முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வஃக்ப் திருத்தச் சட்டம் நிறைவேற்றம் உபியில் குகன் பிறந்த நாள் விழா

இராமாயணத்தில் ஸ்ரீ இராமரின் நண்பனான குகனின் பிறந்தநாளை முன்னிட்டு பிரயாக்ராஜ் நகரில் ஸ்ரீ ராமர் மற்றும் குகன் தொடர்பான கண்காட்சியை


உத்திரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் துவங்கி வைத்தார்.  பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார் முதல்வரின் மீனவர் திட்டத்தின் கீழ் 1,400 மீனவர்களுக்கு ரூபாய். 20 கோடி மதிப்பிலான உதவிகளையும் வழங்கினார்.


நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் யோகி ஆதித்யநாத், “பிரயாக்ராஜ் போன்ற புராண இடங்கள் அதன் முக்கியத்துவத்தைப் பெறுவதை சிலர் விரும்புவதில்லை. ஏனென்றால் அவர்களின் வாக்கு வங்கி அவர்களுக்கு முக்கியம். வக்ஃபு வாரியம் என்ற பெயரில், பிரயாக்ராஜ் நகரிலும், பிற நகரங்களிலும் உள்ள நிலங்களை அவர்கள் கைப்பற்ற முயன்றனர்.  நாங்கள் மஹா கும்பமேளாவுக்கு ஏற்பாடு செய்த போது, ​​பிரயாக்ராஜில் உள்ள கும்பமேளாவும் வக்ஃபு நிலம் என்று வக்ஃப் வாரியம் தன்னிச்சையாக அறிக்கை வெளியிட்டு உரிமை கோரியது. அது வக்ஃபு வாரியமா அல்லது ‘நில மாஃபியா’ வாரியமா?

இராமாயணத்தில் ஸ்ரீ ராமரின் நண்பனான குகனின் பிறந்தநாளை முன்னிட்டு பிரயாக்ராஜ் நகரில் ஸ்ரீ ராமர் மற்றும் குகன் தொடர்பான கண்காட்சியை முதல்வர் யோகி ஆதித்யநாத் தொடங்கிவைத்தார். மேலும், பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது 

நிகழ்ச்சியில் பேசிய யோகி ஆதித்யநாத், “பிரயாக்ராஜ் போன்ற புராண இடங்கள் அதன் முக்கியத்துவத்தைப் பெறுவதை சிலர் விரும்புவதில்லை. ஏனென்றால் அவர்களின் அரசியல் வாக்கு வங்கி அவர்களுக்கு முக்கியம்.

வக்ஃபு என்ற பெயரில், பிரயாக்ராஜ் நகரிலும், பிற நகரங்களிலும் உள்ள நிலங்களை அவர்கள் கைப்பற்ற முயன்றனர். 



உத்தரப் பிரதேசத்திலிருந்த மாஃபியாக்களை நாங்கள் ஏற்கெனவே அழித்துவிட்டோம். வக்ஃபு வாரியத்தின் தன்னிச்சையான போக்கைக் கட்டுப்படுத்தும் விதமாக, தற்போது வக்ஃபு திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்காக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு நாங்கள் நன்றி கூறுகிறோம். இந்த மசோதா இன்று மாநிலங்களவையிலும் நிறைவேறும்.” எனத் தெரிவித்தார். வஃக்ப் வாரியப் பிரச்னையில் சிக்கிய 1800 ஆண்டுகள் பழமை வாய்ந்த தமிழ்நாடு திருச்செந்துறை கோவில் என நாடாளுமன்ற மாநிலங்களவையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு 



வக்ப் வாரிய சட்டத்திருத்த மசோதா குறித்த விவாதத்தின் மீது பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழகத்தின் திருச்செந்துறை கிராமத்தில் நடந்த நிகழ்வை மேற்கோள் காட்டினார். பிரச்னையில் சிக்கிய 1,800 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில் குறித்துக் குறிப்பிட்டார்.

வஃக்ப் வாரிய சட்டத்திருத்த மசோதா மீதான விவாத்தில் "தமிழகத்தில் 1800 ஆண்டுகள் பழமை வாய்ந்த சந்திரசேகர சுவாமி கோவில் ஸ்ரீ ரங்கம் வட்டம் திருச்செந்துறையில் உள்ளது. இங்கு தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட மக்கள் வாழ்ந்து வந்தனர். 408 ஏக்கர் நிலம் தொடர்பாக பிரச்னைகள் இருந்து வந்தது. இக்கிராம மக்கள், தங்களுக்குள் நிலங்களை வாங்கும் போதும், விற்பனை செய்யும் போதும், வக்ஃப் வாரியத்திடம் தடையில்லாச் சான்று பெற்று வர வேண்டும் என அவர்களிடம் கூறப்பட்டது  டிஜிட்டல் மயமாக்கல் காரணமாக, மாவட்ட ஆட்சியர் தவறான தகவல்களைப் பதிவு செய்ததால், முழு கிராமமும் தவறான பதிவில் சேர்க்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கிராமவாசியும் தனது நிலம் தொடர்பாக ஏதேனும் செய்ய வேண்டி இருந்தால், அதற்கு வக்ஃப் வாரியத்திடம் தடையில்லா சான்று பெற வேண்டுமா?


விஷயம் உண்மையாக இருந்தும், அலுவலர்கள் தவறாகப் பதிவு செய்யாமல் உண்மையாகப் பதிவு செய்ததால், கிராம மக்கள் ஏன் அங்கு வருகிறார்கள், தங்களுக்கும் இதற்கும் எந்தத் தொடர்புமில்லை என வக்ஃப் வாரியத்தால் கூற முடியாதா?ஆனால், அப்படி ஏதுவும் நடக்கவில்லை. ஏழை மக்கள் தலைமுறை தலைமுறையாக அங்கு வசிக்கும் போதும், அந்த நிலம் வேறு ஒருவருக்குச் சொந்தமானது எனக் கூறிக் கொண்டே இருந்தார்கள். கோவிலின் நிலை என்ன? வஃக்ப் வாரியத்தால் கோவில் கட்டப்பட்டதா? வரலாறு என்ன அது தெரியும். இவ்வாறு நிர்மலா சீதாராமன் பேசினார். இந்த நிலையில் உத்திரப் பிரதேசத்தில் ரம்ஜான் விழா அன்று முஸ்லிம்கள் சாலைகளில் தொழுகை நடத்த பல இடங்களில் முயற்சித்தனர். முராதாபாத்தில் கல்சஷீத் பகுதியிலுள்ள முஸ்லிம்களின் ஈத்கா மைதானத்தில் தொழுகை நடத்தச் சென்றவர்களை காவல் துறையினர் தடுத்தனர். அங்கு இருதரப்பினர் இடையே மோதல் சூழ்நிலையும் உருவானது. இந்த ஈத்காவில் ஒரே நேரத்தில் 30 ஆயிரம் பேர் தொழுகை நடத்தும் வசதியுள்ளது. இதற்கும் அதிகமான எண்ணிக்கையில் அங்கு முஸ்லிம்கள் தொழுகை நடத்துவதற்க்குத் திரண்டதால் அவர்களை அங்கு பாதுகாப்பிற்கு இருந்த காவல்துறையினர் தடுத்தனர். ஈத்கா வில் இடமில்லாத நிலையில் மற்றொரு ஷிப்டாக மேலும் ஒரு சிறப்புத் தொழுகை நடத்தும் படி காவல் துறையினர் கூறினர் சஹரன்பூரில் ஈத் தொழுகைக்கு வந்தவர்கள் பாலஸ்தீன நாட்டின் கொடிகளையும் கைகளில் கொண்டு வந்தனர். மேலும் பலர் கைகளில் கருப்பு பட்டை அணிந்து வந்தனர். தொழுகைக்குப் பின் சிலர் எதிர்ப்புக் கோஷங்களையும் எழுப்பினர். இதில் தலையிட்டு உத்திரப் பிரதேச காவல் துறை முஸ்லிம்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இதேபோல், மீரட்டின் சில மசூதிகளிலும் முஸ்லிம்கள் இடமின்மையால் சாலைகளில் தொழுகை நடத்த முயற்சித்தனர்.



சாலைகளில் ரம்ஜான் தொழுகைக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் உத்திரப் பிரதேசத்தில் காவல்துறையைக் கண்டித்து முஸ்லிம்கள் கோஷம் எழுப்பினர்.

இந்நிலையில், சாலைகளில் தொழுகை நடத்த விதிக்கப்பட்ட தடையை கண்டித்து, மீரட் நகர தெருக்களில் பல இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.

அவற்றில், “முஸ்லிம்கள் மட்டும் தெருக்களில் தொழுகை நடத்த வில்லை. இந்துக்கள் தெருக்களில் ஹோலி கொண்டாடு கிறார்கள், சிவராத்திரியும் தெருக்களில் கொண்டாடப்படுகிறது. காவடிகளுடன் தெருக்களில் வலம் வருகிறார்கள். ராமநவமி யாத்திரையும் தெருக்களில் நடத்தப்படுகிறது. தீபாவளியன்று தெருக்களில் பட்டாசு வெடிக்கப்படுகிறது, விநாயகர் சதுர்த்தி தெருக்களில் கொண்டாடப்படுகிறது. இந்த நல்ல சூழ்நிலையை காவல் துறையினர் கெடுக்க முயற்சிக்கக் கூடாது” என்ற வாசகங்கள் இருந்தன.




இதற்கிடையில், முஸ்லிம்கள் சாலைகளில் தொழுகை நடத்த பல இடங்களில் முயற்சித்தனர். முராதாபாத்தில் கல்சஷீத் பகுதியிலுள்ள முஸ்லிம்களின் ஈத்கா மைதானத்தில் தொழுகை நடத்த சென்றவர்களை காவல்துறையினர் தடுத்தனர். அங்கு இருதரப்பினர் இடையே மோதல் சூழல் உருவானது.

இந்த ஈத்காவில் ஒரே நேரத்தில் 30 ஆயிரம் பேர் தொழுகை நடத்தும் வசதி உள்ளது. இதற்கும் அதிகமான எண்ணிக்கையில் அங்கு முஸ்லிம்கள் தொழுகைக்கு திரண்டதால் அவர்களை அங்கு பாதுகாப்பிற்கு இருந்த காவல்துறையினர் தடுத்தனர்.            

டெல்லியின் ஜாமியா மசூதியிலும் ரம்ஜான் சிறப்புத்தொழுகை அமைதியாக நடைபெற்றது. அப்போது வக்பு சட்டத் திருத்த மசோதாவுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், முஸ்லிம்கள் கைகளில் கருப்பு பட்டை அணிந்து வந்தனர். இந்த நிலையில்  பிஹார் மாநிலத்தின் முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி வக்ஃபு சட்டத் திருத்த மசோதாவுக்கு ஆதரவளித்த நிலையில், அக்கட்சியின் இஸ்லாமியப் பிரமுகர்கள் இருவர் ராஜினாமா செய்தனர்.


மக்களவையில் நடந்த காரசார விவாதத்துக்குப் பிறகு வக்ஃபு திருத்த மசோதா நிறைவேறியது.  ஆதரவாக 288 உறுப்பினரும், எதிராக 232 உறுப்பினரும் வாக்களித்தனர். அதிகாலை 2 மணியளவில் மசோதா நிறைவேறியது. தற்போது மாநிலங்களவையில் விவாதம் நடைபெறுகிற நிலையில், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் பிரமுகர்களான முகமது காசிம் அன்சாரி, முகமது நவாஸ் மாலிக் இருவரும் அக்கட்சியிலிருந்து விலகுவதாக பிஹார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு கடிதம் எழுதினர். அதில், “ எங்களைப் போன்ற லட்சக்கணக்கான இந்திய முஸ்லிம்கள், நீங்கள் முற்றிலும் மதச்சார்பற்ற சித்தாந்தத்தின் அடிப்படையில் செயல்படக்கூடியவர் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருந்தார்கள் என்பதை நான் உரிய மரியாதையுடன் கூற விரும்புகிறேன். ஆனால் இப்போது அந்த நம்பிக்கை உடைந்து விட்டது. இந்திய முஸ்லிம்களும் எங்களைப் போன்ற தொண்டர்களும் கட்சியின் நிலைப்பாட்டால் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இந்த மசோதா அரசியலமைப்பின் பல அடிப்படை உரிமைகளை மீறுகிறது. இந்த மசோதாவின் மூலம், இந்திய முஸ்லிம்கள், அவமதிக்கப்படுகிறார்கள். நீங்களோ அல்லது உங்கள் கட்சியோ இதை உணரவில்லை. என் வாழ்நாளில் பல வருடங்களை கட்சிக்காகக் அர்ப்பணித்ததில் நான் மிகவும் வருத்தப்படுகிறேன்” எனக் கூறப்பட்டுள்ளது.

மசோதாவின் திருத்தங்கள் மத்திய வக்ஃபு கவுன்சிலில் 22 உறுப்பினர்களில் 2 பேர் முஸ்லிம் அல்லாதவர்களைச் சேர்க்க வேண்டும். மாநில வக்ஃபு கவுன்சிலில் 11 உறுப்பினர்களில் 2 பேர் முஸ்லிம் அல்லாதவர்களாக இருக்க வேண்டும்.

தொடர்ந்து 5 ஆண்டுகளாக முஸ்லிம்களாக உள்ளவர்கள் மட்டுமே தங்கள் சொத்துகளை வக்பு வாரியத்துக்கு தானமாக வழங்க முடியும். 2013-ஆம் ஆண்டுக்கு முன்பிருந்த நிலை மீட்கப்படும். வக்பு வாரியம் உரிமை கோரும் நிலங்கள் தொடர்பான புகார்களை வருவாய் நீதிமன்றம், உரிமையியல் நீதிமன்றம், உயர் நீதிமன்றங்களும் விசாரணை நடத்த முடியும்.

வக்ஃபு தீர்ப்பாயத்தின் முடிவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய முடியும். வக்ஃபு வாரியத்துக்கு நிலம் தானமாக அளிக்கப்பட்டிருந்தால் மட்டுமே அந்த நிலம் சட்டப்பூர்வமானது. வேறு இடத்தில் மசூதி கட்டப்பட்டிருந்தால், அந்த இடம் வக்ஃபு வாரியத்தின் சொத்தாகக் கருதப்படாது.

வக்ஃபு வாரியத்தில் 2 பெண்கள் மற்றும் இதர மதங்களைச் சேர்ந்த 2 பேர் உறுப்பினராக இணைக்கப்படுவர். தாவூதி போரா உள்ளிட்ட பிரிவினருக்காக தனி வக்ஃபு வாரியம் அமைக்கப்படும். வக்பு சொத்துகளை முறைப்படி பதிவு செய்ய வேண்டும். வக்ஃபு சொத்து விவரங்கள் மாவட்ட வருவாய்த்துறை துறை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். என்பதாகும். "வக்ஃப் மசோதா - அஇஅதிமுக மாநிலங்களவை உறுப்பினர்கள் எதிர்ப்பு"

சிறுபான்மையினர் நலன் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது அஇஅதிமுகவின் அடிப்படைக் கொள்கை. மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்ட வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதாவுக்கு  அஇஅதிமுக உறுப்பினர்கள் எதிராக வாக்களித்தனர்.    இந்த நிலையில், ஹைதராபாத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான அசாதுதின் ஒவைசி வக்ஃபு வாரியத் சட்டத்திருத்த மசோதா மீதான விவாதத்தில் பேசியதாவது:

"வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதா அரசியலமைப்பிற்கு விரோதமானது. தென் ஆப்பிரிக்காவில் வெள்ளையர் சட்டங்களை ஏற்றுக் கொள்ளாமல் அதனை மகாத்மா காந்தி கிழித்தெறிந்தார். அதுபோலவே, நானும் இந்தச் சட்டத்தைக் கிழிக்கிறேன்.

கோவில்கள் மற்றும் மசூதிகளின் பெயரால் இந்த நாட்டில் பிரிவினையை உருவாக்க பாரதிய ஜனதா கட்சி விரும்புகிறது. இதை நான் கண்டிக்கிறேன். மேலும் பத்து திருத்தங்களை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் எனத் தெரிவித்தார்.வக்ஃப் வாரியத்தின் சொத்து என அறிவிக்கும் சட்ட அதிகாரம் பிரிவு 40 நீக்கம் . வக்ஃப் திருத்த மசோதா மக்களவையில் 288 வாக்குகள் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது . ஆதரவு : 288 , எதிர்ப்பு : 232,

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு நிறைவேற்றி உள்ளது .பாஜக தேர்தல் அறிக்கையில் கூறியபடி ஸ்ரீ ராமர் கோவில்,  ஜம்மு காஷ்மீர் ஆர்டிகிள் 370, CAA, முத்தலாக், Waqf Amendment, ஆகிய பல நிறைவேற்றப்பட்ட நிலையில் இனி பொது சிவில் சட்டம், ஒரே நாடு ஒரே தேர்தல், தான் பாக்கி, இவை எல்லாம் கடந்த தேர்தலில் அறிக்கை தகவல், தேர்தல் அறிக்கை வாக்குறுதிகள் நிறைவேற்றாத மற்ற கட்சிகள் இதைப் போல பேச முடியாது என்பதே இங்கு பொது நீதி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...