முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அமைச்சர் பதவியா அல்லது ஜாமீனா என்பது குறித்து ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி தெரிவிக்கும் படி உச்சநீதிமன்றம் அவகாசம்

தற்போது தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் இரத்து செய்யக் கோரிய உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நீதிபதிகள் அபய் எஸ் ஓகா, மாசிக் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.



அமைச்சர் செந்தில்பாலாஜி தரப்பில், சட்டப்பூர்வமாக ஜாமீன் கிடைத்த பிறகு தான் அமைச்சராகப் பொறுப்பு ஏற்றார், உச்ச நீதிமன்றம் விதித்த எந்த ஜாமீன் நிபந்தனையையும் அவர் மீறவில்லை என்று மூத்த வழக்கறிஞர் மூலம் இறுதி வாதம் வைக்கப்பட்டது.


அதற்கு நீதிபதிகள், செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பதவி வேண்டுமா? அல்லது ஜாமீன் வேண்டுமா? எனக் கேள்வி எழுப்பினர். மேலும், அதிகாரத்தைப் பயன்படுத்தி சாட்சியங்களைக் கலைக்க மாட்டார் என எப்படிக் கூற முடியும் என்றும், மெரிட் அடிப்படையில் ஜாமீன் வழங்கவில்லை. அரசியலமைப்புப் பிரிவு 21 ஐ மீறியதால் ஜாமீன் அளித்தோம் எனத் தெரிவித்தனர். ஜாமீன் வழங்கும் போது அமைச்சராக பதவி ஏற்க அனுமதி வழங்கவில்லை எனவும் நீதிபதிகள் விளக்கமளித்தனர்.மேலும், செந்தில்பாலாஜி அமைச்சராக இல்லை என சிறப்பு மனு தாக்கல் செய்து ஜாமீன் பெற்றீர்கள். ஆனால் பிறகு அமைச்சராகிக் கொண்டீர்கள் அமைச்சராக இருந்த போது செந்தில்பாலாஜி தவறு செய்தார் என்பது தான் இந்த வழக்கு. இந் நிலையில் அவர் எப்படி மீண்டும் அமைச்சர் ஆனார்? ஜாமீன் ஒன்றும் சாட்சியங்களைக் கலைக்கும் லைசென்ஸ் அல்ல


உச்ச நீதிமன்றம் அளித்த ஜாமீன் என்பது சாட்சியங்களை கலைக்க கொடுக்கப்பட்ட லைசென்ஸ் இல்லை. அமைச்சராக உள்ள செந்தில் பாலாஜி சாட்சிகளை கூண்டிற்கு கூட வரவிடாமல் தடுக்கிறார் என் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் காட்டமாகத் தெரிவித்தனர். இதையடுத்து, சாட்சியங்களைக் கலைப்பார் என நீதிமன்றத்திற்கு அச்சம் இருந்தால் வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்றலாம் என செந்தில் பாலாஜி தரப்பு மூத்த வழக்கறிஞர் கோரிக்கை வைத்த நிலையில், அதனை நீதிபதிகள் ஏற்க மறுத்தனர்.


மேலும், வழக்கு விசாரணையை இரண்டு சான்ஸ் கொடுத்த நிலையில் அதில் ஒன்றை தேர்வு செய்ய செந்தில் பாலாஜிக்கு அவகாசம் அதில் அவர் அமைச்சர் பதவியை இராஜினாமா செய்து விட்டு 28 ஆம் தேதிக்கு முன்பு ஜாமீனை காப்பாற்றிக்கொள்ள வேண்டும் அதற்காக உள்ள அவகாசம் இது என வழக்கை தள்ளிவைத்த நீதிபதிகள், அமைச்சர் பதவியா அல்லது ஜாமீனா என்பது குறித்து அன்றைய தினம் தெரிவிக்க செந்தில் பாலாஜி தரப்புக்கு அறிவுறுத்தி உள்ளனர்
அரசு வேலைக்கு லஞ்சம் வாங்கிய செந்தில் பாலாஜி வழக்கு கடந்த பாதை நிலவரம்:

தமிழ்நாடு முதல்வருக்கு நீதிமன்றத்தின் கேள்வி:
மாநிலத்தின் இரண்டு முக்கிய துறைகளை நிர்வகிக்கும் சக்தி வாய்ந்த அமைச்சர் செந்தில் பாலாஜியை தமிழ்நாடு மாநில காவல்துறை எப்படி தைரியமாக விசாரிப்பார்கள்?
செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கி, அவரை வழக்கு விசாரணையை சந்திக்க உத்தரவு போடுவீர்களா?
உச்சநீதிமன்றம் விசாரணையை தொடரலாம் என்று தெரிவித்த பிறகும் வழக்கில் சம்பந்தப்பட்ட செந்தில் பாலாஜியை அமைச்சராக நீடிக்க அனுமதிக்கும் நீங்களும் அவருடைய ஊழலுக்கு துணை போகிறீர்களா?அரசு வேலைக்கு லஞ்சம் வாங்கிய வழக்கில் ஜாமீன் பெற்ற பின்னர் உடனே அமைச்சர் ஆனார் எப்படி?
உயர்நீதிமன்ற உத்தரவை விளாசித் தள்ளிய உச்சநீதிமன்றம்:
ஊழல் வழக்காக மாற்றப்பட்டு, அனைத்து விசாரணைகளும் முடிக்கப்பட்டு, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட வழக்கை மீண்டும் ஆரம்பத்தில் இருந்து விசாரிக்க வேண்டும் என்று  2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதந்தில் சென்னை உயர்நீதிமன்றம் கொடுத்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் கடுமையான கண்டிப்பு.
முந்தைய விசாரணையில் இருந்து எந்தக் குறிப்பும் எடுக்காமல், ஆதாரங்களை முழுமையாக அழித்து விட்டு மீண்டும் ஆரம்பத்தில் இருந்து விசாரிக்க வேண்டும் (இதை புகாரதாரர் கூட கேட்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது) என்ற உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் கடுமையான கண்டிப்பு.
இந்தத் தீர்ப்பின் மூலம் சென்னை உயர்நீதிமன்றம் இது வரை நடைபெற்ற விசாரணையை மட்டும் அழிக்கவில்லை, உச்சநீதிமன்றத்தின் 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் வழங்கிய தீர்ப்பையும் அழித்து விட்டார்கள்.
சாதாரண சட்ட அறிவு இருப்பவர்கள் கூட இதை ஊழல் வழக்காகத் தான் விசாரித்திருப்பார்கள் என்று உச்சநீதிமன்றம் உறுதியான கருத்து.
மாநில காவல்துறை மற்றும் அமலாக்கத்துறை யின் விசாரணையைத் தொடரலாம். அரசு வேலைக்கு லஞ்சம் என்பது மிகப்பெரிய குற்றம்:
இது
ஊழல் வழக்கு:
2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தேர்தல் விதிமுறைகள் அமலில் இருந்த கால கட்டத்தில் தேவசகாயம் கொடுத்த புகாரில் செந்தில் பாலாஜி, அவருடைய உதவியாளர் சண்முகம் மற்றும் வழக்கில் சம்பந்தப்பட்ட 47 பேர் மீது ஊழல் வழக்காக முதல் முறையாக குற்றப்பத்திரிக்கை தாக்கல்
செய்யப்படுகிறது. அந்த வழக்கு CC 24/2021 ஆகும் 
திமுக ஆட்சியில் செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராகிறார்:
செந்தில் பாலாஜியின் உதவியாளராக இருந்த சண்முகம் மேற்கண்ட (A3 of CC-25) வழக்கில், புகார் அளித்த அருள்மணி உடன் சமரசமாகி விட்டதாகவும் வாங்கிய பணத்தைத் திருப்பி கொடுத்து விட்டதாகவும் கூறி வழக்கை ரத்து செய்ய அனுமதி கோருகிறார்.
சகாயராஜ் (A3 of CC-19), வழக்கை ரத்து செய்ய அனுமதி கோருகிறார்.
வெற்றிசெல்வன் (A10 of CC-24), வழக்கை ரத்து செய்ய அனுமதி கோருகிறார்.
இந்த நிலையில் 
30 July 2021 ஆம் தேதியன்று CC-25/2021 வழக்கை, அதாவது ஒரு அரசு ஊழியர் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் வாங்கிய வழக்கில் பணத்தை திருப்பி கொடுத்து சமரசம் ஆகி விட்டதாகக் கூறி ரத்து செய்கிறது சென்னை உயர் நீதிமன்றம். இந்த நிலையில் தான் 
உச்சநீதிமன்றத்தில் வழங்கிய ஜாமீனை இரத்து செய்து தரக் கோரிக்கை வைத்து மேல்முறையீடு செய்யப்பட்டது :
வழக்கை ரத்து செய்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீட்டு
மறு விசாரணை மனு:
உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்த சமயத்தில், முதல் புகார் அளித்த தேவசகாயம் சென்னை உயர்நீதிமன்றத்தில் CC-24/2021 வழக்கை பல்டி அடித்து மீண்டும் மறு விசாரணை செய்ய வேண்டும் என்று கூறி மனு தாக்கல் செய்கிறார். இந்த நிலையில் தான் 
உச்சநீதிமன்றம் அதிரடி காட்டியுள்ளது :
CC-25/2021 வழக்கை ரத்து செய்தது தவறு என்றும் 3 வழக்குகளையும், ஊழல் வழக்காக மாற்றி விசாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தற்போது உத்தரவு.
உச்ச நீதிமன்ற உத்தரவை மீறிய உயர்நீதிமன்றத்தின் செயல் :
அனைத்து வழக்குகளிலும் இது வரை நடந்த விசாரணை மற்றும் ஆதாரங்களை கணக்கில் எடுக்காமல் மீண்டும் முதலில் இருந்து புதிதாக விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு. அரசு வேலைக்கு லஞ்சம் வாங்கிய வழக்கு :
அதன் 
புகார் விவரங்கள்:
தனது மகனுக்கு போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக அரசு பேருந்து நடத்துனர் பழனி என்பவர் தன்னிடம் 2,60,000 ரூபாய் வாங்கி விட்டு வேலை வாங்கித் தராமல் ஏமாற்றியதாக தேவசகாயம் என்பவர் 2015 ஆம் வருடம் புகார்.
ஊழல் வழக்காக பதிவு செய்யாமல் மோசடி வழக்காக பதிவு. குற்றம் 
FIR 441/2015 ஆகும் 
அரசு பேருந்து நடத்துனர் பணிக்கு நடந்த நேர்காணலில் பங்குபெற்ற கோபி என்பவர் அன்றைய போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களின் சகோதரர் அசோகன் மற்றும் அவரது மச்சான் கார்த்திக் ஆகியோர் நடத்துனர் பதவிக்காக தன்னிடம் 2,40,000 ரூபாய் லஞ்சம் கேட்டதாக 2016 ஆம் ஆண்டில் புகார்.
சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்குப் 7503/2016 பிறகு அமைச்சர் செந்தில் பாலாஜி பெயரைச் சேர்க்காமல், மறைத்து நடந்த ஊழல் அதன் குற்றம்
FIR 441/2015
அதன் 
CC 3627/2017 ஆகும் 
போக்குவரத்துத் துறை ஊழியரான கணேஷ் குமார், தன்னுடைய நண்பர் அண்ணராஜ் மற்றும் சகாயராஜ் ஆகியோரை அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர் பிரபு தன்னுடைய வீட்டிற்கு அழைத்து, அங்கே செந்தில் பாலாஜி இவர்கள் மூவரையும் போக்குவரத்துத் துறை பணிகளுக்கு ஆள் எடுக்க பணம் வாங்கி தரச் சொன்னதன் பேரில் 28 டிசம்பர் 2014 ஆம் ஆண்டு முதல் 10 ஜனவரி 2015 ஆம் ஆண்டு வரை சுமார் 95 லட்சம் வாங்கிக் கொடுத்ததாகவும், ஆனால் அவர்கள் பணம் வாங்கிக் கொடுத்தவர்கள் பெயர்கள் எதுவும் இறுதி பட்டியலில் வரவில்லை மற்றும் பணத்தையும் திரும்பக் கொடுக்கவில்லை என்றும்  புகார் அதை 
ஊழல் வழக்காகப் பதிவு செய்யாமல் மோசடி வழக்காகப் பதிவு செய்தது மிகப்பெரிய குற்றம். அது 
FIR 298/2017 மற்றும் 
CC 19/2020 ஆகும் 
அருள் மணி என்பவர் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உதவியாளர் சண்முகத்திடம் 40 லட்சம் லஞ்சம் கொடுத்ததாகவும் பிறகு செந்தில் பாலாஜியை சந்தித்ததாகவும் ஆனாலும் எதுவும் நடக்கவில்லை என்றும் 13 ஆகஸ்ட் 2018  ஆம் நாளில் 
ஊழல் வழக்காக பதிவு செய்யாமல் செந்தில் பாலாஜி பெயரை இணைத்து மோசடி வழக்காகப் பதிவு செய்து அது குற்றம் 
FIR 344/2018 மற்றும் 
CC 25/2021 ஆகும் 
தேவ சகாயம் புகாரில் சாட்சியாக இருந்த அருண் குமார் என்பவர் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 2 கோடி வரை கொடுக்கப்பட்ட லஞ்சம் விசாரணையில் மறைக்கப்பட்டுள்ளதாகப் புகார். ஆகவே இவர்கள் ஆட்சிக் காலத்தில் 
6 மாத காலத்தில் விசாரித்து வழக்கை முடிக்க உயர் நீதிமன்றம் அவசர கதியில் உத்தரவு. ஆகவே இவை அனைத்தும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த புகார் தாரர்கள் தரப்பில் அம்பலப்படுத்தியது. வழக்கில் திருப்பமாக இரண்டு சாய்ஸ் மட்டுமே ஒன்று உடனடியாக அமைச்சர் செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் அல்லது அப்படி செய்யாமல் காலம் கடத்தும் நிலையில் உச்சநீதிமன்றம் ஜாமீன் இரத்து செய்யும் அப்போது சிறையில் அடைக்கப்படும் நிலையில் அமைச்சர் பதவி தானாகவே காலியாகும். இதிலிருந்து தெரியும் பொது நீதி யாதெனில்: அரசு ஊழலுக்கு துணை போகக்கூடாது என உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் தெரிவித்த நிலையில் 28 ஆம் தேதி இறுதி முடிவுகள் வழங்கும் உத்தரவின் மூலம் தெரியும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...