பட்டா மாறுதலுக்கு ஓய்வு பெற்ற இராணுவ வீரரிடம் ரூபாய்.7 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் உடன் தலையாரி கைது
மதுரை மாவட்டம் மேலுார் வட்டம் கச்சிராயன்பட்டி குரூப் பட்டா மாறுதலுக்கு ஓய்வு பெற்ற இராணுவ வீரரிடம் ரூபாய்.7 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் துரைபாண்டி தலையாரி பாக்கியலட்சுமி யுடன் கைது
மதுரை மாவட்டம் கோட்டைப்பட்டி ஓய்வு பெற்ற இராணுவ வீரர் மலைச்செல்வம். அவரது தந்தை ராமு பெயரிலிருந்த நிலத்தை பட்டா மாறுதல் செய்ய கச்சிராயன்பட்டி குரூப் கிராம நிர்வாக அலுவலர் துரைப்பாண்டியிடம் மனு அளித்தார். மனுவை பரிசீலனை செய்யவும், பட்டா பெயர் மாறுதல் செய்யவும் 10,000 ரூபாய் லஞ்சமாகத் தரவேண்டும் எனக் கேட்டார்.
ஆனால் ரூபாய் 7,000 தருவதாக மலைச்செல்வம் ஒப்புக்கொண்டார்.இந்த நிலையில் கிராம நிர்வாக அலுவலர் லஞ்சம் கேட்ட விவகாரம் குறித்து மதுரை மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்தார்.
அவர்கள் வழங்கிய ஆலோசனைப்படி தான் கொண்டு வந்த பணம் சாட்சிகள் முன்னிலையில் பினாப்தலீன் இராசாயணப் பொடி தடவிய நம்பர் குறித்து திருப்பிக் கொடுத்து அனுப்பிய 7,000 ரூபாயை
கிராம நிர்வாக அலுவலர் துரைப்பாண்டியின் தலையாரி சுந்தர்ராஜபுரம் பாக்கியலட்சுமியிடம் ஓய்வு பெற்ற இராணுவ வீரர் மலைச்செல்வம் அரசு சாட்சிகள் முன்னிலையில் கொடுத்தார்.
அப்போது அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை துணைக் கண்காணிப்பாளர் சத்தியசீலன்
மற்றும் ஆய்வாளர்கள் ரமேஷ்பாபு, பாரதி பிரியா உள்ளிட்டோர் துரைப்பாண்டியையும், பாக்கியலட்சுமியையும் பணம் பெற்ற கையுடன் கையுடன் பிடித்துக் கைது செய்தனர். அவர்களிடம் மேலும் விசாரணை நடக்கிறது அதன் பின்னர் சிறைக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை
கருத்துகள்