தமிழ்நாடு போக்குவரத்துத் துறையில் அரசு வேலை தருவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி பண மோசடி செய்த வழக்கில்
அவருக்கெதிராக சென்னை மத்தியக் குற்றப்பிரிவுக் காவல்துறை பதிவு செய்த வழக்கின் அடிப்படையில் சட்டவிரோதப் பணப்பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை யினர் பதிவு செய்த வழக்கு, சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தின் விசாரணையில் உள்ள வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக கடந்த ஆண்டு அமலாக்கத் துறையினர் சார்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த நிலையில், மேலும் இந்த வழக்கில் ஜனவரி மாதம் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதில், அமைச்சர் செந்தில் பாலாஜி அவரது சகோதரர் அசோக் குமார், செந்தில் பாலாஜியின் முன்னாள் உதவியாளர். பி. சண்முகம், எம்.கார்த்திகேயன், ஜி.கணேசன், எம்.வெற்றிச்செல்வன், எஸ்.அருண் ரவீந்திரா டேனியல், டி. ஆல்பர்ட் தினகரன், எஸ் ஜெயராஜ் குமார், சி.பழனி, எஸ்.லோகநாதன்,டி.பிரபு, அனுராத ரமேஷ் உள்ளிட்ட 13 நபர்களின் பெயர்கள் இடம் பெற்ற நிலையில்,
அமலாக்கத் துறையின் கூடுதல் குற்றப்பத்திரிகையை கோப்புக்கு எடுத்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், ஏப்ரல் மங 9-ஆம் தேதி நேற்று நேரில் ஆஜராகும் படி, அசோக்குமார் உள்ளிட்டோருக்கு சம்மன் அனுப்பியது. அதன்படி இந்த வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்னிலையில் விசாரணைக்கு வந்த போது குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் அனைவரும் நேரில் ஆஜாரகினர். அவர்கள் தரப்பில் வழக்கறிஞர்களும் ஆஜராகினர். அப்போது அமலாக்கதுறை தரப்பில், கூடுதல் குற்றபத்திரிகையுடன் சுமார் 5 ஆயிரம் பக்கங்கள் கொண்ட ஆவணங்கள் உள்ளன. அவற்றை சிடியில் தருவதாக தெரிவிக்கப்பட்டது.
அதற்கு குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் தரப்பில், “மின்னனு ஆவணமாக இல்லமால் காகித வடிவில் வழங்க வேண்டும் எனவும், அப்போது தான் சான்றளிக்கப்பட்ட ஆவணங்கள் உறுதி தன்மை நிலை நிறுத்தப்படும்” என தெரிவிக்கப்பட்டது. அதற்கு “புதிய சட்டத்தின் அடிப்படையில் மின்னனு முறையில் ஆவணங்கள் வழங்கலாம்” என அமலாக்கத் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டததையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் அணைவரும் ஏப்ரல் 20-ஆம் தேதிக்குள் தலா 2 லட்சம் ரூபாய்கான ஜாமீன் உத்தரவாதத்தை தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஏப்ரல் மாதம் 25-ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.அதில் அமைச்சர்
செந்தில்பாலாஜியின் சகோதரர் இதுவரை தலைமறைவாக இருந்த அசோக் குமார் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.
கருத்துகள்