முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

செண்பகவள்ளி தடுப்பணை உடைப்பை சரி செய்யக் கோரி ஜூலை மாதம் 10-ஆம் தேதி மாநாடு

செண்பகவள்ளி தடுப்பணை உடைப்பை சரி செய்யக் கோரி ஜூலை மாதம் 10-ஆம் தேதி மாநாடு


தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி உள்ளிட்ட மூன்று மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் 

தென்காசி மாவட்டம், சிவகிரியில் செண்பகவள்ளி தடுப்பணை வைப்பாறு பாசன விவசாயிகளின் ஒருங்கிணைப்புக் குழு ஆலோசனை கூட்டம் சிவகிரி சிவகிரி விவசாய சங்கத் தலைவர் இரத்தினவேலு தலைமையில் சிறப்பாக நடந்தது. தென்மலை பாசனக் கமிட்டி செயலாளர் பாபுராஜ், பொருளாளர் குருசாமி, மாரிமுத்து, ராமசாமி முன்னிலையில் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் எம்.அர்ச்சுனன் சிறப்புரையாற்றினார்.  மேலும் கூட்டத்தில் இராயகிரி பிச்சாண்டி, பனையூர் பத்மநாபன், களஞ்சியம் பெண்கள் அமைப்பின் பொன்னுத்தாய், கூடலூர் சிவஞானபாண்டியன், ஊர்த் தலைவர் குருசாமி பாண்டியன், வடக்கு சத்திரம் தங்கவேலு ஆகியோர் பேசினர்.


சிவகிரி விக்னேஷ் ராஜா, தென்மலை முத்தரசு பாண்டியன், தெற்கு அரண்மனை பூமிநாதன்,                வெங்கடேசப் பண்ணையார், கலிங்கப்பட்டி ஒன்றியக் கவுன்சிலர் அருண்குமார் உள்ளிட்ட மூன்று மாவட்டங்களிலிருந்து வந்திருந்த  ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் தீர்மானங்களாக இராமமூர்த்தி முன்மொழிந்தார். 

அதில். தென்காசி மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி மலையில் 1733-ஆம் ஆண்டில் கட்டப்பட்ட செண்பகவள்ளி தடுப்பணை எனும் கன்னியா மதகுக் கால்வாய் தடுப்புச் சுவர் 1,450 மீட்டர் நீளமும், 2 மீட்டர் உயரமும் கொண்டது. அப்போதைய சிவகிரி ஜமீன்தாரும், திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் மன்னருக்கும் ஏற்பட்ட உடன்படிக்கையின் படி இத் தடுப்பணை கட்டப்பட்டதில் கன்னியா மதகுக் கால்வாயில் 1955- ஆம் ஆண்டில் ஏற்பட்ட  திடீர் பெரு வெள்ளம் காரணமாக உடைப்பு ஏற்பட்ட நிலையில். 1959 -1962- ஆம் ஆண்டில் கர்ம வீரர் கு. காமராஜர் முதல்வராக இருந்த போது உடைப்பு சரி செய்யப்பட்டது.

பின்னர், 1964- ஆம் ஆண்டில் ஏற்பட்ட திடீர் பெரு வெள்ளத்தில் மீண்டும் உடைப்பு ஏற்பட்டதனைச் சரி செய்வதற்கு

கேரளா மாநிலத்தின்அரசும், வனத்துறையினரும் ஒத்துழைக்க மறுத்து விட்ட நிலையில். முன்னாள் முதல்வர் எம் ஜி.ராமச்சந்திரன் (எம்ஜிஆர்) முதல்வராக இருந்த போது உடைப்பை சரி செய்ய மதிப்பீட்டுத் தொகை ரூபாய்.10.30 லட்சத்தின் பாதித் தொகை ரூபாய்.5.15 லட்சம் காசோலையாக 1985- ஆம் ஆண்டில் கேரளா மாநில அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் 20 ஆண்டுகளாகியும் உடைப்பை சரி செய்ய எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காமல் 2005-ஆம் ஆண்டில் இருபது ஆண்டுகள் கழித்து தமிழ்நாடு அரசு வழங்கிய காசோலையை கேரளா  மாநில அரசு திருப்பி அனுப்பியது.

அது தொடர்பாக ராசிங்கப்பேரி கண்மாய் பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில்  எட்டு வார காலத்துக்குள் உடைப்பை சரி செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு, 20 ஆண்டுகள் கடந்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதனால் தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 40 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் வறண்டு போயுள்ளதாகவும. செண்பகவல்லி தடுப்பணை உடைப்பை சரி செய்யக் கோரி ஜூலை மாதம் 10-ஆம் தேதியில் தென்மலை கிராமத்தில்  பத்தாயிரம் விவசாயிகள் பங்கேற்கும் எழுச்சி மாநாட்டை நடத்துவதென கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதற்காக ஒருங்கிணைப்புக் குழு உருவாக்குவது, ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதி குறைந்தது 10 கிராமசபைகளிலாவது தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்துவது. தமிழ்நாட்டில் முதல்வர் மற்றும் அமைச்சர்களைச் சந்தித்து கோரிக்கையை நேரில் வலியுறுத்துவது, மேலும் அதற்குறிய சட்டபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்வதெனவும் ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது.            நிறைவாக  தென்மலை பாசன கமிட்டி தலைவர் காளி முத்து நன்றி தெரிவித்தார்.செண்பகவள்ளி அணை இந்தியாவின் கேரளா மாநில எல்லைக்குள் அமைந்த தடுப்பணை தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் மேற்குத் தொடர்ச்சி மலையில் 26 கிலோ மீட்டர் தொலைவில் காட்டுப் பகுதியில் அமைந்துள்ளது.  தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களில் சுமார் 36,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வந்துள்ளது. சொக்கம்பட்டி குன்றின் அடிவாரத்தைச் சுற்றிக் கட்டப்பட்டுள்ள இந்த அணையைக் கட்ட வித்திட்டவர் சிவகிரி ஜமீன்தார் வரகுண சங்கர பாண்டியன். 1873 ஆம் ஆண்டு திருவிதாங்கூர் மன்னர் தர்மராஜா மார்த்தாண்ட வர்மாவுடன்  பேசி ஒப்பந்தம் ஏற்பட்டதன் கால அணை கட்டினார்.

அணையிலிருந்து வரும் தண்ணீர் வாசுதேவநல்லூர் தலையணையை அடைந்து அங்கிருந்து இராசிங்கபேரி குலசேகர ஆழ்வார் ஆகிய இரண்டு கால்வாய்கள் மூலம் வாசுதேவநல்லூர், சிவகிரி, சங்கரன்கோவில், திருவேங்கடம், கோவில்பட்டி வரை உள்ள பகுதிகளில் தண்ணீர் செல்லும். இந்த நிலையில் ஏற்பட்ட உடைப்பு சரி செய்யாமல் உள்ளது அதன் காரணமாக செண்பகவள்ளி அணை மீட்புக் குழுவினர் பலவிதமான சட்டப்போராட்டங்களையும், அறப்போராட்டங்களையும்ம் நடத்துகின்றனர். செண்பகவள்ளி தடுப்பணையின் அணை உடைப்பைச் சரிசெய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது, ஆனால் இன்னும் உடைப்பு சரி செய்யப்படாமலேயே உள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...