முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வாஹா அட்டாரி எல்லை உடனடியாக மூடப்படுகிறது சிந்து நதி ஒப்பந்தம் ரத்து: சபாஷ் நடவடிக்கை

இரவு 2 மணி நேரத்திற்கும் மேலாகத் தொடரும் உயர் மட்டக் கூட்டம். அதை ஒட்டு மொத்த இந்தியாவும் எதிர்பார்த்துள்ளது. வாஹா அட்டாரி எல்லை உடனடியாக மூடப்படுகிறது.



பாக்கிஸ்தான் தூதரக அதிகாரிகளின் எண்ணிக்கை 30 ஆகக் குறைப்பு இந்தியா - பாகிஸ்தானில் உள்ள தூதரகத்தை மூட உத்தரவு. ஒரு வாரத்தில் மே 1 ஆம் தேதிக்கு முன் தூதரக அதிகாரிகள் நாடு திரும்புவார்கள்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டதிற்குப் பின் வெளியுறவுத் துறைச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி தகவல்.           ஜம்மு - காஷ்மீரின் சுற்றுலா நகரம் அனந்த்நாக் மாவட்டத்திற்குட்பட்ட பெஹல்காமின் பைசாரன் பள்ளத்தாக்குப் பகுதியில் செவ்வாய்க்கிழமை ஏப்ரல் மாதம். 22 ஆம் தேதி சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் சரமாரியாகத் துப்பாக்கிச்சூடு 





 தாக்குதல் நடத்தியதில் 2 வெளிநாட்டவர் உள்பட 28 பேர் கொல்லப்பட்டனர். 20 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலுக்கு பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ஜம்மு - காஷ்மீர் பாதுகாப்பு நிலை குறித்து மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தினார்.

அதில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் செளஹான் உள்ளிட்ட ஆயுதப் படை அதிகாரிகள் கலந்துகொண்டகூட்டத்தில் ஜம்மு - காஷ்மீரின் பாதுகாப்பு நிலை குறித்தும், பாதுகாப்பை அதிகரிக்க மேலும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.




இதேபோன்று இந்தத் தாக்குதல்  குறித்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலும் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றதில். மலைப்பகுதிகளுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பிற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கவும், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பிற்காக அத்தகைய பகுதிகளில் ஆயுதமேந்திய வீரர்கள் முழு பாதுகாப்பில் ஈடுபடுத்தப்படுவர்  பகல்கம் தாக்குதலில் Intelligence Bureau officer மனீஷ்ரஞ்சன்  உயிரிழப்பு,   உரி செக்டார் வழியாக இந்தியாவிற்கு நுழைய முயன்ற இரண்டு பாக்கிஸ்தான் பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். இந்த நிலையில் கூட்டம் நிறைவு பெற்றது..9.15 மணிக்கு கூட்டம் பற்றிய செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.    LOC பாகிஸ்தான் எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டிலிருந்து நமது இராணுவ வீரர்கள் தாக்குதலை தொடுத்து இருக்கிறார்கள்



இரண்டு பாக்கிஸ்தான் தீவிரவாதிகளை சுட்டுக்கொன்றது இந்திய இராணுவம். மேலும் சார்க் விசா மூலமாக இந்தியா வர பாகிஸ்தானியர்களுக்குத் தடை விதிப்பு. அத்துடன் வாகா எல்லை உடனடியாக மூடப்படுகிறது.  இவ்வழியாக வந்த வாகனங்கள் மே 1 க்குள் திரும்ப உத்தரவு காஷ்மீரில் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட அப்பாவி இந்துக்களின் குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல் சொன்ன மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா. மலைப்பகுதிகளுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பிற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கவும், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பிற்காக அத்தகைய பகுதிகளில் ஆயுதமேந்திய பாதுகாப்பு பலப்படுத்த நடவடிக்கை. முஸ்லீம் பெயர் கொண்ட நபர் கொல்லப்பட்டோர் பட்டியலில் உள்ளதென பலரும், குறிப்பாக காங்கிரஸ் நபர்கள் சமூக வலைதளங்களில் பரப்பும் நிலையில் உண்மையில் 




ஒரு உள்ளூர் குதிரை சவாரிக்கு  கூலி பெறும் நபர், சுற்றுலா பயணிகள் மூலம் தினசரி வருமானம் பார்க்கும் நபர் முஸ்லீமாவார், மட்டும் இஸ்லாமிய பயங்கரவாதிகளிடம் துப்பாக்கியைப் பிடுங்க முயற்சித்து சுடப்பட்டார். அவரது பெயரும் இறந்தோர் பட்டியலில் உள்ளது. மற்றவர்கள் அனைவரும் வெளியூர் பயணிகள். அந்தப் பட்டியலிலேயே அவர் உள்ளூர்காரர் என்பதும் உள்ளது.


இதெல்லாம் தெரிய வேண்டும் என்றால் ஒரு சரியான ஆய்வுப் பார்வை தேவை. 

காங்கிரஸாரின் இந்த அணுகுமுறை தவறு என்பது மக்கள் மத்தியில் பொதுவான கருத்து.சிந்து நதிநீர்ப் பங்கீடு ஒப்பந்தம் நிறுத்தப்படுகிறது.சிந்து நதி இனி பாகிஸ்தானிற்குள் பாயாது..     சிந்து நதி நீர் ஒப்பந்தமானது 1960 ஆம் ஆண்டு இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே கையெழுத்தான ஒரு நதி நீர் பகிர்வு ஒப்பந்தம். உலக வங்கியின் மத்தியஸ்தத்தால் உருவாக்கப்பட்ட முக்கியமான ஒப்பந்தம் மற்றும் இன்றுவரை மிகவும் வெற்றிகரமான நீர் பகிர்வு ஒப்பந்தங்களில் ஒன்றாகும்.



சிந்து நதி மற்றும் அதன் துணை நதிகளிலிருந்து வரும் நீர், அங்கு வாழும் மக்களின் உயிர்நாடியாகும். இருப்பினும், படுகையில் உள்ள பல்வேறு ஆறுகளுக்கு இடையே நீர் கிடைப்பதில் பரந்த வேறுபாடு உள்ளது, அதனால் தான் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இணைப்புகா கால்வாய்கள் மற்றும் ஹெட்வொர்க்குகள் போன்ற வடிவங்களில் நீர்ப்பாசன உள்கட்டமைப்பை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது உபரி நீரை ஒருங்கிணைந்த கால்வாய் அமைப்பு மூலம் பற்றாக்குறை பகுதிகள் மற்றும் ஆறுகளுக்கு மாற்றும். இருப்பினும், இது அடிப்படையில் கிழக்கு ஆறுகளான ரவி, சட்லெஜ் மற்றும் பியாஸுக்கு மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டது, மேலும் இந்த ஆறுகள் மற்றும் கால்வாய்களில் உள்ள பகுதிகளுக்கு பயனளித்தது. படிப்படியாக இந்தக் கால்வாய்களில் ஒரு வளமான பகுதி உருவானது. 

பிரிவினையின் போது, ​​இரண்டு முக்கிய தலைமையகங்களான ஃபெரோஸ்பூர் மற்றும் மாதோபூர் தலைமையகங்கள் இந்தியாவில் இருந்ததாலும், கால்வாய் அமைப்பு பாகிஸ்தானில் இருந்ததாலும், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நீர் பகிர்வை எட்ட முடியவில்லை. தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, இறுதியாக, உலக வங்கியின் மத்தியஸ்தத்துடன் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே சிந்து நதி நீர் ஒப்பந்தம் (IWT) 1960 ஆம் ஆண்டில் கையெழுத்தானபோது, ​​நதிப் பகிர்வு அடிப்படையில் நீர் பகிர்வை அடைய முடிந்தது. இரு நாடுகளும் நீர் தாங்கும் சொத்துக்களை விநியோகிப்பதில் தங்களுக்குக் குறைவு இருப்பதாக உணர்ந்தாலும், இந்த ஒப்பந்தம் 58 ஆண்டுகளுக்கும் மேலாக இரு நாடுகளுக்கும் இடையிலான போர்கள் மற்றும் விரோதங்களில் இருந்து தப்பிப்பிழைத்துள்ளது. உரி பயங்கரவாத சம்பவத்திற்குப் பிறகு, இந்திய அரசு ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய முடிவு செய்துள்ளது.

 சிந்து நதி திபெத்தின் அதாவது தென்மேற்கு சீனாவின் உயரமான மலைகளில் உற்பத்தியாகி, திபெத், இந்தியா மற்றும் பாகிஸ்தான் வழியாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK) உள்பட கடந்து 3180 கிலோ மீட்டர் மீட்டர் தூரம் நான்கு நாடுகள் கடந்து கராச்சிக்கு தெற்கே அரபிக் கடலில் கலக்கிறது. இது இந்திய-சீன எல்லைக்கு அருகில் தார் நதியுடன் இணைகிறது. ஜம்மு & காஷ்மீரு க்குள் நுழைந்த பிறகு இது லடாக் மற்றும் ஜான்ஸ்கர் மலைத்தொடர்களுக்கிடையில் பாய்கிறது. இது லடாக் மற்றும் கில்கிட்-பால்டிஸ்தான் பகுதிகள் வழியாக பாய்கிறது. சிந்து நதி ஜம்மு & கே வழியாக பாயும் சராசரி உயரம் கடல் மட்டத்திலிருந்து சுமார் 4000 மீட்டர் ஆகும். இது லேவில் ஜான்ஸ்கர் நதியுடன் இணைகிறது, பாகிஸ்தான் காஷ்மீரில் ஸ்கர்டு அருகே, இது ஷியோக் நதியுடன் இணைகிறது. கில்கிட், கார்ஸ்டாங், டிராஸ், டைகர் மற்றும் ஹன்சா ஆறுகள் மேற்கிலிருந்து சிந்து நதியின் பிற இமயமலை துணை நதிகளாகும். இந்த நிலையில் சிந்து நதிநீர்ப் பங்கீடு ஒப்பந்தம் நிறுத்தப்படுகிறது..சிந்து நதி இனி பாகிஸ்தானிற்குள் பாயாது. மேலும் அட்டாரி-வாகா எல்லை 

பஹல்காம் தாக்குதல் காரணமாக அட்டாரி-வாகா எல்லை மூடப்படுகிறது.

பாகிஸ்தானியர்கள் இந்தியா வருவதற்கான விசா தற்காலிகமாக ரத்து.

SVES விசாவில் தற்போதுள்ள பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்தில் வெளியேற அரசு உத்தரவு.

பாகிஸ்தானுக்கு கடந்த காலங்களில் வழங்கப்பட்ட SVES விசாக்கள் ரத்து.

SAARC விசா விலக்கு திட்டத்தின் கீழ் பாகிஸ்தானியர்கள் இந்தியா வர அனுமதியில்லை.

பாகிஸ்தான் நாட்டு தூதரக அதிகாரிகள் வரும் மே 1ம் தேதிக்குள் இந்தியாவை விட்டு வெளியேறவும் 

பாகிஸ்தான் உடனான தூதரக உதவிகளை குறைக்க முடிவு செய்துள்ளதாக வெளியுறவுத்துறை செயலாளர்  விக்ரம் மிஸ்ரி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...