இரயில் பயணம், சமையல் எரிவாயு உருளை, வங்கி ஏடிஎம் பரிவர்த்தனை, சுங்கச்சாவடிகளில் புதிய நடைமுறை இன்று முதல் அமலாகிறது
இன்று முதல் இந்திய அளவில் இரயில்வே பயணச்சீட்டு முறையில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டதன் படி
வெயிட்டிங் லிஸ்ட் எனும் காத்திருப்போர் பட்டியல் பயணச்சீட்டை வைத்திருப்போர் இரண்டாம் மற்றும் குளிர்சாதன வகுப்புகளில் கட்டாயம் பயணிக்க அனுமதிக்கப்படமாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பதிவு உறுதி செய்யப்படாத பயணச் சீட்டுக்களை வைத்திருப்போர், முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் பயணித்தால் அவர்களுக்கு அபராதம் விதிக்க, பயணச்சீட்டு பரிசோதகர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ள
அதே நேரத்தில் காத்திருக்கும் பட்டியல் பயணச்சீட்டை வைத்திருப்போர், முன்பதிவு இல்லாத இரண்டாம் வகுப்பு பெட்டியில் பயணிக்க அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்பதிவு செய்து பயணிப்பவர்கள் எதிர்கொள்ளும் அசௌகரியங்களைக் கவனத்தில் கொண்டு இந்தத் திட்டத்தை ரயில்வே நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. அதேநேரத்தில் ஐஆர்சிடிசி இணையதளம் மூலம் முன்பதிவு செய்யப்பட்டு, அந்த பயணச்சீட்டு காத்திருக்கும் பட்டியலில் இருந்தால், தானாகவே காலாவதியாக, பயணிகளுக்கு பணம் திரும்ப வழங்கப்பட்டு வருகிறது. அந்த முறை தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் வங்கிகளில் இந்த எண்ணிக்கையை மீறி பணம் எடுத்தால் கூடுதலாக 23 ரூபாய் இன்று முதல் வசூலிப்பதற்கு ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது.
எனினும் சில வங்கிகள் பணம் எடுக்காத பரிவர்த்தனைகள், அதாவது இருப்பு எவ்வளவு என பார்ப்பதற்கு இலவசம் என்றே அறிவித்துள்ளன. மேலும், ஒரு வங்கிக் கணக்கில் இருந்து, மற்றொரு வங்கியின் ஏ.டி.எம்மில் பணம் எடுப்பதற்கான கட்டணம் ரூபாய்.17 ல் இருந்து, ரூபாய்.2 அதிகரிக்கப்பட்டு ரூபாய்.19 ஆக நிர்ணயிக்க வங்கிகளுக்கு ஆர்.பி.ஐ., ஒப்புதல் வழங்கி உள்ளது. மேலும் இலவச பரிவர்த்தனை எண்ணிக்கை தாண்டினால் இன்று முதல் கூடுதலாக ரூபாய்.2 வசூலிக்கப்படும். அதேபோல் சமையல் எரிவாயு ஆண்டின் எல்லா மாதத்திலும் சிலிண்டர் விலையில் மாற்றம் ஏற்படும். அந்த வகையில் இன்று (மே மாதம் 1 ஆம் தேதி) முதல் சிலிண்டர் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அந்த வகையில், வணிக கேஸ் சிலிண்டர் விலை ரூபாய்.15.50 குறைந்துள்ளது. 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை ரூபாய்.15.50 குறைக்கப்பட்டுள்ளது.
சென்னையில் 19 கிலோ எடை கொண்ட கேஸ் சிலிண்டர் ரூபாய்.1906-க்கு விற்பனையாகிறது. அதேநேரம், 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலையில் எவ்விதமான மாற்றமும் இல்லை. அதேபோல் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் வாகனங்களுக்கான சுங்கக் கட்டணம் பாஸ்டேக் முறை மூலம் வசூலிக்கப்படுவதில் இன்று மே மாதம் 1ஆம்தேதி முதல் மாற்றம் செய்யப்பட்டு, செயற்கைக்கோள் முறை மூலம் கட்டணம் வசூலிக்கப்படும் இதுகுறித்து மத்திய அரசு விளக்கம்.
சுமார் 1,200 சுங்கச்சாவடிகள் மூலம் 7 கோடி பேர் பாஸ்டேக் முறையைப் பயன்படுத்திவரும் நிலையில், மே மாதம் முதல் தேதியிலிருந்து செயற்கைக்கோள் மூலம் ஒவ்வொரு வாகனத்தையும் கண்காணித்து, அது கடக்கும் தொலைவின் அடிப்படையில் கட்டணம் தீர்மானிக்கப்படும் என்பது புதிய தகவல்.
ஆனால், மே மாதம் 1 ஆம் தேதி முதல் குறிப்பிட்ட சாவடிகளில் மட்டும் ஆட்டோமேட்டிக் நம்பர்பிளேட் ரெக்கக்னைசன் எனப்படும் வாகன எண் பலகையை வைத்து தானாகவே கட்டணம் அளவிடும் பாஸ்டேக் முறையைக் கொண்டுவரவுள்ளதாக மத்திய அரசு விளக்கம்.
கருத்துகள்