கடற்படைத் தளபதி, விமானப்படைத் தளபதியைச் சந்தித்த 24 மணி நேரத்துக்குள்
பாதுகாப்புத்துறை செயலாளரை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசியிருப்பது மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மற்றும் அவர்களுக்கு உடந்தையாக இருந்தவர்கள் மீது கற்பனை செய்து பார்க்க முடியாத அளவு தண்டனை இருக்கும் என பிரதமர் நரேந்திர மோடி கூறியிருந்த நிலையில், அடுத்தடுத்து நடைபெறும் இந்தச் சந்திப்புகள் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்த நிலையில்
மே மாதம் 7 ஆம் தேதி தேசம் முழுவதும் போர் ஒத்திகை நடத்தப்படுமென மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. பாகிஸ்தான் இந்தியா போர் பதற்றத்துக்கு மத்தியில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை சைரன்களை இயக்குதல், தாக்குதலின் போது தற்கொள்வது தொடர்பாக பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு பயிற்சி அளித்தல்
போர் காலத்தில் மக்களை அந்த இடத்தில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றுவது, முக்கிய தொழிற்சாலைகள் உள்ளிட்டவற்றை எதிரி கண்ணில் இருந்து மறைக்க ஏற்பாடு செய்வது, இரவு நேரத்தில் எதிரி நாட்டு விமானங்கள் தாக்குதலில் ஈடுபடும் போது மின்விளக்குகளை அணைப்பது மற்றும் உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசியமான பொருட்களைச் சேமித்து வைப்பது, தாக்குதல் நடந்தால் தீயணைப்பு துறை, பேரிடர் மீட்புத்துறை எப்படி செயல்பட வேண்டும் பதுங்கு குழி அமைப்பது அதாவது பங்க் அமைத்து மக்களைக் காப்பது போன்ற ஒத்திகைகளை மேற்கொள்ள உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
கருத்துகள்