வெகுசனங்கள் அடிப்படை உரிமைக்கு காத்திருக்கும் நிலையில் அரசு ஊழலில் திளைபதை ஏற்க முடியாது உயர்நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவு
சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகள் அரசின் உயர் அலுவலர்களான மனுதாரர்களை நோக்கி எழுப்பிய கண்டணம் இது
"வெகுசனங்கள் அடிப்படை உரிமைகளைப் பெறவே காத்திருக்கும் பொழுது, ஊழலில் திளைத்துக் குளித்த உங்களுக்கு காத்திருக்க முடியாதா? வழக்கு இறுதிக்கட்ட விசாரணைக்காக உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது. டாஸ்மாக் தரப்பில் மூத்த வழக்கறிஞர் விகாஸ்சிங் இறுதி வாதம் செய்த போது டாஸ்மாக் மீது'அமலாக்கத்துறைக்கு சோதனை நடத்த அதிகார வரம்பில்லை. மிகப்பெரிய ஊழல் நடைபெற்றதாக அமலாக்கத்துறை எவ்வாறு சொல்ல முடியும்?' என்றார்.
அமலாக்கத்துறை தரப்பில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இறுதியில் வாதிடப்பட்ட போது. அரசிடம் ஊதியம் பெறும் அலுவலர்கள் அரசு ஊழலை ஆதரித்து மனு செய்தது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் என வாதிட்ட அரசு சொலிசிட்டர் ஜெனரல் தரப்பில் ஆக அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததையடுத்து இன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று ஏற்கனவே நீதிபதிகள் அறிவித்ததன் படிஇன்று தீர்ப்பு வழங்கினார்கள். அமலாக்கத்துறையின் விசாரணைக்கு தடை இல்லை என்று கூறி நீதிபதிகள், அமலாக்கத்துறையின் சோதனைக்கு எதிராக தமிழ்நாடு அரசு சார்பில் உயர் அலுவலர்கள் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தனர். தீர்ப்பில் கூறியுள்ளதாவது:-
நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்பது கோடிக்கணக்கான மக்களின் நிதி மற்றும் உரிமை சார்ந்ததாகும். இதில் மோசடி நடந்தால் கண்டு கொள்ளாமல் இருக்க முடியாது.
இது போன்ற நிதி மோசடி வழக்குகள் தேசத்தில் பொருளாதார வளர்ச்சிக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். இந்த வழக்கைப் பொறுத்தவரை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக சோதனை நடத்துவதாக மனுதாரர்கள் கூறுகிறார்கள்.
ஆனால் அரசியலை பொருத்தவரை 'ஏ' பார்ட்டி ஆட்சியில் இருக்கும் போது 'பி' பார்ட்டி மீது நடவடிக்கை எடுக்கிறார்கள். 'பி' பார்ட்டி ஆட்சியில் இருக்கும்போது 'ஏ' பார்ட்டி மீது நடவடிக்கை எடுக்கிறார்கள். இதை நீதிமன்றங்கள் கவனிக்க முடியாது. குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருந்தால் மட்டுமே நீதிமன்றத்தில் பரிசீலிக்க முடியும்.
இந்த வழக்கைப் பொருத்தவரை குற்றச்சாட்டுக்களுக்கு அடிப்படையில் முகாந்திரம் உள்ளதால் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதை சட்ட விரோதம் என்று அறிவிக்க முடியாது.
டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் மற்றும் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறோம். அமலாக்கத்துறை நடத்திய சோதனை அடிப்படையில் சட்டப்படி தொடர்ந்து நடவடிக்கை எடுக்கலாம்.
இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் கூறி உள்ளனர்.
கருத்துகள்