மாணவன் தமிழரசு இறப்பதற்கு முன்பே எழுதிய மன்னிப்புக் கடிதம் வெளியானது !
கோயம்புத்தூர் கற்பகம் மருந்தியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு மாணவன் தமிழரசு, நேற்று முன்தினம் ஏப்ரல் மாதம்.22 ஆம் தேதி கல்லூரியின் விடுதியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட நிலையில், அந்த மாணவன் கல்லூரி நிர்வாகத்திற்கு கொடுத்த மன்னிப்புக் கடிதம் தற்போது வெளியாகி உள்ளது. தனக்குக் கொடுக்கப்பட்டிருந்த Exit ID Card-ஐ பயன்படுத்தி, ஜுனியர் மாணவர்கள் சிலரை, மருதமலை முருகன் கோவிலுக்கு அழைத்துச் சென்றது தெரியவந்ததால், கல்லூரி நிர்வாகம் தனியாக விசாரணை குழு அமைத்து, 2000 ரூபாய் அபராதம் செலுத்தச் சொல்லி, பெற்றோரையும் அழைத்து வரச் சொன்னதால், தமிழரசு இப்படியொரு முடிவை எடுத்தது தெரியவந்தது. இந்த சூழலில், அவர் கடைசியாக தனது கைப்பட எழுதிய மன்னிப்புக் கடிதமும் தற்போது வெளியாகியுள்ளது.
தனியார் கல்வி நிறுவனங்கள் தங்கள் வரம்புகள் கடந்த நிலையில் செயல்படுவது கவலை தருகிறது. உயர் கல்வி நிறுவனங்களின் கட்டுப்பாடு அரசு சார்ந்த நிலை வரவேண்டும்.
கருத்துகள்