ஜம்மு காஷ்மீர் பெகல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 27 பேர் பலி.
உள்துறை அமைச்சர் அமித்ஷா சம்பவ இடத்திற்கு விரைந்தார்
இராணுவம் மிக தீவிரமாக தீவிரவாதிகளைத் தேடுகிறது. காஷ்மீரின் பஹல்காம் பகுதியின் காஷ்மீரில் '27' அப்பாவி சுற்றுலா சென்ற மக்கள் பாக்கிஸ்தான் பயங்கரவாதிகளால் கொள்ளபட்டுள்ளனர்.
பலி மேலும் அதிகரிக்கும் எனத் தகவல் பைசாராம் பகுதியில் 40க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் கூடியிருந்த போது, அங்கு வந்த பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் 2 அல்லது 3 பேர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், 27 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.கர்நாடகாவைச் சேர்ந்த பல்லவி என்பவர் தெரிவித்த போது "கணவர் மஞ்சுநாத், மகன் உடன் சுற்றுலா சென்றோம். பயங்கரவாதிகள் தாக்குதலில் எங்கள் கண் முன்னர் கணவர் உயிரிழந்தார். என்னையும் கொன்று விடும்படி கூறியபோது, உன்னைக் கொல்ல முடியாது. போய் மோடியிடம் கூறு என்றனர். எங்களை உள்ளூர் மக்கள் தான் காப்பாற்றினர்" என பகுதி பத்திரிகைமாளரிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, உள்துறை அமைச்சர் அமித் ஷா தனி விமானம் மூலம் காஷ்மீர் புறப்பட்டார்.
இந்தத் தாக்குதலுக்கு, பாகிஸ்தானைத் தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) எனும் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
அமெரிக்காவின் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் வந்துள்ள நிலையில், நடத்தப்பட்டுள்ள இந்தத் தாக்குதல், ஒரு திட்டமிட்ட தாக்குதலாகக் கருதப்படுகிறது. பயங்கரவாதிகளின் தாக்குதலைத் தடுக்கவே காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் 10,000 ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டனர் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் காஷ்மீரில் மிகப்பெரிய தாக்குதலை நடத்தத் திட்டம் என்ற உளவுத்துறையின் தகவலையடுத்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆலோசனை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் 30 கிலோ மீட்டர் தூரம் உள்ளே சென்று பயங்கரவாதிகள் முகாம்களை இந்திய ராணுவம் தாக்கி முற்றிலுமாக அழித்தது. பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 27 அப்பாவி இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர். படுகாயம் அடைந்தவர்கள் ஐவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும், பாதிக்கப்பட்டவர்கள் தமிழ்நாடு, கர்நாடகா, குஜராத், மஹாராஷ்ட்ரா மாநிலத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் என்றும் தகவல் வருகிறது.
1947 ஆம் ஆண்டில் இந்தியா சுதந்திரம் பெற்றபோது, காஷ்மீர் மாநிலத்தை இணைப்பதில் பல்வேறு பிரச்சினைகள் எழுந்தன. அந்த மாநிலத்தில் வாழ்கிற 80 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட மக்கள் இஸ்லாமியர்களாக இருந்ததால் அந்த பகுதி பாகிஸ்தானுடன் இணைவதா ? இந்தியாவுடன் இணைவதா ? என்ற சிக்கலான நிலைமை ஏற்பட்டது. இந்தச் சூழலில் முதல் பிரதமர் ஜவகர்லால் நேருவோடு பணியாற்றிய ஷேக் அப்துல்லா காஷ்மீர் மாநிலத்தை இந்தியாவுடன் இணைக்க வேண்டுமென்று விரும்பினார். முஸ்லிம் நாடான பாகிஸ்தானுடன் இணைய அவர் விரும்பவில்லை. அப்போது காஷ்மீரை இந்தியாவுடன் இணைப்பதற்கு முக்கிய காரணமாக இருந்தது அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்கும், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஷேக் அப்துல்லாவுக்கும் இடையே இருந்த நட்பு தான். அந்த நட்பின் காரணமாகவே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, பிரிவு 370 அரசமைப்புச் சட்டத்தில் சேர்க்கப்பட்டு, சிறப்புச் சலுகையுடன் காஷ்மீர் மாநிலம் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.
இந்தியாவுடன் காஷ்மீர் இணைந்த பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சியில் பிரிவு 370-ஐ ரத்து செய்து, அந்த மாநிலத்தை அம்மாநில மக்களின் ஒப்புதல் உள்ளதாக மூன்று பிரிவுகளாகப் பிரித்தது.
இந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370 ஐ ரத்து செய்யும் போது பாஜக 'காஷ்மீர் பைல்ஸ்' என்கிற திரைப்படம் தயாரிக்கப்பட்டு, வெளியிடப்பட்டது. பிரிவு 370 ஐ ரத்து செய்வதன் மூலம் தீவிரவாத தாக்குதல்கள் குறையும் என்றனர். ஆனால் இன்று நிலைமை ?
அதிகரிக்கும் தீவிரவாதத் தாக்குதல்களுக்கு என்ன பதில் கூறப்போகிறார்கள்? மீண்டும் சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பான இடம் என காஷ்மீரில் கருதப்பட்ட பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் , பயணிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தி
27 க்கும் மேற்பட்ட நபர்கள் கொல்லப்பட்டனர்!காஷ்மீர் மாநிலம், பகல்காம் பகுதியிலிருந்து சுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் மலையின் உச்சியில் உள்ள பிரசித்தி பெற்ற புல்வெளி உலக அளவில் போற்றப்படும் சுற்றுலாத்தலமான சுவிட்சர்லாந்துக்கு ஒப்பானது ஆகும். கோடை விடுமுறை என்பதால் இந்திய நாடெங்கெங்கிலும் இருந்து காஷ்மீர் பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் திரளாகச் செல்கின்றனர். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இன்று தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25-க்கும் மேற்பட்ட நிராயுதபாணிகளான சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்து உள்ளதாகவும்; எண்ணற்றோர் காயமற்றுள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன. சுற்றுலாப் பயணிகளைச் சுற்றி வளைத்து ஆடவர் ஆடைகளை அகற்றி, இந்து என அடையாளம் கண்ட பின்னரே கொன்றிருக்கிறார்கள். இது கொடூரத்தின் உச்சக்கட்டம்; மனிதநேயமற்ற செயல்; முழுக்க முழுக்க மத ரீதியான தாக்குதல். தீவிரவாதிகளின் கொடுஞ்செயல்
அமெரிக்க துணை ஜனாதிபதி வான்ஸ் இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள நேரத்தில்
பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகள் ISI, Lasker e Teiba எனும் தீவிரவாதிகளை அனுப்பி இந்தக் கோரச் செயலை நடத்தியுள்ளது!
இந்தியாவின் காஷ்மீரில் அமைதி திரும்பவில்லைன்னு அமெரிக்காவுக்கு காட்டிட இந்த தாக்குதலை நடத்தியிருக்கிறது!ஜம்முவில் நடந்த தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தோர் மற்றும் காயமடைந்தோர் விபரம் வெளியீடு
16 நபர்கள் இறந்தனர் எனவும் 10 நபர்கள் காயமடைந்தனர் எனவும் தகவல் வந்துள்ளது
முழு அமைதிக்கு காஷ்மீர் மீண்டும் திரும்பிட மக்கள் மத்தியில் வேண்டுதல்கள் அதிகம்.
கருத்துகள்