கோயம்புத்தூர் ஸ்ரீ அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசன் தமிழ்நாடு உணவு ஆணையத்தின் உறுப்பினராக நியமனம்.
கோயம்புத்தூர் பகுதிகளில் 50 ஆண்டுகளுக்கு முன்பு இவரது தந்தையாரால் துவங்கப்பட்ட ஸ்ரீ அன்னபூர்ணா உணவகத்துக்கு தற்போது பல இடங்களில் கிளைகள் வைத்துள்ளனர்.
2024 ஆம் ஆண்டு கோயம்புத்தூரில் நடைபெற்ற சிறு, குறு, நடுத்தர வணிக உரிமையாளர்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசன் ஜி எஸ் டி குறித்து கேள்வி எழுப்பிய காணொலிக் காட்சி வைரலானது.
'இனிப்புப் பண்டங்களுக்கு குறைவான ஜிஎஸ்டி வரியும், காரப் பொருட்களுக்கு அதிகமான ஜிஎஸ்டி வரியும் விதிக்கப்பட்டதனால் மக்கள் பாதிப்பு எனக் கூறாமல், பில் போடுவதில் சிரமம் உண்டாகிறது என சுயநல வியாபாரியாக பேசியவர். உண்ணும் பன்னுக்கு ஜிஎஸ்டி வரி இல்லை, ஆனால், அதில் வைக்கும் க்ரீமுக்கும் ஜாமுக்கும் ஜிஎஸ்டி வரி போடப்படுகிறது’ என அவர் கேள்வி எழுப்பியிருந்தார். அதன் பின்னர் தொடர்ந்து, நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்து சீனிவாசன் மன்னிப்புக் கோரும் காணொளிக் காட்சியை பாஜகவினர் பகிர்ந்ததும் சர்ச்சையானது.
இதற்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி முதல் பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். தொடர்ந்து, தனிப்பட்ட விருப்பத்தின் பேரிலேயே நிதியமைச்சரைச் சந்தித்ததாகவும் இந்தப் பிரச்னையை முடிக்க விரும்புவதாகவும் அன்னபூர்ணா உணவகம் அறிக்கை வெளியிட்ட நிலையில், தற்போது தமிழ்நாடு மாநில உணவு ஆணையத்தின் உறுப்பினராக அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசனை நியமித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து, சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த சீனிவாசன் அதற்கு நன்றி தெரிவித்துள்ளார். வியாபாரிகள் எல்லோரும் தற்போது மக்கள் சேவை செய்ய அரசியலுக்கு வருவதால் தான் அரசியலும் ஆட்சி நிர்வாகத்திலும் ஊழல் மலிந்த நிலை நிலவுகிறது.
கருத்துகள்