மதுரை கலைஞர் கருணாநிதநகரில் ஸ்ரீ இளம் மழலையர் பள்ளி (கிண்டர் கார்டன் ப்ளே ஸ்கூல்)
செயல்படுகிறது. அதில் உத்தங்குடியைச் சேர்ந்த அமுதன் மகள் ஆருத்ரா (வயது 4) பயின்றார்.
தற்போது பள்ளிக்கு விடுமுறைக் காலம் என்பதால் குறிப்பிட்ட 10 குழந்தைகளுக்கு ஸ்பீச் தெரபியுடன் கூடிய சிறப்பு வகுப்பு நடைபெற்ற நிலையில் வகுப்பில் சேர்ந்த ஆரூத்ரா இன்று காலை பள்ளிக்கு வந்து போது பள்ளி வளாகத்தில் மற்ற குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தார் சரியாக மூடாமல் இருந்த 12 அடி ஆழமான தண்ணீர் இருந்த தொட்டியில் தவறி விழுந்துள்ளார். அதைப் பார்த்த அங்கிருந்த ஆசிரியர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தந்தனர்.
அரை மணி நேரத்திற்கும் மேலாக தண்ணீர் தொட்டியில் மூழ்கிக் கிடந்த குழந்தையை தீயணைப்பு துறையினர் வந்த பின்னர் தான் மீட்டுள்ளனர். பின் மருத்துவமனையில் கொண்டு சென்ற நிலையில் சிறுமி உயிரிழந்தார். தொடர்ந்து காவல்துறையினரும், கல்வித்துறை அலுவலர்களும் அங்கு வந்து விசாரணை நடத்தினர். ஆசிரியர்களின் கவனக்குறைவாலேயே சிறுமி இறந்துள்ளதால் பள்ளியின் தாளாளர் திவ்யா மற்றும் ஐந்து ஆசிரியர்கள் விசாரணைக்காக தள்ளாகுளம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். இந்தச் சம்பவம் மதுரை கே.கே.நகர் பகுதியில் நடந்த நிலையில், ``மதுரை மாவட்டத்தில் பள்ளி மற்றும் மழலையர் பள்ளிகளில் அனுமதியின்றி கோடை காலப் பயிற்சி வகுப்புகள் நடத்தக்கூடாது'' என மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா உத்தரவிட்டுள்ளார்.
மதுரை மாவட்டம் கே.கே. நகர் பகுதியில் ஏராளமான தனியார் மழலையர் பள்ளிகள் அனுமதி இல்லாமல் இயங்கும் நிலையில். அத்தகைய சூழலில் தான் அந்தப் பகுதியில் இந்தப் பள்ளியும் இயங்கி உள்ளது ஆக கல்வித்துறையில் பணி செய்து வரும் அலுவலர்கள் லஞ்ச லாவண்யம் காரணமாக அரசு முறையான அனுமதி பெறாமல் நடத்தும்
இதுபோன்ற பள்ளிகள் சமுதாயச் சீர்கேடு, இதை இப்போது தான் சம்பவம் நடந்த பின்னர் தடுக்கும் இந்த ஊழல் வாதிகள் தான் நம் நாட்டின் சாபக்கேடு. தண்ணீர் தொட்டியில் குழந்தை பலியான பள்ளிக்கு சீல் வைப்பு என்பது கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வது போல் அமைகிறது. தகவலறிந்து சம்பந்தப்பட்ட மழலையர் பள்ளிக்கு மதுரை மாநகர தெற்கு காவல்துறை ஆணையர் விசாரணை நடத்தி
கருத்துகள்