12 ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரி சேர்க்கை விண்ணப்பம் வெளியீடு
தமிழ்நாடு அரசு 12 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு
அதிக அளவில் தேர்வு பெற்ற அரியலூர் மாவட்டம் முதலிடம் . 12 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் அரியலூர் மாவட்டம் 98.82 சதவிகிதம் பெற்று முதலிடம். தமிழ்நாட்டில் மாநிலப் பாடத் திட்டத்திற்கான பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் தற்போது வெளியானது. மாா்ச் மாதம் 3-ஆம் தேதி துவங்கி 25-ஆம் தேதி முடிவடைந்து. தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை பாடத்திட்டத்தில் பயின்ற
மாணவர்களுக்கு பிளஸ் டூ பொதுத்தேர்வு நடைபெற்றதற்கான முடிவுகளே இன்று வெளியானது. கடந்த ஆண்டுகளை விட கூடுதல் விகிதாச்சாரத்தில் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி பெற்றவர்கள் 7.53 லட்சம் பேர்
மாணவியர்களில் 4.54 லட்சம் பேரும்
மாணவர்களில் 3.57 லட்சம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்
மாணவர்களை விட 3.54 சதவிகிதம் மாணவிகள் அதிகம் தேர்ச்சி பெற்றனர்.
அரியலூர் மாவட்டம் 98.82 சதவிகிதம் பெற்று முதலிடம்
ஈரோடு மாவட்டம் 97.98 சதவிகிதம் பெற்று இரண்டாமிடம்
திருப்பூர் மாவட்டம் 97.53 சதவிகிதம் பெற்று மூன்றாமிடம்
கோயம்புத்தூர் மாவட்டம் 97.48 சதவிகிதம் பெற்று நான்காமிடம்
கன்னியாகுமரி மாவட்டம் 97.01 சதவிகிதம் பெற்று ஐந்தாமிடம். 2025 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளைப் பார்க்க மாணவர்கள், தங்கள் மதிப்பெண் பட்டியலைப் பதிவிறக்கம் செய்ய அதிகாரப்பூர்வ வலைத்தளங்கள் மற்றும் பல மாற்று முறைகளைப் பயன்படுத்தலாம். தமிழ்நாடு 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை ஆன்லைனில் மற்றும் ஆஃப்லைனில் பார்த்து பதிவிறக்கம் செய்யக்கூடிய அனைத்து தளங்களுக்கும் கீழே உள்ளன.
dge.tn.gov.in
tnresults.nic.in
apply1.tndge.org/dge-result-list
tn gov
அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளைப் பார்க்க, மாணவர்கள் சில முக்கியமான உள்நுழைவு விவரங்களை உள்ளிட வேண்டும். இந்த விவரங்கள் அவர்களின் நுழைவு அட்டைகளில் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த நிலையில் மாநில அளவில் பொறியியல் கலந்தாய்வுக்கு இன்று முதல் நாளில் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளதாக அண்ணா பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது. -விளம்பரம்- . -விளம்பரம்-
2025 ஆம் ஆண்டுக்கான பொறியியல் பட்டயப் படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பப் பதிவை உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் நேற்று மே 7 ஆம் தேதி துவங்கி வைத்தார்.
பொறியியல் படிப்புடன் அரசு கலை மற்றூம் அறிவியல் கல்லூர்கள், பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கையும் தொடங்கியது. இதற்காக தனித்தனியாக வலைதளப் பக்கங்களும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டன.
பொறியியல் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் www.tneaonline.org என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாட்டில் உள்ள 176 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 159 பாடப்பிரிவுகளில் மொத்தம் 1,25,345 சேர்க்கை இடங்களில் சேர விரும்பும் மாணவர்கள் ஜாதி வாரி இட ஒதுக்கீடுகள் படி www.tngasa.com என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
இந்நிலையில், பொறியியல் கலந்தாய்வுக்காக முதல் நாளில் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொறியியல் படிப்புகளுக்கான..
விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள்: 06.06.2025
அசல் சான்றிதழ் பதிவேற்றம் செய்ய கடைசி நாள்: 09.06.2025
ரேண்டம் எண் வெளியிடும் நாள்: 11.06.2025
சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் நாட்கள்: 10.06.2025 முதல் 20.06.2025 வரை
தரவரிசை பட்டியல் வெளியிடும் நாள்: 27.06.2025
தரவரிசை பட்டியலில் பிழை இருந்தால் சேவை மையத்தை தொடர்பு கொள்ள வேண்டிய நாட்கள்: 28.06.2025 முதல் 02.07.2025 வரை. . -விளம்பரம்-
'விளம்பரம்- கலந்தாய்வு தொடங்கும் நாள் குறித்து ஏஐசிடிஇ நாள்காட்டியின்படி பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேபோன்று அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்காக விண்ணப்பிக்க கடைசி நாள்: 27.05.2025 ஆகும்.
கருத்துகள்