல்)
புரசை கண்ணப்ப சம்பந்தன் (கலை)
ரவிச்சந்திரன் அஸ்வின் (விளையாட்டு - கிரிக்கெட்)
ஆர். ஜி. சந்திரமோகன் - (தொழில்துறை)
ராதாகிருஷ்ணன் தேவசேனாதிபதி (கலை)
ஸ்ரீனி விஸ்வநாதன் (இலக்கியம் - கல்வி)
வேலு ஆசான் (கலை, பறை இசை)இதேபோன்று தொழில் துறையில் குஜராத்தைச் சேர்ந்த பங்கஜ் பட்டேல், கலைத் துறையில் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த சேகர் கபூர், கர்நாடகத்தைச் சேர்ந்த இசைக் கலைஞர் லக்ஷ்மிநாராயணா சுப்ரமணியம் உள்ளிட்டோர் பத்ம பூஷண் விருதைப் பெற்றுக்கொண்டனர்.
கேரளத்தைச் சேர்ந்த ஹாக்கி வீரர் பி.ஆர். ஸ்ரீஜேஸுக்கு பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது. ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணாவுக்கும் பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது.
இசைத் துறையில் ரிக்கி கேஜ், அர்ஜித் சிங் உள்ளிட்டோருக்கும் பத்ம ஸ்ரீ வழங்கப்பட்டது.
கடந்த ஆண்டு உயிரிழந்த பங்கஜ் உத்தாஸுக்கு அவரின் மறைவுக்குப் பிறகு கெளரவம் வழங்கப்பட்டது. அவருக்கு அறிவிக்கப்பட்ட பத்ம பூஷண் விருதை அவரின் மனைவி பெற்றுக்கொண்டார்.தமிழ்நாடு அணிக்காக ரஞ்சி கோப்பையில் விளையாடியதன் மூலம் தனது கிரிக்கெட் பயணத்தைத் துவங்கிய அஸ்வின், டெஸ்ட் போட்டிகளில் அதிக முறை தொடர் நாயகன் விருதைப் பெற்ற கிரிக்கெட் வீரர் என்ற பெருமையுடனும், இதுவரை அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது இந்திய பந்து வீச்சாளர் என்ற சிறப்புடனும் இன்று நாட்டின் அதி முக்கிய அங்கீகாரமான பத்மஸ்ரீ விருதினைப் பெற்றுள்ளார். புகழ்பெற்ற வேத அறிஞரான கணேஷ்வர் சாஸ்திரி டிராவிட், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் இருந்து பத்மஸ்ரீ விருதைப் பெற்றார். அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம ஜென்மபூமி கோவில் மற்றும் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலின் பூமி பூஜை மற்றும் பிரான் பிரதிஷ்டைக்கான நல்ல நேரத்தை அவர் தான் முடிவு செய்தார்.
கருத்துகள்