முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பல்லாயிரம் பேர் கலந்து கொண்ட மதுரை CPI(M) 24 வது அகில இந்திய மாநாடு

CPI(M) 24 வது அகில இந்திய மாநாட்டில் பாலஸ்தீன ஆதரவு




தீர்மானத்தை அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் எம்.ஏ.பேபி முன்மொழிய அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் வழிமொழிந்தார்.  பிரதிநிதிகள் தலைவர்கள் பாலஸ்தீன உடையான ஃகபியே அணிந்து முழக்கமிட்டு ஆதரவு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றினர்.





மார்க்சிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டினை முன்னிட்டு தமுக்கம் மைதானம் மற்றும் மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் கூட்டாட்சிக் கோட்பாடே  இந்தியாவின் வலிமை என்னும் சிறப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது. 

கருத்தரங்கத்திற்கு கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் தலைமையேற்றார். மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் மா.கணேசன் வரவேற்றார். கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத்  சிறப்புரையாற்றினார்.  கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் , தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , கர்நாடக மாநில உயர்கல்வித்துறை அமைச்சர் சுதாகர் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர். புறநகர் மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன் நன்றி கூறினார். உடன் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் பெ.சண்முகம். 





உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் 

இந்த நிலையில். 53 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு நடந்தது 

ஏற்பாடுகள் ஒவ்வொன்றும் சிறப்பாக அமைய இரண்டு மாத காலமாக உழைத்த கம்யூனிஸ்ட் கட்சியினர் நடத்திய விழா துவங்கம் 

 ஏகாதிபத்திய எதிர்ப்புக் குரலாக ஒலித்தது பொது மாநாடு தொடங்கியது. பொது மாநாட்டுக்கு கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் மாணிக் சர்க்கார் தலைமை ஏற்றார்.








சீத்தாராம் யெச்சூரிக்கு அஞ்சலி முதல் நிகழ்வாக நடந்தது, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் அஞ்சலித் தீர்மானத்தை முன்மொழிந்தார்.




தொடர்ந்து அரசியல் தலைமைக்குழு உறுப்பினர், முன்னாள் கேரள மாநில கட்சிச் செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணன், மூத்த தலைவர், முன்னாள் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர், மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சார்யா, கட்சியின் மூத்த தலைவர் என்.சங்கரய்யா ஆகியோரின் கம்யூனிஸ்ட் இயக்கப்  பணிகளை நினைவு கூர்ந்து மாநாடு அஞ்சலி செலுத்தியது. 


மாநாட்டுத் தலைவர் மாணிக் சர்க்கார் தலைமை உரையாற்ற, ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ்காரத் தொடக்க உரை ஆற்றினார். இடதுசாரி கட்சிகளின் தலைவர்கள் வாழ்த்துரை வழங்கினர்.

மார்க்சிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டின் வரலாற்றுக் கண்காட்சி மூத்த பத்திரிக்கையாளர் இந்து என்.ராம் திறந்து வைத்தார். புத்தக கண்காட்சியை  வி.பரமேஸ்வரன்  திறந்து வைத்தார். தமிழ்நாடு முழுவதும் இருந்து வந்த தியாகச் சுடர்கள் சுடர்விடத் துவங்கியது. அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்  பிருந்தாகாரத் சிறப்புரை நிகழ்த்தினார். கலைநிகழ்ச்சிகளும் , இசைப்பாடல்களும் நிகழ்ந்தேறின.



உடன் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர்கள் கே.பாலகிருஷ்ணன் , உ.வாசுகி மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினர்கள் கே.கனகராஜ், கே.பாலபாரதி உள்ளிட்ட தலைவர்களும் ,

தோழர்களும் பங்கேற்ற நிலையில் CPI(M) 24ஆவது தேசிய மாநாட்டில், இடதுசாரி மற்றும் சோசலிச இயக்கங்களின் அழைப்பில் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் சார்பில் தேசிய பொதுச்செயலாளர் G. தேவராஜன் மற்றும் கட்சியின் தேசிய துணைத்தலைவர் மற்றும் மாநில பொதுச் செயலாளர் டாக்டர் P.V. கதிரவன் (Ex. M.L.A) ஆகியோர் கலந்து கொண்டனர்.





முன்னதாக, மாநாட்டில் கலந்து கொள்ள மதுரை விமான நிலையத்திற்கு வந்த தேசிய பொதுச் செயலாளர் G. தேவராஜனை மாநில பொதுச் செயலாளர் டாக்டர் பி.வி. கதிரவன், மாநில தலைவர் முகவை C.முத்துராமலிங்கம் மற்றும் நிர்வாகிகள் வரவேற்றனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...