முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பெண் தலையாரி தற்கொலைக்கு அலுவலர்கள் லஞ்ச விவகாரம் தான் காரணம் மகள் புகாரில் விசாரணை

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் நேரு நகரைச் சேர்ந்தவர்,


அச்சிறுப்பாக்கம் தலையாரி (கிராம உதவியாளர்) 45 வயதான கீதா. கிராம நிர்வாக அலுவலகராக பணி செய்யும் முத்துக்குமாரியை சந்திக்க வரும் சில ஆண்கள், மதுபோதையில் வந்து, கிராம உதவியாளரான கீதாவிடம் தகராறு செய்வதாக புகார் எழுந்தது. மேலும், கிராம நிர்வாக அலுவலகத்துகு சான்றிதழ் பரிந்துரை கேட்டு வரும் பொதுமக்களிடம் தனக்கு லஞ்சம் வாங்கி கொடுக்கும்படி கிராம நிர்வாக அலுவலர் முத்துக்குமாரி கட்டாயப்படுத்தியதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. கிராம நிர்வாக அலுவலர் முத்துமாரி லஞ்சம் வாங்குவதில் கில்லாடியாம். அவர் பயனாளிகளிடம் லஞ்சம் வாங்காமல் எந்தவிதமான பரிந்துரை கையொப்பமும் போடுவதில்லை என்ற குற்றச்சாட்டும் உண்டு. இந்தநிலையில், 'இனி நான் பொதுமக்களிடம் நேரடியாக லஞ்சம் வாங்க மாட்டேன். தலையாரியான நீதான் வாங்க வேண்டும். உன் மூலம்தான் என்னிடம் லஞ்சப்பணம் வரவேண்டும்' என தலையாரி கீதாவை லஞ்சம் வாங்கித்தரச்சொல்லி, கிராம நிர்வாக அலுவலர் முத்துமாரி கட்டாயப்படுத்தி வந்துள்ளார். அதற்கு உடன்பாடில்லாததால் இதுகுறித்து, வருவாய் ஆய்வாளர் நாகராஜன் என்பவரிமும் மதுராந்தகம் வட்டாட்சியர், கோட்டாட்சியர் ரம்யா ஆகியோரிடம் கிராம நிர்வாக அலுவலர் முத்துமாரி மீது, புகார் அளித்துள்ளார் கிராம உதவியாளர் கீதா. ஆனால், அவர்களும் லஞ்சம் வாங்குவதில் கில்லாடி என்பதால் "இதுல என்ன இருக்கு? லஞ்சம் வாங்கிக்கொடுக்கவேண்டிதானே?” என்கிற ரீதியில்  கூறியுள்ளார். அதற்கு உடன்படாததால் கீதாவை, மேலும் அணைவரும் கார்னர் செய்ய ஆரம்பித்ததாக கூறப்படுகிற நிலையில் தான், தமிழ்நாடு அரசு உத்தரவின்படி, ஆட்சேபணையில்லா வீட்டுமனைகளுக்கு பட்டா வழங்க ஏப்ரல் மாதம் 17 ஆம் தேதி அச்சிறுப்பாக்கம் பகுதியில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டபோது, தலையாரி கீதா கால தாமதமாக பணிக்குச் சென்றதாக கூறப்படுகிறது. இதனால், கோபமடைந்த கோட்டாட்சியர் ரம்யா, அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் கீதாவை அவமானப்படுத்தும் விதமாகத் திட்டியதாகக் கூறப்படுகிறது. அதாவது, கீதா ஏற்கனவே கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட அலுவலர்களுக்கு லஞ்சம் வாங்கிக்கொடுப்பதில்லை என்பதை மனதில் வைத்துக்கொண்டு, இதுபோன்றே அடிக்கடி அவமனாப்படுத்தியதால் கீதா மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, லஞ்ச ஊழல் அலுவலர்களின் நேரடி நெருக்கடி அதிகமானதால், அச்சிறுப்பாக்கம் கிராம நிர்வாக அலுவலகத்தில் வைத்து, கீதா விஷம் குடித்துத் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதைப் பார்த்த ஊர் பொதுமக்கள், உடனடியாக அவரை மீட்டு அச்சிறுப்பாக்கம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனையில் சேர்த்து கடந்த 5 நாட்களாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதி மாலை, கீதா பரிதாபமாக உயிரிழந்தார். உயிரிழந்த கீதாவின் மகள் லாவண்யா என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்த அச்சிறுப்பாக்கம் காவல் நிலையத்தில் ஆய்வாளர் சரவணன், விசாரணை நடத்திவருகிறார். கிராம நிர்வாக அலுவலர் முத்துமாரி, வருவாய் ஆய்வாளர் நாகராஜன், கோட்டாட்சியர் ரம்யா உள்ளிட்டோர் லஞ்சம் வாங்கிக்கொடுக்கச் சொல்லி, கடந்த எட்டு மாதங்களாக தனது தாய் கீதாவுக்கு கொடுத்த நெருக்கடி, மற்றும் மன உளைச்சல்தான் அவர் தற்கொலை செய்வதற்குக் காரணம் எனப் புகார் அளித்துள்ளார்.

இந்த நிலையில்தான், கிராம நிர்வாக அலுவலர் முத்துமாரி கையொப்பம் வாங்க வந்த பொதுமக்களில் ஒருவரிடம் லஞ்சம் வாங்கி, சிரித்தபடி தனது Bag-ல் வைக்கும் காணொளிக் காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ஆனால் அங்கு விஜிலென்ஸ் அலுவலகம் ஆழ்ந்த தூக்கத்தில் உள்ளதாக மக்கள் மத்தியில் பேச்சு.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...

சோழப் பேரரசி வானதி எழுப்பிய மூவர் கோவில்

முதலாம் இராஜேந்திர சோழரின் தாய்  வானவன் மாதேவி எனும் அரசி வானதி, சோழர்களின் வரலாற்றில் பெரும் புகழ் மாமன்னர் அருள்மொழித் தேவன் எனும் இராஜராஜசோழச் சக்கரவர்த்தி மீது இணையில்லாத காதல் மங்கை கொடும்பாளூர் இளவரசி வானதியை "பொன்னியின் செல்வன்" கதை படித்த யாரும் மறக்க முடியாது. சோழர் கடற்படையின் பரப்பை இலங்கை வரை  சென்று வென்று வந்த வரலாற்று நிகழ்வுகளின் மூலம் குறுநில மன்னர்கள் அல்லது வேளிர்  துணை நின்றார்கள் அதில் ஈழத்துப் பட்டம்  வென்ற கொடும்பாளூர் வேளிர் மகளான வானதி இளம் வயதிலேயே தாய் தந்தையை இழந்தவர். கொடும்பாளூர் சிற்றரசன் அதாவது வேளிர் சோழ சாம்ராஜ்யத்தின் சேனாதிபதி யாகவும் இருந்த சிறிய தந்தை குறுநில மன்னர் பூதி விக்ரமகேசரியால் வளர்க்கப்பட்டவர் தான் வானவன் மாதேவி எனும் அரசி வானதி. கொடும்பாளூர் பிறந்து திருக்கோவிலூரை பின்னர் ஆண்ட மலையமானின் மகள்  “மேலும் வானவன்மாதேவி மன்னர் ராஜராஜ சோழர் மறைந்த உடன் பிரிவாற்றாமல் உடன்கட்டை ஏறி தன் உயிரை மாய்த்துக் கொண்டாள். இதை திருவாலங்காட்டுச் செப்பேடுகள் மூலம் அறியலாம் ஈழத்தில் நடைபெற்ற யுத்தத்திற்காக கொடும்பாளூர்  வேளிர் கடல...