உலகின் ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் 266 ஆம் திருத்தந்தை போப் பிரான்சிஸ் காலமானார்
தென் அமெரிக்காவிலிருந்து தேர்வு செய்யப்பட்ட முதல் போப் என்ற பெருமைக்குரியவரான ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் உடல் நலக் குறைபாடு காரணமாக நீண்ட நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார்
கத்தோலிக்க திருச்சபையின் தலைமை மதகுருவான போப் பிரான்சிஸ் அவர்கள் முதுமை மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார் என்ற செய்தியறிந்து உலகெங்கும் வாழும் கிருஸ்தவ மக்கள் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தனர்
அர்ஜென்டினாவைச் சேர்ந்த போப் பிரான்சிஸ் அவர்கள் தென் அமெரிக்காவிலிருந்து தேர்வு செய்யப்பட்ட முதல் போப் ஆண்டவர் என்ற பெருமையுடையவர். உலகில் அமைதி நிலவ வேண்டும் என்பதில் அக்கறை கொண்ட போப் பிரான்சிஸ், தமது 12 ஆண்டு பதவிக்காலத்தில் உலகில் அமைதியை ஏற்படுத்த ஏராளமான முயற்சிகளை மேற்கொண்டவர்.
ஈஸ்டர் திருநாளை யொட்டி, நேற்று செயின்ட் பீட்டர் சதுக்கத்தில் மக்களுக்கு ஆசி வழங்கினால் போதும் உலகில் போர்கள் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும்; அமைதி நிலை நிறுத்தப்பட வேண்டும் என்று தான் வேண்டினார். போப் பிரான்சிஸ் அவர்களின் மறைவு உலகின் பல நாடுகளில் பெரும் இழப்பாகும்.
கருத்துகள்