2011 ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்துதலை ரத்து செய்யக் கோரிய கர்நாடக மாநிலத்தின் பாரதிய ஜனதா கட்சித் தலைவர் பி.எஸ். எடியூரப்பாவின் மனு மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் திங்கட்கிழமை ஒத்திவைத்தது.
ஏற்கனவே ஒரு பெரிய அமர்வால் பரிசீலிக்கப்படவிருந்த சில சட்டக் கேள்விகளை அது எழுப்பியதைக் குறிப்பிட்ட பின்னர், உச்ச நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்தது. கர்நாடக முதலமைச்சராக பி.எஸ்.எடியூரப்பா இருந்தபோது ஊழல் குற்றச்சாட்டுகள் எடியூரப்பாவுக்கு எதிரான வழக்கில் அடங்கும். இந்த வழக்கு சட்டப்பூர்வமாக நிற்குமா என்பது குறித்து நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பளிக்க இருந்தது.
இருப்பினும், நிலுவையில் உள்ள மற்றொரு வழக்கு ஏற்கனவே இதே போன்ற சட்டக் கேள்விகளை எழுப்பியதால், அவை ஒரு பெரிய அமர்விற்கு பரிந்துரைக்கப்பட்டதால், டிவிஷன் பெஞ்ச் எடியூரப்பாவின் மனுவை அந்த வழக்கோடு இணைத்தது விசாரணை நடத்தும்கர்நாடக பா.ஜனதா மூத்த தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான எடியூரப்பா, கடந்த 2006-ஆம் ஆண்டு துணை முதல்வராக . இருந்த போது பெங்களூரு வடக்கு தாலுகாவில் ஹார்டுவேர் பூங்கா அமைக்க கர்நாடக தொழில் மேம்பாட்டு வாரியத்தால் நிலம் கையகப்படுத்தப்பட்டது.
அதன் பிறகு அந்த நிலம் அரசாணையிலிருந்து விடுவிக்கப்பட்டது. இதனால் அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாகவும், முறைகேடு நடந்துள்ளதாகவும் கூறி பி.எஸ்.எடியூரப்பா மீது பெங்களூரு நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
விசாரணை நடத்திய பெங்களூரு நீதிமன்றத்தில் எடியூரப்பாவுக்கு எதிரான மனு தள்ளுபடி செய்ததை எதிர்த்து கர்நாடகா மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பு ரத்து செய்யப்பட்டு,
எடியூரப்பா மீதான புகார் குறித்து விசாரிக்கும்படி உத்தரவிட்டது. அதை எதிர்த்து பி.எஸ். எடியூரப்பா உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்த மனு மீதான விசாரணை நிறைவடைந்ததை அடுத்து தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பை அறிவித்தது. அதில் இந்த வழக்கை அதிக நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றுவதாக நீதிபதிகள் அறிவித்தனர்.
கருத்துகள்