முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

டாஸ்மாக் வழக்கு விசாரணையில் ஊழலுக்கு ஆதரவாக வாதம் செய்த அரசு தரப்பு கண்டனம் தெரிவித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள்

ஊழலுக்கு ஆதரவாக வாதம் செய்த அரசு தரப்பு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள்               


சென்னை உயர்நீதிமன்றத்தின் பதிவாளர் ஜெனரல் அலுவலகத்தில், நகர சிவில் நீதிமன்றத்தில் சில கீழ்நிலை ஊழியர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டை உள்ளூர் காவல்துறையினர் பதிவு செய்திருந்தால், அமலாக்கத்துறை இயக்குநரகம் (ED) அலுவலர்கள் சோதனை மற்றும் பறிமுதல் நடவடிக்கையை மேற்கொள்ள அனுமதிக்க முடியுமா என செவ்வாய்க்கிழமையன்று அதாவது ஏப்ரல் மாதம் 15 ஆம் தேதி 2025 ல் தமிழ்நாடு அட்வகேட் ஜெனரல் பி.எஸ். ராமன் கேள்வி எழுப்பிய நிலையில் விசாரணை நடைபெற்றது.  மார்ச் மாதம் 6 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை சென்னை எழும்பூர் தமிழ்நாடு மாநில சந்தைப்படுத்தல் கழகத்தின் (TASMAC) தலைமையகத்தில் ED அலுவலர்கள் மேற்கொண்ட சோதனை மற்றும் பறிமுதல் நடவடிக்கையை சட்டவிரோதமானதென அறிவிக்கக் கோரி மாநில அரசு தாக்கல் செய்த ரிட் மனு சார்பில் வாதிடும் போது, ​​நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் கே . ராஜசேகர் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன், தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞர் இந்த வாதத்தை முன் வைத்துள்ளனர். 

சோதனை மற்றும் பறிமுதல் நடவடிக்கை எதன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது என்பது TASMAC அலுவலர்களுக்கு முற்றிலும் தெரியாதென்று தலைமை அரசு வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் நீதிமன்றத்தில் தெரிவித்தார். சோதனையின் போது ED அலுவலர்களால் அவர்களுக்கு எந்தத் தகவலும் வழங்கப்படவில்லை. அமலாக்கத்துறை வழக்கு தகவல் அறிக்கையின் (ECIR) நகல் அல்லது தேடல் வாரண்டின் நகல் எதுவும் TASMAC அலுவலர்களுக்கு வழங்கப்படவில்லை.தற்போதைய ரிட் மனு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பின்னரே, ஊழல் தடுப்புச் சட்டம், 1988 ன் கீழ் பல்வேறு குற்றங்களுக்காக கண்காணிப்பு மற்றும் ஊழல் தடுப்பு இயக்குநரகம் (DVAC) TASMAC அலுவலர்கள் மீது சில ஆண்டுகளாக வழக்குப் பதிவு செய்த சுமார் 42 முதல் தகவல் அறிக்கைகள் (FIR) அடிப்படையில் ECIR பதிவு செய்ததாக ED கூறியதாக அவர் பேசுகையில் முன் வைத்தார்.


ஊழல் குற்றச்சாட்டில் TASMAC ஊழியர்களுக்கு எதிராக DVAC பதிவு செய்த அனைத்து FIR-களிலும் TASMAC குற்றம் சாட்டிய புகார்தாரராகவோ அல்லது குற்றத்தால் பாதிக்கப்பட்ட நபராகவோ இருந்திருக்கும் எனக் கூறிய மாநில அரசு தலைமை வழக்கறிஞர் அந்த FIR-கள் நாட்டின் கூட்டாட்சி அமைப்பை மதிக்காமல் அரசுக்குச் சொந்தமான ஒரு நிறுவனத்தின் அலுவலகத்தில் சோதனை மற்றும் பறிமுதல் நடவடிக்கையை நடத்துவதற்கு எவ்வாறு அடிப்படையாக மாறும் என்றார்.

சுமார் 60 மணி நேரம் நீடித்த சோதனை மற்றும் பறிமுதல் நடவடிக்கைகளின் போது டாஸ்மாக் அலுவலர்கள் கடுமையான மனித உரிமை மீறல்களுக்கு ஆளானதாகவும் அவர் தெரிவித்தார். அந்த அலுவலர்களும் நாட்டின் குடிமக்கள் என்பதால், வலிமைமிக்க அமலாக்கத்துறையை (ED) தனித்தனியாக எதிர்த்துப் போராட முடியாத அளவுக்கு பலஹீனமாக இருந்ததால், தற்போதைய ரிட் மனுவின் மூலம் அவர்களின் நலன்களைப் (ஊழல் வாதிகளை) பாதுகாக்க அரசு கடமைப்பட்டுள்ளது என வாதிட்டார்.  42 முதல் தகவல் அறிக்கைகளுக்குப் பின்னால் உள்ள பணமோசடி கோணத்தை விசாரிக்க உதவி கோரி மாநில அரசு அல்லது டாஸ்மாக் நிறுவனத்திற்கு அமலாக்கத் துறை அனுப்பிய ஒரு கடிதத்தை தாக்கல் செய்யுமாறு அமலாக்கத் துறைக்கு மாநில அரசு தலைமை வழக்கறிஞர் சவால் விடுத்தார். மணல் சுரங்க வழக்குகளை விசாரித்த போது, ​​மாநிலத்தில் உள்ள பல்வேறு மாவட்ட ஆட்சியர்களுக்கு அமலாக்கத் துறையினர் சார்பில் சம்மன் அனுப்பியதாகவும் கூறினார். இருப்பினும், டாஸ்மாக் விசாரணையில் அத்தகைய நடைமுறை எதுவும் பின்பற்றப்படவில்லை என்றவர்.

தனது தரப்பில், TASMAC-ஐ பிரதிநிதித்துவப்படுத்தும் இந்தியாவின் மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங், ED-யால் FIR-களை மறைக்க முடியாது என வாதிட்டார். இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 302 (கொலை) 2002 ஆம் ஆண்டின் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) கீழ் திட்டமிடப்பட்ட குற்றமாக இருக்கலாம், ஆனால் கௌரவக் கொலை வழக்கில் உள்ளூர் காவல்துறையினரால் அது செயல்படுத்தப்பட்டிருந்தால், PMLA-வை நடைமுறைப்படுத்த முடியாது. எனவே, FIR-களின் உள்ளடக்கங்களை அறிய TASMAC-க்கு உரிமை உண்டு என்றார்.

PMLA-வின் விதிகள் நாட்டின் பொருளாதாரத்துடன் தொடர்புடையவை என்பதால் அவை கடுமையானவை என்று நீதிபதிகள் சுட்டிக்காட்டிய போது, ​​வ வழக்கறிஞர் சிங் பதிலளித்தார்: "மாநில காவல்துறை பொருளாதாரக் குற்றங்களை விசாரிக்கக் கூடாது என்பது போல் இல்லை. பாஜக ஆளும் மாநிலங்களுக்கும் ED சென்று அங்குள்ள கலால் அலுவலகங்களை சோதனை செய்தால், அதன் நம்பகத்தன்மையைப் புரிந்து கொள்ள முடியும், ஆனால் அது தேர்ந்தெடுத்து எதிர் கட்சிகள் ஆளும் மாநிலங்களைத் தேர்வு செய்கிறது. அங்கு தான் பிரச்சனை இருக்கிறது."முன்னதாக, மூத்த வழக்கறிஞர் விக்ரம் சௌத்ரியும் டாஸ்மாக் சார்பாக வாதிட்டார்.பின்னர் அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமனின் வாதங்களைத் தொடர புதன்கிழமை இந்த வழக்கை மீண்டும் பட்டியலிடுமாறும், ED சிறப்பு அரசு வழக்கறிஞர் என். ரமேஷ் உதவியுடன் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி. ராஜு மற்றும் ஏ.ஆர்.எல். சுந்தரேசன் ஆகியோரின் எதிர் வாதங்களை முன்வைக்குமாறும் நீதிபதிகள் உயர் நீதிமன்றப் பதிவாளருக்கு உத்தரவிட்டனர்.

அமலாக்கத் துறையால் நம்பப்பட்ட 42 முதல் தகவல் அறிக்கைகள், நீதிமன்றத்தில் தங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கப்படுவதை உறுதி செய்யுமாறு நீதிபதிகள் ரமேஷிடம் கேட்டுக் கொண்டனர். அதன் படி வழக்கு மீண்டும் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், கே.ராஜசேகர் அமர்வில் 2.15 மணிக்கு நேற்று விசாரணைக்கு வந்தது டாஸ்மாக் சார்பில் மூத்த வழக்கறிஞர் விக்ரம் சௌத்ரி, தமிழ்நாடு அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆகியோர் இறுதியாக வாதிட்டனர். அவர்கள் தங்கள் வாதத்தில், ''அமலாக்கத் துறை எப்போதும் வெளிப்படையாக இருந்ததில்லை. வெளிப்படையாக இருப்பதாக ஒரு பிம்பத்தை உருவாக்கி அதன் பின்னால் அமலாக்கத்துறை ஒளிந்து கொண்டுள்ளது. எந்த நம்பிக்கையின் அடிப்படையில் குற்றம் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை கருதுகிறது? எதற்காக சோதனை செய்கிறோம்? என்பதை அமலாக்கத்துறை தெரிவிக்க வேண்டும்.

அமலாக்கத் துறையின் நடவடிக்கையால் நேரடியாக டாஸ்மாக்கின் நற்பெயருக்கும், மறைமுகமாக தமிழ்நாடு அரசின் நற்பெயருக்கும் களங்கம் ஏற்பட்டுள்ளது. 2007-ஆம் ஆண்டு முதல் 2021-ஆம் ஆண்டு வரை முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் நிலையில், தற்போது தான் ஞானம் வந்தது போல அமலாக்கத்துறை விசாரணை நடத்துவது ஏன்? இன்றைக்கு டாஸ்மாக் குறிவைக்கப்படுகிறது. நாளை ஒவ்வொரு துறையும் குறிவைக்கப்படும். விசாரணை என்ற பெயரில் பெண் அலுவலர்களை அடைத்து வைத்து நள்ளிரவில் வீட்டுக்கு அனுப்பியது சரியான நடத்தையா?'' என்றும் கேள்வி எழுப்பினர்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், கோபமாக அனைத்துத் துறைகளிலும் ஊழலை ஒழிப்பது தானே அரசின் நோக்கமாக இருக்க வேண்டும் ? நீங்கள் ஊழலுக்கு ஆதரவாக அல்லவா வாதிடுகிறீர்கள் என்றனர். இதற்கு பதிலளித்த தமிழ்நாடு அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் , "ஊழலை ஒழிப்பது தான் அரசின் நோக்கம் என்பதில் எங்களுக்கு மாற்றுக்கருத்தில்லை. ஆனால், அதை மாநில அரசே கவனித்துக்கொள்ளும். மத்திய அரசின் அமலாக்கத்துறையினர் அல்ல" என்றார்.

இவர்களது வாதத்தைத் தொடர்ந்து, அமலாக்கத் துறையினர் சார்பில் கூடுதல் ஜொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி. ராஜு தனது வாதத்தை முன் வைக்கத் தொடங்கினார்.

அவர், '' தமிழ்நாடு மாநிலக் காவல்துறை மற்றும் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த மொத்த வழக்குகளின் அடிப்படையிலேயே அமலாக்கத் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். முறைகேடு நடந்திருப்பதாகக் கருதினால் அமலாக்கத் துறையினர் எங்கும் எப்போதும் விசாரணை நடத்தலாம். டாஸ்மாக் ஊழியர்கள் லஞ்சம் வாங்கியதாக முதல் தகவல் அறிக்கையில் உள்ளது. அவர்களில் சிலர் லஞ்சப் பணத்தைக் கொண்டு சட்டவிரோதப் பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகவும் தகவல் கிடைத்தது. அதனால், திடீர் சோதனை நடத்தப்பட்டது. டாஸ்மாக் ஊழியர் ஒருவர் லஞ்சம் வாங்கினால் அதன் சங்கிலி என்ன என்பது குறித்துத் தெரிந்து கொள்ள வேண்டாமா? இதற்கும் இந்த ஊழலில் உயர் அலுவலர்களுக்கும் தொடர்பு இருக்கிறதா?  எனத் தெரிந்து கொள்ள வேண்டாமா? இதற்காகத் தான் தலைமை அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டது.

டாஸ்மாக் முறைகேடு மூலம், ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் சட்டவிரோதமான பணப் பரிமாற்றம் நடந்தது சோதனையில் தெரியவந்துள்ளது. டெண்டர், மதுபானங்கள் கொள்முதல் என அனைத்திலும் ஊழல் முறைகேடு நடந்துள்ளது. கூடுதல் விலைக்கு மதுபானம் விற்கப்பட்டதை மேற்பார்வையாளர்களே ஒப்புக்கொண்டுள்ளனர்.

இந்த முறைகேட்டை மறைப்பதற்கு உயர் அலுவலர்களுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளது. அதுதொடர்பான அனைத்து ஆவணங்களும் தலைமை அலுவலகத்தில் தான் பாதுகாத்து வைக்கப்படும் என்பதால் அங்கு சரியான நேரத்தில் சரியான முறையில் சோதனை நடத்தப்பட்டது. அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான ஆவணங்களும் தலைமை அலுவலகத்தில் உள்ளது. அமலாக்கத்துறை குறிப்பிட்ட முறையில் தான் விசாரணை நடத்த வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட முடியாது.

எந்த முறைகேட்டிலும் ஈடுபடவில்லை என்றாலும் முறைகேடு நடந்ததற்கான ஆவணங்களை மறைப்பதும் ஊழல் குற்றம் தான். சம்பந்தப்பட்ட நபர் ஊழல் தடுப்பு வழக்கில் குற்றம் சாட்டபட்டவராக இல்லை என்றாலும் சாட்சியாக அவரைச் சேர்க்கலாம் என்று அமலாக்கத்துறைக்கான சட்டம் கூறுகிறது" என வாதிட்டார்.

இவரது வாதம் நிறைவடையாதததால், இந்த வழக்கு இன்று வியாழக்கிழமைக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் டாஸ்மாக் மற்றும் தமிழ்நாடு அரசு தரப்பு வாதங்கள் முடிவடைந்து விட்டதால், ஏப்ரல் 22- ஆம் தேதி எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...