கோடைக்காலத்தில் மலை வாசல் ஸ்தலங்களுக்கு கட்டுப்பாடு நீலகிரி மலை உதகமண்டலம் (ஊட்டி),
கொடைக்கானல் உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள பகுதிகளில் 28 வகையான தடை செய்யப்பட்ட நெகிழி அல்லது பிளாஸ்டிக் எனப்படும் பாலிதீனால் செய்த பொருட்களைப் பயன்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்தது.
தடையை மீறி பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்களை பறிமுதல் செயயும் நடவடிக்கைகள் எடுக்கவும், மேலும் ஊட்டி, கொடைக்கானல், ஏறகாடுக்கு எத்தனை சுற்றுலா பயணிகளை அனுமதிக்கலாம் என்பது குறித்து சென்னை ஐஐடி மற்றும் பெங்களூரு ஐஐஎம் சார்பில் ஆய்வுகள் மேற்கொண்ட நிலையில், கோடைகால விடுமுறை காரணமாக ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு வருகைதரும் பிற பகுதி சுற்றுலா பயணிகளின் வாகனங்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்து
உயர்நீதிமன்ற நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவின் படி ஊட்டிக்கு வார நாட்களில் ஆறாயிரம் வாகனங்களையும், வார இறுதி நாட்களில் எட்டாயிரம் வாகனங்களையும் அனுமதிக்கலாம் என்றும் கொடைக்கானலில் வார நாட்களில் நான்காயிரம் வாகனங்களையும் வார இறுதி நாட்களில் ஆறாயிரம் வாகனங்களையும் அனுமதிக்கலாம் என்றும் உத்தரவிடப்பட்டிருருந்த நிலையில் நீலகிரி மாவட்டத்துக்குள் பெட் பாட்டில்கள், பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு செல்லப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி சுப்பிரமணிய கௌசிக் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற , நீதிபதிகள் இந்த உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளனர்.
அதன்படி, "தமிழ்நாட்டில் 28 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை செய்து பிறப்பிக்கப்பட்ட அரசாணையின் அடிப்படையில், நீலகிரி முதல் கன்னியாகுமரி அகத்தியர் மலை வரையிலான மேற்குத் தொடர்ச்சி மலை முழுவதும் 28 வகையான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த, இருப்பில் வைக்க, கொண்டு செல்ல, உற்பத்தி செய்ய தடை விதிக்கப்படுகிறது. வாகனங்களுக்கு அனுமதி வழங்கும் போது நீலகிரி மற்றும் கொடைக்கானல் பகுதிகளுக்கு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு செல்லக்கூடாது என மோட்டார் வாகன சட்டத்தில் நிபந்தனையை சேர்த்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிடுதல் கட்டாயம் எனவும். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட மலைப்பகுதிக்கு கொண்டு செல்லும் வாகனங்களை பறிமுதல் செய்வதுடன், அவர்கள் மீது வழக்கு தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும். மலைப்பகுதிகளில் உள்ள கடை வியாபாரம் செய்து வரும் நபர் பிளாஸ்டிக் பைகளில் அடைத்து விற்பனைக்கு வரும் ரொட்டி உள்ளிட்ட உணவுப் பொருட்களை, பிரித்து இலை, காகிதம் போன்ற மட்கும் தன்மையுடைய பொருட்களில் வைத்து வாடிக்கையாளர்களுக்கு வழங்கலாம். உணவுப்பொருட்கள் எடுத்து வரப்படும் பிளாஸ்டிக் பைகளை, வனப்பகுதியில் போடாமல், மீண்டும் உணவு பொருட்கள் உற்பத்தியாளர்களிடமே திரும்ப ஒப்படைக்க வேண்டும். (அதற்கு உற்பத்தி செய்யும் போதே தடை விதித்தால் பிரச்சினைகள் முடிந்துவிடும் அதை விடுத்து) மஞ்சள் பை திட்டத்தின் விரிவாக்கமாக சுற்றுலா பயணிகளுக்கு தேவையான குடிநீர் போத்தல்கள், குடுவைகள் (பாட்டில்கள்), பைகள் உள்ளிட்ட அன்றாடம் தேவைப்படும் பொருட்கள் அடங்கிய சுற்றுலா பைகளை வாடகைக்கு விடுவதும்
அந்தத் திட்டத்தை ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட மலைப்பகுதிகளில் அமல்படுத்தலாம்.பொது இடங்களில் குப்பைகளை சேர்வதைத் தடுக்க வியாபாரிகளுக்கு அரசு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இந்த உத்தரவுகளை அமல்படுத்தியது குறித்து சென்னை நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்,"என உத்தரவிட்ட நிலையில்
இந்த வழக்கின் விசாரணையை கோடைக்கால விடுமுறை முடிந்து ஜூன் மாதம் 6 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர். இதில் பொது நீதி யாதெனில் மலை வாழிடங்கள் ஆக்கிரமிப்பு செய்து அக்கிராமப் பிரவேசம் காரணமாக வீடுகள் நட்சத்திரக் கட்டுமான ஹோட்டல்கள் பெருகியதை யாரும் தடுக்க வில்லை. இந்த கட்ப்பாடுகள் காரணமாக ஏழைகள் யாரும் சுற்றுலா செல்வதில்லை நடுத்தர வர்க்கம் மலை வாழிடங்களில் சுற்றுலா செல்வதை தடுக்கும் நடவடிக்கைகளாகவே பார்க்க முடிகிறது. மேலும் அதற்கு காரணம் பல அதை இந்த தளத்தில் பேசமுடியாது என்பதே இங்கு பொது நீதி.
கருத்துகள்