முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உதகமண்டலத்தில் ஆளுநர் தலைமையில் பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் மாநாடு

இந்திய உச்ச நீதிமன்றத்தின் நீதி விசாரணை அமைப்பு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் விதிகள் 124 முதல் 147- ன் கீழ் எழுதப்பட்டவை. தன்னாட்சி அதிகாரம் கொண்ட


அமைப்பு. எவரது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டாலும் அதில் தலையிடும் உரிமை உச்ச நீதிமன்றத்துக்கு உண்டு. அரசமைப்புச் சட்டப் பிரிவு 131 ன் கீழ், இந்திய அரசுக்கும், அதன் மாநிலங்களுக்குமிடையே தகராறு ஏற்பட்டால், மாநிலங்களுக்கு இடையில் பிரச்சினை எழுந்தால் அதன் மீது முடிவெடுக்கும் அதிகாரம் தரப்பட்டுள்ளது.



நீதித்துறை அதிகாரம் குடியரசுத் தலைவர், துணை குடியரசுத் தலைவர் தேர்தலை விசாரிக்கும் அதிகாரம் உச்ச நீதிமன்றத்துக்கு உள்ளது. பிரிவு 143 ன் கீழ் மத்திய அரசுக்கும், குடியரசுத் தலைவருக்கும் உச்ச நீதிமன்றம் பல்வேறு காலக்கட்டங்களில் அறிவுரைகள், வழிகாட்டுதல்கள் வழங்கியுள்ளது ஆனால் குடியரசுத் தலைவருக்கு எதிராக உத்தரவுகளை வழங்க முடியுமா? என்பதே இப்போது பல தலைவர்கள் மத்தியில் எழு வினா ? சட்டமியற்றும் அதிகாரம் நீதிமன்றத்திற்கு இல்லை,


நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்ட மன்றங்கள் மூலம் இயற்றப்பட்ட அரசியல் சாசன அமைப்புக்கு விலகாமல் அரசின் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதா என்பதைப் பார்க்க வேண்டியது ஜனநாயகத்தின் இரண்டாவது தூணாக உள்ள நீதிமன்றத்தின் கடமை. மேலும் அரசின் கொள்கை முடிவுகள் சட்டமாவதற்கு ஜனாதிபதியின் ஒப்புதல் பெறவேண்டும் ஆக அதற்கு சட்ட மன்றத்தில் அல்லது நாடாளுமன்றத்தில்



நிறைவேற்றப்பட்ட சட்டங்கள் ஜனாதிபதி ஒப்புதல் பெற வேண்டும் அதற்காக நீதிமன்றத்தில் ஒப்புதல் பெற முடியாது ஆக மத்திய அரசு சட்டம் மூலம் மாநிலத்தின் ஆளுநர் ஜனாதிபதியின் நேரடிப் பிரதிநிதி ஆக பல்கலைக்கழகங்களில்  வேந்தர் தமிழ்நாடு ஆளுநர் என்பது இன்னும் நீடிக்கிறது என கிண்டி ராஜ் பவன் தரப்பில் தகவல். உச்ச நீதிமன்ற உத்தரவையடுத்து, பல்கலைக் கழகங்களின் வேந்தர் அதிகாரம் தற்போது முதல்வர் வசம் வந்து விட்டதென தி.மு.க.,வினர் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் கொண்டாட்டத்தை வெளிப்படுத்துகின்ற நிலையில், அனைத்துப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்கள், பதிவாளர்களுக்கான கூட்டத்தை முதல் முறையாக அரசாணை வெளியீடு செய்து பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் நடத்தினார். பல்கலைக்கழகங்களில் நிதி, நிர்வாகம் சார்ந்த பிரச்னைகள் அதிகரித்துள்ள நிலையில் இதற்கெல்லாம் முதல்வர் நடத்திய கூட்டத்தில் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பங்கேற்ற துணைவேந்தர்கள், பதிவாளர்களுக்கு ஏமாற்றம் தான் கிடைத்ததாக பேசப்படுகிறது. 




காரணம் பல்கலைக்கழகங்களுக்கு UGC நிதி தேவை  

அந்த கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், 'கல்வி நிலையங்களில் அறிவியல் பூர்வமான கருத்துக்களை மட்டுமே போதிக்க வேண்டும். பகுத்தறிவுக்கு ஒவ்வாத கருத்துக்களையோ, கட்டுக்கதைகளையோ தவறியும் மாணவர்களிடையே பரப்பி விடக்கூடாது' என்பது போன்ற ஆலோசனைகளை வழங்கினார். ஆனால், தற்போதைய முக்கிய தேவையான பல்கலைக்கழகங்களின் நிர்வாக ரீதியான வளர்ச்சி குறித்து விவாதிக்கப்படவில்லை என பேராசிரியர்கள் மத்தியில் விமர்சனம் எழுந்துள்ளது.




இதுகுறித்து பேராசிரியர்கள் தரப்பில் கூறியதாவது: தமிழ்நாட்டிலுள்ள, 21 அரசு பல்கலைக் கழகங்களில் மதுரை காமராசர், திருவள்ளுவர், திருச்சிராப்பள்ளி பாரதிதாசன், சென்னை அண்ணா உள்ளிட்ட எட்டு பல்கலைக்கழகங்களில், துணைவேந்தர்கள் பணியிடம் பல மாதங்களாகக் காலியாகவே உள்ளன. பெரியார் பல்கலைக் கழகத்தில் துணைவேந்தர் பதவிக்காலம் முடிந்தும் பதவி நீட்டிப்பில் தொடர்கிறது. இதுபோல் பெரும்பாலான பல்கலைக்கழகங்களில் நோடல் பதவிகளான பதிவாளர், தேர்வாணையர், டீன், இயக்குநர் உள்ளிட்ட பதவிகளும் காலியாகவே உள்ளன. மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இப்பதவிகள் மூன்றாண்டுகளுக்கும் மேலாகக் காலியாகவே உள்ளன. இதுதவிர, பத்தாண்டுகளுக்கும் மேல் பேராசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உள்ளிட்ட நிரந்தரப் பணியிடங்கள் பல்கலைக் கழகங்களில் நிரப்பப்படவில்லை. 80 சதவீதம் வரை தொகுப்பூதியத்தில் தான் பலரும் பணிபுரிகின்றனர். 20 ஆண்டுகளுக்கும் மேலாக பின்னடைவுப் பணியிடங்களும் காலியாகவே உள்ளன.



பேராசிரியர்கள், அலுவலர்களுக்கான பதவி உயர்வுகள் வழங்கப்படவில்லை .குறிப்பாக மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து நிதிச்சுமையில் பாதிக்கப்பட்டு, சம்பளம் வழங்குவது சவாலாகிறது. இப்பல்கலைக்கழகத்துக்கு 150 கோடி ரூபாய் மானியம் வழங்கப்பட்ட நிலையில் தற்போது 60 கோடி ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்ற பல்கலைக்கழகங்கள் நிதிசார் பிரச்னைகளில் தள்ளாடுகின்றன.ஓய்வூதியப் பலன்களைக் கூட வழங்க முடியாத நிலைக்கு பல்கலைக்கழகங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இவை போன்ற பிரச்சனைகள் விவாதிக்கப்பட்டிருந்தால், உயர்கல்வித்துறை நிலை எந்த நிலையில் உள்ளது என தமிழ்நாடு முதல்வருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கும். இது ஏமாற்றத்தை தந்துள்ளதென பல பேராசிரியர்களின் கருத்து.  ஆளுனருக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில், உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்ய, மத்திய அரசு ஆலோசித்து வரும் நிலையில். அவ்வாறு நடந்து ஆளுநர் தரப்பிற்கு ஆதரவாக தீர்ப்பு வந்தால், முதல்வர் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு நெருக்கடி ஏற்படும் என்ற தயக்கம் காரணமாகக் கூட பல்கலைக் கழகங்களின் நிதி, நிர்வாகம் சார்ந்த பிரச்னைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின்  பேசாமல் தவிர்த்திருக்கலாம் என, பேராசிரியர்கள் மத்தியில் பேச்சாகின்றது. குடியரசுத் துணைத் தலைவா் ஜகதீப் தன்கரை டில்லியிலுள்ள மாளிகையில் தமிழ்நாடு ஆளுநா் ஆா்.என். ரவி கடந்த சனிக்கிழமையன்று சந்தித்துப் பேசினாா்.

இது பற்றிய ஒரு வரித் தகவலை இரண்டு அலுவலகங்களும் அவற்றின் எக்ஸ் பக்கத்தில் பகிா்ந்தன. ஆனால்,  சந்திப்புக்குக் காரணமாக எதுவும் குறிப்பிடப்படவில்லை.

தமிழ்நாடு சட்ட மசோதாக்கள் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அளித்த தீா்ப்பில் ஆளுநா் மட்டுமின்றி குடியரசுத் தலைவருக்கும் முடிவெடுப்பதற்கான காலக்கெடுவை விதித்தது. இந்தத் தீா்ப்பை குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் ஒரு பொது நிகழ்ச்சியில் பேசியபோது கடுமையாக விமா்சித்த நிலையில், டில்லிக்கு நான்கு நாள் பயணமாக வந்த ஆளுநா் ஆர்.என்.ரவி, குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரை சந்தித்துப் பேசியது முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது.

‘குடியரசு துணைத் தலைவரைச் சந்திக்க இந்த மாத துவக்கத்திலேயே ஆளுநருக்கு நேரம் ஒதுக்கப்பட்டது. இந்த நிலையில் ஏப்ரல் மாதம் 25-ஆம் தேதியில் உதகமண்டலத்தில் ஆண்டு தோறும் நடைபெற்ற நிலையில் இந்த ஆண்டும் நடைபெறும் துணைவேந்தா்கள் மாநாட்டில் குடியரசு துணைத்தலைவா் பங்கேற்கிறாா்’ என  அலுவலக வட்டாரங்களில் தகவல் தெரிவித்தன.

டில்லியிலுள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருந்த ஆளுநா் ஆர்.என்.ரவி, உச்சநீதிமன்றத் தீா்ப்பு தொடா்பாக சட்ட வல்லுநா்களுடன் ஆலோசனை நடத்தியதாகவும். ஏற்கனவே சொன்னது போல என்ன தான் முதல்வரே பல்கலைக்கழகங்களின் வேந்தர் என்ற மசோதாவை ஒப்புதல் வழங்கி சட்டமாகி விட்டதாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தாலும் அதை நடைமுறை படுத்துவதில் பலவிதமான சிக்கல்கள் உண்டு. 

இப்போது அந்தச் சிக்கல்களுக்கான நிலை துணைவேந்தர்களின் நிலை இதைத் தான் திரிசங்கு சொர்க்கம் போல வசிஷ்டர் பக்கம் நிற்பதா..? அல்லது விஸ்வாமித்திரர் பக்கம் நிற்பதா...?என்பதை புரியாத நிலை தொடங்கியுள்ளது. முதல்வர் தான் பல்கலைக்கழகங்களின் வேந்தர் என நீதிமன்றம் அறிவித்தாகிவிட்டது. 

இனி அடுத்தது என்ன? 

முதல்வர் வேந்தரானால் அந்த வேந்தருக்கான அதிகாரங்கள் என்ன?.

நீதிமன்ற உத்தரவு வந்ததும் பெரிய அளவில் திமுகவின் கூட்டணிக் கட்சிகள் கொண்டாடினார்கள். அடுத்து துணை வேந்தர்களை அழைத்து ஒரு சந்திப்பு நிகழ்த்தினார். 

ஒரு வேந்தராக என்ன நிர்வாகம் செய்கிறார்?  

இனிதான் அந்த நீதிமன்ற உத்தரவின் நிஜமான அர்த்தம் தெரிய வரும். அதற்கான வேளை நெருங்கி கொண்டிருக்கிறது. 

வருடம் தோறும் நடக்கும் பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் மாநாடு நீலகிரி மாவட்டம் உதகமண்டலத்தில் (ஊட்டி) நடைபெறும். இந்த ஆண்டும் அதற்கான பணிகளைச் செய்ய தொடங்கியுள்ளார் ஆளுநர் 

இது வரை ஒரு முறை கூட இந்த மாநாட்டில் உயர் கல்வித் துறை அமைச்சர் கலந்து கொள்ளவில்லை. இந்த முறை இன்னும் சிறப்பாக்கும் வகையில் குடியரசு துணை தலைவர் தன்கரும் கலந்து கொள்ள உள்ளார். கலந்து கொள்ளுமாறு ஆளுநரே நேரில் சென்று அழைப்பும் விடுத்துள்ளார். 

துணைக் குடியரசு தலைவரின் பயணம் உறுதியாகி அவரது சுற்றுப்பயண விபரம் வெளியிடப்பட்டுள்ளது. 

ஆளுநர் உச்ச நீதிமன்ற உத்தரவு இருந்தாலும் 

ஆளுநர் அதிகாரம் இந்தியா முழுமையும் உள்ள ஆளுநர்கள் அனைவருக்கும் பொதுவானது. அதை தமிழ் நாட்டில் மட்டும் மாற்றி அமைப்பதென்பது இயலாது. 

நீதிமன்ற உத்தரவை அறியாதவரல்ல ஆளுநர். அதை மீறுபவரும் அல்ல.  இனி முதல்வரே பல்கலைக்கழங்களின் வேந்தர் என்றால் ஆளுநர் ஏன் இந்த மாநாடை ஏற்பாடு செய்ய வேண்டும்? என மக்கள் மத்தியில் பேச்சாகும்.

ஆக அந்த நீதிமன்ற உத்தரவினை மட்டுமே முழுமையாக  காட்டி  வெற்றி பெற்று விட்டதாக மக்கள் மத்தியில் கூறிக் கொண்டிருக்கிறது திமுக அரசு. இந்த வழக்கில் ஆளுநரைக் கண்டித்தது, மசோதா மீது நடவடிக்கை எடுக்க கால வரம்பு நிர்ணயித்தது வரை எல்லாம் சரிதான்.

ஆனால் இதுவரை இல்லாத வகையில், சட்டம் இயற்றுதல் (Policy Making) விஷயத்தில், பிரிவு 142 அதிகாரத்தைப் பயன்படுத்தி உச்ச நீதிமன்றம் தாமாக மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்திருப்பது, ஆட்சியதிகாரத்தில் கை வைப்பதாக இருக்கிறது எனப் பேச்சுக்கள் எழுகிறது. அதேபோல், இப்போது சட்டமன்றத்திலோ நாளுமன்றத்திலோ நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கெதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யலாம். ஆனால், உச்ச நீதிமன்றம் இதேபோன்று பிரிவு 142-ஐப் பயன்படுத்தி ஒப்புதல் அளித்த மசோதாக்களுக்கெதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய முடியுமா என்ற கேள்வி பொதுவாக எழுகிறது.மசோதா மீது ஆளுநர் நடவடிக்கை எடுக்க ஒரு மாதம், மூன்று மாதங்கள் கால வரம்பு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறதே தவிர, அந்தக் கால வரம்பு மீறி ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருந்தால் அவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பது கேள்விக்குறியாகும்.

மேலும், இந்தத் தீர்ப்பை இரு நீதிபதிகள் அமர்வு வழங்கிருப்பதால், `சட்டம் இயற்றுதலில் பிரிவு 142 அதிகாரத்தை உச்ச நீதிமன்றம் பயன்படுத்த முடியுமா?' என்ற கேள்வியை மத்திய அரசு முன்வைத்து இந்தத் தீர்ப்புக்கெதிராக ஐந்து அல்லது அதற்கு மேலான நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வில் (constitution bench) மேல்முறையீடு செய்யவும் வாய்ப்பிருக்கிறது. அரசியல் சாசன அமர்வின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீட்டுக்குச் செல்ல முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, தற்போது இந்த வழக்கில் மத்திய அரசு மேல்முறையீட்டுக்குச் சென்றால் அப்போது இத்தகைய கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் உச்ச நீதிமன்றம் தெளிவான விளக்கத்தை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இது குறித்து மூத்த பத்திரிகையாளர் 'தராசு' ஷ்யாம் கருத்து இது, ``ஆளுநர்கள் தங்களின் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தும் போது, உச்ச நீதிமன்றம் அந்த அதிகாரத்தை தானே எடுத்துக் கொள்ளுமென்பது இதில் கவனிக்க வேண்டிய விஷயம். அது ஜனநாயகத்துக்கு சரியானதாக இருக்குமா என்பது தான் இப்போது பிரதானக் கேள்வி. தனக்குள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி மறைமுக ஆட்சி அதிகாரத்தை உச்ச நீதிமன்றம் செலுத்துவது போல இந்த உத்தரவு உள்ளது.தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு சீராய்வு மனுவைத் தாக்கல் செய்வதற்கான வாய்ப்பு உள்ளது. அவ்வாறு சீராய்வு மனுவை தாக்கல் செய்யவில்லை என்றால் இது சட்டமாகிவிடும். இந்த தீர்ப்பு குடியரசுத் தலைவருக்கும் பொருந்தும்.” என்கிறார். இந்த நிலையில் தமிழ்நாடு அரசியல் கட்சிகள் சார்ந்த திராவிடர் கழக கி.வீரமணி மற்றும் சிபிஐ(எம்) விசிக உள்ளிட்ட கட்சிகள் பலவகையான எதிர்ப்புக் குரல் கொடுக்கும் நிலையில் எதிர் முகாம் பாஜகவின் தலைவர்கள் அமைதியாக வேடிக்கை பார்க்கும் நிலை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...