மதுரை பட்டா மாறுதல் செய்ய ரூபாய்.5,000 லஞ்சம் வாங்கிய சர்வேயர் பணி செய்யும் அன்புராஜ், வயது 35, கைது.
மதுரை வளையங்குளம் சுரேஷ் தனக்குச் சொந்தமான நிலத்திற்கு பட்டா வாங்க முயற்சி செய்துள்ளார். அவர் பட்டா ஏற்பாடு செய்து தருமாறு, சர்வேயர் அன்புராஜ் என்பவரை அணுகினார்.
அவர் பட்டா ஏற்பாடு செய்ய ரூபாய்.5000 லஞ்சமாகக் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத, சுரேஷ் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் புகார் அளித்தார். அவர்கள் அறிவுறுத்தல் படி, பினாப்தலின் இரசாயனம் தடவிய ரூபாய்.5 ஆயிரம் பணத்தை சர்வேயர் அன்புராஜிடம் சுரேஷ் அரசு சாட்சிகள் முன்னிலையில்
கொடுத்தபோது, மறைந்திருந்த ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்சம் ஒழிப்புத்துறையினர் சர்வேயர் அன்புராஜை
பணம் பெற்ற கையுடன் பிடித்துக், கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்தி பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் சேர்த்தனர்.
கருத்துகள்