சட்ட விரோதப் பணப்பரிமாற்றத் தடைச்சட்டத்தின் கீழ் விசாரணை நடத்திய அமலாக்கத்துறையினர்,
இராமேஸ்வரம் ரிசார்ட்டில் ரூபாய்.30 கோடி மதிப்புள்ள 60 அறைகளை கையகப்படுத்தினர். இராராமேஸ்வரத்தில் செவன் ஹில்ஸ் சொகுசு ரிசார்ட் அமைந்துள்ளது. டி.எம்.டிரேடர்ஸ் மற்றும் கே.கே.டிரேடர்ஸ் என்ற நிறுவனங்களுடன் தொடர்புடைய இந்த ரிசார்ட் மூலம் சட்ட விரோதப் பணப்பரிமாற்றம் மூலம் மோசடி நடப்பதாக அமலாக்கத்துறை யினர் கண்டறிந்தது. அது தொடர்பாக நடத்திய சோதனை மூலம் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அதன் அடிப்படையில், ரிசார்ட்டில் இருக்கும் ரூபாய்.30 கோடி மதிப்புள்ள 60 அறைகள் மற்றும் காலியாக உள்ள நிலத்தை அமலாக்கத்துறை யினர் கையகப்படுத்தினர். கையகப்படுத்திய ரிசார்ட் புகைப்படங்களை அமலாக்கத்துறை யினர் சமூக வலைதளத்தில் தகவல்கள் வெளியிட்டுள்ளது. பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ், அமலாக்கத்துறையின் கோல்கட்டா மண்டல அலுவலகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என அதன் உயர் அலுவலர்கள் தெரிவித்தனர்.
கருத்துகள்