ஆபரேஷன் சித்தூர் பாரதம் கண்ட வெற்றிக்கு பிறகு பாகிஸ்தான் விடுத்த கோரிக்கையை ஏற்று மே. மாதம் 10-ம் தேதி போர் நிறுத்தம் அமலானது.
என்றாலும் பாகிஸ்தான் அத்துமீறினால் தக்க பதிலடி கொடுக்கப்படும் என இந்தியா திட்டவட்டமாகத் தெரிவித்த நிலையில், தீவிரவாதிகளுக்கு தஞ்சமளிப்பது, நிதிஉதவி வழங்குவது, எல்லை தாண்டிய தீவிரவாதத்துக்கு உதவி செய்வதெனத் தொடர்ந்து பல ஆண்டுகளாகவே தீவிரவாதத்துக்கு ஆதரவாக பாகிஸ்தான் செயல்பட்டு வருவது குறித்து உலக நாடுகளிடம் தக்க ஆதாரங்களுடன் விளக்க மத்திய அரசு திட்டமிட்ட நிலையில் அனைத்துக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய ஏழு குழுக்களை உலகின் பல்வேறு நாடுகளுக்கும் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளதில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக ரவிசங்கர் பிரசாத், வைஜெயந்த் பாண்டா, காங்கிரஸ் கட்சியின் சார்பில் சசி தரூர், திமுகவின் சார்பில் கனிமொழி, ஐக்கிய ஜனதா தளம் சார்பாக சஞ்சய் குமார் ஜா, தேசிய வாத காங்கிரஸ் கட்சியின் சார்பில் சுப்ரியா சுலே ,, சிவசேனா சார்பில் ஸ்ரீகாந்த் சின்டே ஆகிய ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்களும் அந்தக் குழுக்களுக்கு தலைமை வகிப்பார்கள். ஒவ்வொரு குழுவிலும் பாஜக, காங்கிரஸ், திமுக, திரிணமூல், ஐஜத, என்சிபி (சரத் பவார்), பிஜு ஜனதா தளம், சிவசேனா (உத்தவ்), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளை சேர்ந்த 5 முதல் 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடம்பெறுவார்கள். வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் மூத்த உயர் அதிகாரி ஒருவரும் இக்குழுவில் இடம்பெறுவார். இந்தக் குழுக்களின் ஒருங்கிணைப்பாளராக நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு இருப்பார். குழுவினரின் வெளிநாட்டு பயணம் குறித்து முழு விவரம்
எல்லை தாண்டிய தீவிரவாதத்தை ஊக்குவித்து வரும் பாகிஸ்தான் குறித்து, உலக நாடுகளின் தலைவர்களிடம் ஆதாரத்துடன் விளக்கும் மத்திய அரசு அமைத்துள்ளது. இந்த குழுவினர் பிரிட்டன், வளைகுடா நாடுகள் உட்பட பல்வேறு நாடுகளுக்கும் 10 நாட்கள் பயணம் மேற்கொண்டு, இந்தியாவின் நிலை குறித்து விளக்க உள்ளனர்.
காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் ஏப்ரல் மாதம் 22-ஆம் தேதி நடத்திய கொடூரத் தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உட்பட 26 பேர் உயிரிழந்ததில் பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு நேரடித் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அதையடுத்து, மே மாதம் 7-ஆம் தேதி ‘ஆபரேஷன் சிந்தூர்’ பெயரில் பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்தது. இதில் 100-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து, ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களில் உள்ள எல்லை பகுதிகளை குறிவைத்து ட்ரோன்கள், ஏவுகணைகளை பாகிஸ்தான் வீசியது. இந்தியப் படைகள் தனது அதிநவீன ஆயுதங்களின் உதவியுடன் அவை அனைத்தையும் நடுவானிலேயே தகர்த்து அழித்தது. இந்த மோதல் ஒருசில நாட்கள் நீடித்த நிலையில், பாகிஸ்தான் விடுத்த கோரிக்கையை ஏற்று மே மாதம் 10-ஆம் தேதி போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது.
எனினும், பாகிஸ்தான் அத்துமீறினால் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று இந்தியா திட்டவட்டமாக தெரிவித்துள்ள நிலையில், தீவிரவாதிகளுக்கு தஞ்சம் அளிப்பது, நிதிஉதவி வழங்குவது, எல்லை தாண்டிய தீவிரவாதத்துக்கு உதவி செய்வது என தொடர்ந்து பல ஆண்டுகளாகவே தீவிரவாதத்துக்கு ஆதரவாக பாகிஸ்தான் செயல்பட்டு வருவது குறித்து உலக நாடுகளிடம் ஆதாரங்களுடன் விளக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக, அனைத்துக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய 7 குழுக்களை உலகின் பல நாடுகளுக்கும் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தக் குழுவினர் பிரிட்டன், ஐக்கிய அரபு அமீரகம், ஜப்பான், தென் ஆப்பிரிக்கா உட்பட பல்வேறு நாடுகளுக்கு 10 நாட்கள் பயணம் மேற்கொள்வார்கள். இந்த பயணம் மே மாதம் 23-ஆம் தேதி தொடங்குகிறது என இந்தியாவுக்கு எதிராக இதுவரை நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதல்களில் பாகிஸ்தானுக்கு உள்ள தொடர்பு, இதில் அந்த நாட்டின் ராணுவம், உளவு அமைப்பான ஐஎஸ்ஐ ஆகியவை எவ்வாறு பின்னி பிணைந்துள்ளன என்பதற்கான முழு ஆதாரங்களை வெளியுறவு துறை, நாடாளுமன்ற விவகார துறை, உள்துறை அமைச்சகங்கள் இணைந்து ஆவணங்களாக தயாரித்து வருகின்றன. நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவினரிடம் இந்த ஆவணங்கள் வழங்கப்பட உள்ளன. அவற்றின் மூலம் உலக நாடுகளின் தலைவர்களுக்கு இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் விளக்கமளிக்க உள்ளனர்.
கருத்துகள்