இரவு 2 மணி நேரத்திற்கும் மேலாகத் தொடரும் உயர் மட்டக் கூட்டம். அதை ஒட்டு மொத்த இந்தியாவும் எதிர்பார்த்துள்ளது. வாஹா அட்டாரி எல்லை உடனடியாக மூடப்படுகிறது.
பாக்கிஸ்தான் தூதரக அதிகாரிகளின் எண்ணிக்கை 30 ஆகக் குறைப்பு இந்தியா - பாகிஸ்தானில் உள்ள தூதரகத்தை மூட உத்தரவு. ஒரு வாரத்தில் மே 1 ஆம் தேதிக்கு முன் தூதரக அதிகாரிகள் நாடு திரும்புவார்கள்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டதிற்குப் பின் வெளியுறவுத் துறைச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி தகவல். ஜம்மு - காஷ்மீரின் சுற்றுலா நகரம் அனந்த்நாக் மாவட்டத்திற்குட்பட்ட பெஹல்காமின் பைசாரன் பள்ளத்தாக்குப் பகுதியில் செவ்வாய்க்கிழமை ஏப்ரல் மாதம். 22 ஆம் தேதி சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் சரமாரியாகத் துப்பாக்கிச்சூடு
தாக்குதல் நடத்தியதில் 2 வெளிநாட்டவர் உள்பட 28 பேர் கொல்லப்பட்டனர். 20 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலுக்கு பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஜம்மு - காஷ்மீர் பாதுகாப்பு நிலை குறித்து மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தினார்.
அதில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் செளஹான் உள்ளிட்ட ஆயுதப் படை அதிகாரிகள் கலந்துகொண்டகூட்டத்தில் ஜம்மு - காஷ்மீரின் பாதுகாப்பு நிலை குறித்தும், பாதுகாப்பை அதிகரிக்க மேலும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
இதேபோன்று இந்தத் தாக்குதல் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலும் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றதில். மலைப்பகுதிகளுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பிற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கவும், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பிற்காக அத்தகைய பகுதிகளில் ஆயுதமேந்திய வீரர்கள் முழு பாதுகாப்பில் ஈடுபடுத்தப்படுவர் பகல்கம் தாக்குதலில் Intelligence Bureau officer மனீஷ்ரஞ்சன் உயிரிழப்பு, உரி செக்டார் வழியாக இந்தியாவிற்கு நுழைய முயன்ற இரண்டு பாக்கிஸ்தான் பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். இந்த நிலையில் கூட்டம் நிறைவு பெற்றது..9.15 மணிக்கு கூட்டம் பற்றிய செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. LOC பாகிஸ்தான் எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டிலிருந்து நமது இராணுவ வீரர்கள் தாக்குதலை தொடுத்து இருக்கிறார்கள்
இரண்டு பாக்கிஸ்தான் தீவிரவாதிகளை சுட்டுக்கொன்றது இந்திய இராணுவம். மேலும் சார்க் விசா மூலமாக இந்தியா வர பாகிஸ்தானியர்களுக்குத் தடை விதிப்பு. அத்துடன் வாகா எல்லை உடனடியாக மூடப்படுகிறது. இவ்வழியாக வந்த வாகனங்கள் மே 1 க்குள் திரும்ப உத்தரவு காஷ்மீரில் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட அப்பாவி இந்துக்களின் குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல் சொன்ன மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா. மலைப்பகுதிகளுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பிற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கவும், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பிற்காக அத்தகைய பகுதிகளில் ஆயுதமேந்திய பாதுகாப்பு பலப்படுத்த நடவடிக்கை. முஸ்லீம் பெயர் கொண்ட நபர் கொல்லப்பட்டோர் பட்டியலில் உள்ளதென பலரும், குறிப்பாக காங்கிரஸ் நபர்கள் சமூக வலைதளங்களில் பரப்பும் நிலையில் உண்மையில்
ஒரு உள்ளூர் குதிரை சவாரிக்கு கூலி பெறும் நபர், சுற்றுலா பயணிகள் மூலம் தினசரி வருமானம் பார்க்கும் நபர் முஸ்லீமாவார், மட்டும் இஸ்லாமிய பயங்கரவாதிகளிடம் துப்பாக்கியைப் பிடுங்க முயற்சித்து சுடப்பட்டார். அவரது பெயரும் இறந்தோர் பட்டியலில் உள்ளது. மற்றவர்கள் அனைவரும் வெளியூர் பயணிகள். அந்தப் பட்டியலிலேயே அவர் உள்ளூர்காரர் என்பதும் உள்ளது.
இதெல்லாம் தெரிய வேண்டும் என்றால் ஒரு சரியான ஆய்வுப் பார்வை தேவை.
காங்கிரஸாரின் இந்த அணுகுமுறை தவறு என்பது மக்கள் மத்தியில் பொதுவான கருத்து.சிந்து நதிநீர்ப் பங்கீடு ஒப்பந்தம் நிறுத்தப்படுகிறது.சிந்து நதி இனி பாகிஸ்தானிற்குள் பாயாது.. சிந்து நதி நீர் ஒப்பந்தமானது 1960 ஆம் ஆண்டு இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே கையெழுத்தான ஒரு நதி நீர் பகிர்வு ஒப்பந்தம். உலக வங்கியின் மத்தியஸ்தத்தால் உருவாக்கப்பட்ட முக்கியமான ஒப்பந்தம் மற்றும் இன்றுவரை மிகவும் வெற்றிகரமான நீர் பகிர்வு ஒப்பந்தங்களில் ஒன்றாகும்.
சிந்து நதி மற்றும் அதன் துணை நதிகளிலிருந்து வரும் நீர், அங்கு வாழும் மக்களின் உயிர்நாடியாகும். இருப்பினும், படுகையில் உள்ள பல்வேறு ஆறுகளுக்கு இடையே நீர் கிடைப்பதில் பரந்த வேறுபாடு உள்ளது, அதனால் தான் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இணைப்புகா கால்வாய்கள் மற்றும் ஹெட்வொர்க்குகள் போன்ற வடிவங்களில் நீர்ப்பாசன உள்கட்டமைப்பை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது உபரி நீரை ஒருங்கிணைந்த கால்வாய் அமைப்பு மூலம் பற்றாக்குறை பகுதிகள் மற்றும் ஆறுகளுக்கு மாற்றும். இருப்பினும், இது அடிப்படையில் கிழக்கு ஆறுகளான ரவி, சட்லெஜ் மற்றும் பியாஸுக்கு மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டது, மேலும் இந்த ஆறுகள் மற்றும் கால்வாய்களில் உள்ள பகுதிகளுக்கு பயனளித்தது. படிப்படியாக இந்தக் கால்வாய்களில் ஒரு வளமான பகுதி உருவானது.
பிரிவினையின் போது, இரண்டு முக்கிய தலைமையகங்களான ஃபெரோஸ்பூர் மற்றும் மாதோபூர் தலைமையகங்கள் இந்தியாவில் இருந்ததாலும், கால்வாய் அமைப்பு பாகிஸ்தானில் இருந்ததாலும், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நீர் பகிர்வை எட்ட முடியவில்லை. தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, இறுதியாக, உலக வங்கியின் மத்தியஸ்தத்துடன் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே சிந்து நதி நீர் ஒப்பந்தம் (IWT) 1960 ஆம் ஆண்டில் கையெழுத்தானபோது, நதிப் பகிர்வு அடிப்படையில் நீர் பகிர்வை அடைய முடிந்தது. இரு நாடுகளும் நீர் தாங்கும் சொத்துக்களை விநியோகிப்பதில் தங்களுக்குக் குறைவு இருப்பதாக உணர்ந்தாலும், இந்த ஒப்பந்தம் 58 ஆண்டுகளுக்கும் மேலாக இரு நாடுகளுக்கும் இடையிலான போர்கள் மற்றும் விரோதங்களில் இருந்து தப்பிப்பிழைத்துள்ளது. உரி பயங்கரவாத சம்பவத்திற்குப் பிறகு, இந்திய அரசு ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய முடிவு செய்துள்ளது.
சிந்து நதி திபெத்தின் அதாவது தென்மேற்கு சீனாவின் உயரமான மலைகளில் உற்பத்தியாகி, திபெத், இந்தியா மற்றும் பாகிஸ்தான் வழியாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK) உள்பட கடந்து 3180 கிலோ மீட்டர் மீட்டர் தூரம் நான்கு நாடுகள் கடந்து கராச்சிக்கு தெற்கே அரபிக் கடலில் கலக்கிறது. இது இந்திய-சீன எல்லைக்கு அருகில் தார் நதியுடன் இணைகிறது. ஜம்மு & காஷ்மீரு க்குள் நுழைந்த பிறகு இது லடாக் மற்றும் ஜான்ஸ்கர் மலைத்தொடர்களுக்கிடையில் பாய்கிறது. இது லடாக் மற்றும் கில்கிட்-பால்டிஸ்தான் பகுதிகள் வழியாக பாய்கிறது. சிந்து நதி ஜம்மு & கே வழியாக பாயும் சராசரி உயரம் கடல் மட்டத்திலிருந்து சுமார் 4000 மீட்டர் ஆகும். இது லேவில் ஜான்ஸ்கர் நதியுடன் இணைகிறது, பாகிஸ்தான் காஷ்மீரில் ஸ்கர்டு அருகே, இது ஷியோக் நதியுடன் இணைகிறது. கில்கிட், கார்ஸ்டாங், டிராஸ், டைகர் மற்றும் ஹன்சா ஆறுகள் மேற்கிலிருந்து சிந்து நதியின் பிற இமயமலை துணை நதிகளாகும். இந்த நிலையில் சிந்து நதிநீர்ப் பங்கீடு ஒப்பந்தம் நிறுத்தப்படுகிறது..சிந்து நதி இனி பாகிஸ்தானிற்குள் பாயாது. மேலும் அட்டாரி-வாகா எல்லை
பஹல்காம் தாக்குதல் காரணமாக அட்டாரி-வாகா எல்லை மூடப்படுகிறது.
பாகிஸ்தானியர்கள் இந்தியா வருவதற்கான விசா தற்காலிகமாக ரத்து.
SVES விசாவில் தற்போதுள்ள பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்தில் வெளியேற அரசு உத்தரவு.
பாகிஸ்தானுக்கு கடந்த காலங்களில் வழங்கப்பட்ட SVES விசாக்கள் ரத்து.
SAARC விசா விலக்கு திட்டத்தின் கீழ் பாகிஸ்தானியர்கள் இந்தியா வர அனுமதியில்லை.
பாகிஸ்தான் நாட்டு தூதரக அதிகாரிகள் வரும் மே 1ம் தேதிக்குள் இந்தியாவை விட்டு வெளியேறவும்
பாகிஸ்தான் உடனான தூதரக உதவிகளை குறைக்க முடிவு செய்துள்ளதாக வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி
கருத்துகள்