தற்போது தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் இரத்து செய்யக் கோரிய உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நீதிபதிகள் அபய் எஸ் ஓகா, மாசிக் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அமைச்சர் செந்தில்பாலாஜி தரப்பில், சட்டப்பூர்வமாக ஜாமீன் கிடைத்த பிறகு தான் அமைச்சராகப் பொறுப்பு ஏற்றார், உச்ச நீதிமன்றம் விதித்த எந்த ஜாமீன் நிபந்தனையையும் அவர் மீறவில்லை என்று மூத்த வழக்கறிஞர் மூலம் இறுதி வாதம் வைக்கப்பட்டது.
அதற்கு நீதிபதிகள், செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பதவி வேண்டுமா? அல்லது ஜாமீன் வேண்டுமா? எனக் கேள்வி எழுப்பினர். மேலும், அதிகாரத்தைப் பயன்படுத்தி சாட்சியங்களைக் கலைக்க மாட்டார் என எப்படிக் கூற முடியும் என்றும், மெரிட் அடிப்படையில் ஜாமீன் வழங்கவில்லை. அரசியலமைப்புப் பிரிவு 21 ஐ மீறியதால் ஜாமீன் அளித்தோம் எனத் தெரிவித்தனர். ஜாமீன் வழங்கும் போது அமைச்சராக பதவி ஏற்க அனுமதி வழங்கவில்லை எனவும் நீதிபதிகள் விளக்கமளித்தனர்.மேலும், செந்தில்பாலாஜி அமைச்சராக இல்லை என சிறப்பு மனு தாக்கல் செய்து ஜாமீன் பெற்றீர்கள். ஆனால் பிறகு அமைச்சராகிக் கொண்டீர்கள் அமைச்சராக இருந்த போது செந்தில்பாலாஜி தவறு செய்தார் என்பது தான் இந்த வழக்கு. இந் நிலையில் அவர் எப்படி மீண்டும் அமைச்சர் ஆனார்? ஜாமீன் ஒன்றும் சாட்சியங்களைக் கலைக்கும் லைசென்ஸ் அல்ல

உச்ச நீதிமன்றம் அளித்த ஜாமீன் என்பது சாட்சியங்களை கலைக்க கொடுக்கப்பட்ட லைசென்ஸ் இல்லை. அமைச்சராக உள்ள செந்தில் பாலாஜி சாட்சிகளை கூண்டிற்கு கூட வரவிடாமல் தடுக்கிறார் என் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் காட்டமாகத் தெரிவித்தனர். இதையடுத்து, சாட்சியங்களைக் கலைப்பார் என நீதிமன்றத்திற்கு அச்சம் இருந்தால் வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்றலாம் என செந்தில் பாலாஜி தரப்பு மூத்த வழக்கறிஞர் கோரிக்கை வைத்த நிலையில், அதனை நீதிபதிகள் ஏற்க மறுத்தனர்.
மேலும், வழக்கு விசாரணையை இரண்டு சான்ஸ் கொடுத்த நிலையில் அதில் ஒன்றை தேர்வு செய்ய செந்தில் பாலாஜிக்கு அவகாசம் அதில் அவர் அமைச்சர் பதவியை இராஜினாமா செய்து விட்டு 28 ஆம் தேதிக்கு முன்பு ஜாமீனை காப்பாற்றிக்கொள்ள வேண்டும் அதற்காக உள்ள அவகாசம் இது என வழக்கை தள்ளிவைத்த நீதிபதிகள், அமைச்சர் பதவியா அல்லது ஜாமீனா என்பது குறித்து அன்றைய தினம் தெரிவிக்க செந்தில் பாலாஜி தரப்புக்கு அறிவுறுத்தி உள்ளனர்அரசு வேலைக்கு லஞ்சம் வாங்கிய செந்தில் பாலாஜி வழக்கு கடந்த பாதை நிலவரம்:
தமிழ்நாடு முதல்வருக்கு நீதிமன்றத்தின் கேள்வி:
மாநிலத்தின் இரண்டு முக்கிய துறைகளை நிர்வகிக்கும் சக்தி வாய்ந்த அமைச்சர் செந்தில் பாலாஜியை தமிழ்நாடு மாநில காவல்துறை எப்படி தைரியமாக விசாரிப்பார்கள்?
செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கி, அவரை வழக்கு விசாரணையை சந்திக்க உத்தரவு போடுவீர்களா?
உச்சநீதிமன்றம் விசாரணையை தொடரலாம் என்று தெரிவித்த பிறகும் வழக்கில் சம்பந்தப்பட்ட செந்தில் பாலாஜியை அமைச்சராக நீடிக்க அனுமதிக்கும் நீங்களும் அவருடைய ஊழலுக்கு துணை போகிறீர்களா?அரசு வேலைக்கு லஞ்சம் வாங்கிய வழக்கில் ஜாமீன் பெற்ற பின்னர் உடனே அமைச்சர் ஆனார் எப்படி?
உயர்நீதிமன்ற உத்தரவை விளாசித் தள்ளிய உச்சநீதிமன்றம்:
ஊழல் வழக்காக மாற்றப்பட்டு, அனைத்து விசாரணைகளும் முடிக்கப்பட்டு, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட வழக்கை மீண்டும் ஆரம்பத்தில் இருந்து விசாரிக்க வேண்டும் என்று 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதந்தில் சென்னை உயர்நீதிமன்றம் கொடுத்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் கடுமையான கண்டிப்பு.
முந்தைய விசாரணையில் இருந்து எந்தக் குறிப்பும் எடுக்காமல், ஆதாரங்களை முழுமையாக அழித்து விட்டு மீண்டும் ஆரம்பத்தில் இருந்து விசாரிக்க வேண்டும் (இதை புகாரதாரர் கூட கேட்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது) என்ற உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் கடுமையான கண்டிப்பு.
இந்தத் தீர்ப்பின் மூலம் சென்னை உயர்நீதிமன்றம் இது வரை நடைபெற்ற விசாரணையை மட்டும் அழிக்கவில்லை, உச்சநீதிமன்றத்தின் 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் வழங்கிய தீர்ப்பையும் அழித்து விட்டார்கள்.
சாதாரண சட்ட அறிவு இருப்பவர்கள் கூட இதை ஊழல் வழக்காகத் தான் விசாரித்திருப்பார்கள் என்று உச்சநீதிமன்றம் உறுதியான கருத்து.
மாநில காவல்துறை மற்றும் அமலாக்கத்துறை யின் விசாரணையைத் தொடரலாம். அரசு வேலைக்கு லஞ்சம் என்பது மிகப்பெரிய குற்றம்:
இது
ஊழல் வழக்கு:
2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தேர்தல் விதிமுறைகள் அமலில் இருந்த கால கட்டத்தில் தேவசகாயம் கொடுத்த புகாரில் செந்தில் பாலாஜி, அவருடைய உதவியாளர் சண்முகம் மற்றும் வழக்கில் சம்பந்தப்பட்ட 47 பேர் மீது ஊழல் வழக்காக முதல் முறையாக குற்றப்பத்திரிக்கை தாக்கல்
செய்யப்படுகிறது. அந்த வழக்கு CC 24/2021 ஆகும்
திமுக ஆட்சியில் செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராகிறார்:
செந்தில் பாலாஜியின் உதவியாளராக இருந்த சண்முகம் மேற்கண்ட (A3 of CC-25) வழக்கில், புகார் அளித்த அருள்மணி உடன் சமரசமாகி விட்டதாகவும் வாங்கிய பணத்தைத் திருப்பி கொடுத்து விட்டதாகவும் கூறி வழக்கை ரத்து செய்ய அனுமதி கோருகிறார்.
சகாயராஜ் (A3 of CC-19), வழக்கை ரத்து செய்ய அனுமதி கோருகிறார்.
வெற்றிசெல்வன் (A10 of CC-24), வழக்கை ரத்து செய்ய அனுமதி கோருகிறார்.
இந்த நிலையில்
30 July 2021 ஆம் தேதியன்று CC-25/2021 வழக்கை, அதாவது ஒரு அரசு ஊழியர் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் வாங்கிய வழக்கில் பணத்தை திருப்பி கொடுத்து சமரசம் ஆகி விட்டதாகக் கூறி ரத்து செய்கிறது சென்னை உயர் நீதிமன்றம். இந்த நிலையில் தான்
உச்சநீதிமன்றத்தில் வழங்கிய ஜாமீனை இரத்து செய்து தரக் கோரிக்கை வைத்து மேல்முறையீடு செய்யப்பட்டது :
வழக்கை ரத்து செய்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீட்டு
மறு விசாரணை மனு:
உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்த சமயத்தில், முதல் புகார் அளித்த தேவசகாயம் சென்னை உயர்நீதிமன்றத்தில் CC-24/2021 வழக்கை பல்டி அடித்து மீண்டும் மறு விசாரணை செய்ய வேண்டும் என்று கூறி மனு தாக்கல் செய்கிறார். இந்த நிலையில் தான்
உச்சநீதிமன்றம் அதிரடி காட்டியுள்ளது :
CC-25/2021 வழக்கை ரத்து செய்தது தவறு என்றும் 3 வழக்குகளையும், ஊழல் வழக்காக மாற்றி விசாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தற்போது உத்தரவு.
உச்ச நீதிமன்ற உத்தரவை மீறிய உயர்நீதிமன்றத்தின் செயல் :
அனைத்து வழக்குகளிலும் இது வரை நடந்த விசாரணை மற்றும் ஆதாரங்களை கணக்கில் எடுக்காமல் மீண்டும் முதலில் இருந்து புதிதாக விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு. அரசு வேலைக்கு லஞ்சம் வாங்கிய வழக்கு :
அதன்
புகார் விவரங்கள்:
தனது மகனுக்கு போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக அரசு பேருந்து நடத்துனர் பழனி என்பவர் தன்னிடம் 2,60,000 ரூபாய் வாங்கி விட்டு வேலை வாங்கித் தராமல் ஏமாற்றியதாக தேவசகாயம் என்பவர் 2015 ஆம் வருடம் புகார்.
ஊழல் வழக்காக பதிவு செய்யாமல் மோசடி வழக்காக பதிவு. குற்றம்
FIR 441/2015 ஆகும்
அரசு பேருந்து நடத்துனர் பணிக்கு நடந்த நேர்காணலில் பங்குபெற்ற கோபி என்பவர் அன்றைய போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களின் சகோதரர் அசோகன் மற்றும் அவரது மச்சான் கார்த்திக் ஆகியோர் நடத்துனர் பதவிக்காக தன்னிடம் 2,40,000 ரூபாய் லஞ்சம் கேட்டதாக 2016 ஆம் ஆண்டில் புகார்.
சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்குப் 7503/2016 பிறகு அமைச்சர் செந்தில் பாலாஜி பெயரைச் சேர்க்காமல், மறைத்து நடந்த ஊழல் அதன் குற்றம்
FIR 441/2015
அதன்
CC 3627/2017 ஆகும்
போக்குவரத்துத் துறை ஊழியரான கணேஷ் குமார், தன்னுடைய நண்பர் அண்ணராஜ் மற்றும் சகாயராஜ் ஆகியோரை அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர் பிரபு தன்னுடைய வீட்டிற்கு அழைத்து, அங்கே செந்தில் பாலாஜி இவர்கள் மூவரையும் போக்குவரத்துத் துறை பணிகளுக்கு ஆள் எடுக்க பணம் வாங்கி தரச் சொன்னதன் பேரில் 28 டிசம்பர் 2014 ஆம் ஆண்டு முதல் 10 ஜனவரி 2015 ஆம் ஆண்டு வரை சுமார் 95 லட்சம் வாங்கிக் கொடுத்ததாகவும், ஆனால் அவர்கள் பணம் வாங்கிக் கொடுத்தவர்கள் பெயர்கள் எதுவும் இறுதி பட்டியலில் வரவில்லை மற்றும் பணத்தையும் திரும்பக் கொடுக்கவில்லை என்றும் புகார் அதை
ஊழல் வழக்காகப் பதிவு செய்யாமல் மோசடி வழக்காகப் பதிவு செய்தது மிகப்பெரிய குற்றம். அது
FIR 298/2017 மற்றும்
CC 19/2020 ஆகும்
அருள் மணி என்பவர் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உதவியாளர் சண்முகத்திடம் 40 லட்சம் லஞ்சம் கொடுத்ததாகவும் பிறகு செந்தில் பாலாஜியை சந்தித்ததாகவும் ஆனாலும் எதுவும் நடக்கவில்லை என்றும் 13 ஆகஸ்ட் 2018 ஆம் நாளில்
ஊழல் வழக்காக பதிவு செய்யாமல் செந்தில் பாலாஜி பெயரை இணைத்து மோசடி வழக்காகப் பதிவு செய்து அது குற்றம்
FIR 344/2018 மற்றும்
CC 25/2021 ஆகும்
தேவ சகாயம் புகாரில் சாட்சியாக இருந்த அருண் குமார் என்பவர் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 2 கோடி வரை கொடுக்கப்பட்ட லஞ்சம் விசாரணையில் மறைக்கப்பட்டுள்ளதாகப் புகார். ஆகவே இவர்கள் ஆட்சிக் காலத்தில்
6 மாத காலத்தில் விசாரித்து வழக்கை முடிக்க உயர் நீதிமன்றம் அவசர கதியில் உத்தரவு. ஆகவே இவை அனைத்தும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த புகார் தாரர்கள் தரப்பில் அம்பலப்படுத்தியது. வழக்கில் திருப்பமாக இரண்டு சாய்ஸ் மட்டுமே ஒன்று உடனடியாக அமைச்சர் செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் அல்லது அப்படி செய்யாமல் காலம் கடத்தும் நிலையில் உச்சநீதிமன்றம் ஜாமீன் இரத்து செய்யும் அப்போது சிறையில் அடைக்கப்படும் நிலையில் அமைச்சர் பதவி தானாகவே காலியாகும். இதிலிருந்து தெரியும் பொது நீதி யாதெனில்: அரசு ஊழலுக்கு துணை போகக்கூடாது என உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் தெரிவித்த நிலையில் 28 ஆம் தேதி இறுதி முடிவுகள் வழங்கும் உத்தரவின் மூலம் தெரியும்.
கருத்துகள்