சொத்து வரி பெயர் மாற்றம் செய்ய ரூபாய்.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊழியர்கள் இருவர் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம் பாகோடு பகுதி தேவதாஸ் என்பவர், சொத்து வரியில் பெயர் மாற்றம் செய்ய பாகோடு பேரூராட்சியை அணுகினார். இதற்கு அங்கு பணியில் இருந்த ஊழியர்களில் வரித் தண்டலர் உள்ளிட்ட இருவர் அவரிடம் ரூபாய்.20 ஆயிரம் லஞ்சம் கேட்டனர். கொடுக்க விரும்பாத தேவதாஸ் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் புகார் செய்தார்.
அவர்கள் ஆலோசனைப்படி தேவதாஸிடம் ரூபாய்.20 ஆயிரம் லஞ்சம் பெற்ற பேரூராட்சி பதிவு எழுத்தர் ஜஸ்டின் ஜெபராஜ் (வயது 38), எலக்ட்ரீஷியன் சுஜின்(வயது 37) ஆகியோரை ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை துணைக் கண்காணிப்பாளர் சால்வின் துரை தலைமையிலான குழுவினர் கைது செய்து விசாரித்து பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறை சேர்ந்தனர்.
கருத்துகள்