புதுச்சேரியிலிருந்து திண்டிவனம் வழியாக பெங்களூர் செல்வதற்கு, திண்டிவனம், திருவண்ணாமலை வழியாக
கிருஷ்ணகிரியை கடந்து போவது தான் பிரதான வழியாக உள்ள இந்த சாலை இருவழிச்சாலையாகவே உள்ளது. பல ஆண்டுகளாக போடப்படாமல் பல கட்ட வலியுறுத்தலுக்குப் பின்னர் தான் பணிகள் நடந்தன.182 கி.மீ நீளமுள்ள கிருஷ்ணகிரி-திண்டிவனம் நெடுஞ்சாலை இருவழிப் பணிகள் கடந்த ஆண்டு தான் நிறைவடைந்தன, நங்கிலிகொண்டான், கரியமங்கலம் மற்றும் நாகம்பட்டியில் டோல்கேட்டுகளை அமைத்துள்ளது. 2012 ஆம் ஆண்டில் தொடங்கிய இந்தப் பணி, மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பு மற்றும் திட்டத்தை ஆர்டர் எடுத்த நிறுவனம் கைவிட்டதால் மிகவும் தாதமமானது. இதனால் இந்த சாலைப் பணிக்கு ரூபாய்.624 கோடி வரை செலவானது. ஒரு வழியாக முடிந்து வாகனங்கள் செல்ல நான்கு வழிச்சாலையாக மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது சாலை போக்குவரத்தை மேம்படுத்த நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் எடுத்த முயற்ச்சிக்கு பலனாக
திண்டிவனம் முதல் கிருஷ்ணகிரி வரையிலான இரு வழிச் சாலையை நான்கு வழிச்சாலையாக தரம் உயர்த்த வேண்டும் என மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர்
நிதின் கட்கரியிடடம் பலமுறை கோரிக்கை வைத்ததை அடுத்து தற்போது நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்கான “விரிவான திட்ட அறிக்கை” (DPR) தயாரிக்க மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஆணையிட்டுள்ளார்.
கருத்துகள்