தமிழ்நாட்டில் 8 ஐபிஎஸ் உயர் அலுவலர்கள் பணியிட மாற்றம்
செய்து அரசு உத்தரவு. தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ் குமார் வெளியிட்டுள்ள உத்தரவில்:- தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை டிஜிபியாக சீமா அக்ரவால் பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.
: சென்னை காவல் துறை தலைமையக ஐஜி விஜயேந்திர பிதாரி சென்னை கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். ஐபிஎஸ் உயர் அலுவலர் கபில் குமார் ஷரத்கர் சென்னை அமலாக்கப் பிரிவு ஐஜியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.
சென்னை அமலாக்கப் பிரிவு ஐஜி ஜி.கார்த்திகேயன், சென்னை போக்குவரத்துத் துறை ஐஜியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டார். லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்புக் கண்காணிப்புத் துறை இணை ஆணையர் சந்தோஷ் குமார், சென்னை பொருளாதாரக் குற்றப்பிரிவு ஐஜியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டார். சென்னை பொருளாதார குற்றப் பிரிவு ஐஜி சத்யப்ரியா காவலர் நலன்பிரிவு ஐஜியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.
காவலர் நலன்பிரிவு டிஐஜி எம்.துரை காவல் துறைத் தலைமையக டிஐஜியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை டிஜிபியாக சீமா அக்ரவால் பணியிடமாற்றம் செய்யப்பட்டார். குடிமைப் பொருட்கள் மற்றும் உணவு வழங்கல் துறை ஐஜி ரூபேஷ் குமார் மீனா கூடுதல் பொறுப்பாக அத்துறையின் டிஜிபி பொறுப்புகளைக் கவனித்துக் கொள்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்