வடகாடு சம்பவம் உண்மை நிலவரம் காவல்துறை கூறுவதா பகுதி மக்கள் கூறுவதா என்ன நடக்கிறது செய்தியாளர் கள் ஆய்வு
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகா வடகாட்டில் அரசு புறம்போக்கு நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள கோவில் மற்றும் விளையாட்டுத் திடல் தொடர்பாக
இரண்டு சமூகத்தினரிடையே சில காலமாக முன்விரோதமிருந்து வந்துள்ள நிலையில் நேற்று வடகாடு முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவில் தேரோட்டம் நடைபெற்ற நிலையில், அப்பகுதியில் உள்ள பிற்பட்ட முத்தரையர் மற்றும் ஆதிதிராவிடரில் ஒரு பிரிவு இளைஞர்களிடையே ஏற்கனவே ஏற்பட்ட பிரச்சினை தொடர்பாக மீண்டும் பிரச்சனை ஏற்பட்டது. ஒரு சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் மற்றொரு தரப்பைச் சேர்ந்த குடிசைகளுக்கு தீ வைத்ததாகக் கூறப்படுகிறது. இதேபோல்,
மற்றொரு தரப்பைச் சேர்ந்த இளைஞர்கள் அப்பகுதியில் சாலைகளில் நடந்து சென்ற வழிப்போக்கர்களை தாக்கியுள்ளனர்.
மோதலில் 10 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர், காவலர்கள் நால்வரும் காயமடைந்தனர் எனத் தகவல் ஒருவருக்கு அருவாள் வெட்டுப் பட்டுள்ளது, ஒரு சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் மற்றொரு தரப்பைச் சேர்ந்த மொத்தம் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
இதில்,10 க்கும் மேற்பட்டோர் வடகாடு, ஆலங்குடி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் அப்பகுதியில் அரசு பேருந்தின் கண்ணாடியை உடைத்துள்ளனர்.புதுக்கோட்டை மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் அபிஷேக்குப்தா தலைமையிலான காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வடகாட்டில் இருதரப்பினரிடையே மோதல் என்பது தவறான செய்தி என புதுக்கோட்டை மாவட்டக் காவல்துறை தரப்பில் தகவல். ஆனால்
மதுபோதையில் இருதரப்பு இளைஞர்களிடையே மோதல் என விசாரணையில் தெரிகிறது; சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர்களைப் பிடித்து விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், அரசு பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்ட நிலையில் அந்தப் பகுதியில் காவல்துறையினர் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டனர். இந்த நிலையில் இந்த மோதல் குறித்து காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
"பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போடுவது தொடர்பாக இரண்டு தரப்பு இளைஞர்களிடையே மோதல் ஏற்பட்டது. இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த மோதலில் காவல் ஆய்வாளருக்கு தலையில் அரிவாள் வெட்டு எதுவும் விழவில்லை. வீடுகளுக்கு தீ வைப்பு, 5 பேருக்கு அரிவாள் வெட்டு என்பதும் வதந்தி என காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
தேரோட்டப் பிரச்சனையில் வடகாடு பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த கும்பல் வீடுகள், இரு சக்கர வாகனங்களுக்கு தீ வைத்த்து என்றும், இதில் சிலருக்கு அரிவாள் வெட்டு ஏற்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.
அதில், வடகாடு காவல் சரகத்தில் முத்துராஜா சமூகத்தினருக்கும் SC/PR தரப்பினருக்கும் இடையே கோவில் திருவிழாவில் ஏற்பட்ட பிரச்சனையில் ஆதிதிராவிடர் மக்கள் குடியிருக்கும் பகுதியில் வீடுகளுக்கு தீவைப்பு எனவும், 5 பேருக்கு அரிவாள் வெட்டு, பேருந்து கண்ணாடிகள் உடைப்பு, காவல்துறையினர் 4 பேர் காயம் மற்றும் காவல் ஆய்வாளருக்கு தலையில் வெட்டுக்காயம் என செய்தி பரவியது.
உண்மையில், வடகாடு பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே மே மாதம் 5 ஆம் தேதி இரவு 10.30 மணியளவில் முத்துராஜா சமூகத்தைச் சோந்த நபர்களுக்கும்,SC/PR சமூகத்தைச் சேர்ந்த நபர்களுக்குமிடையே யார் முதலில் பெட்ரோல் போடுவது என வாய்தகராறு ஏற்பட்டு இருதரப்பினரும் பதிலுக்கு பதில் ஒருவரையொருவர் திட்டிக்கொண்டு அங்கிருந்து சென்றதாகவும் SC/PR தரப்பினர் அவர்களது குடியிருப்புப் பகுதிக்குச் சென்ற நிலையில், முத்துராஜா சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் இரண்டு இருசக்கர வாகனங்களில், SC/PR தரப்பினரை பின்தொடர்ந்து சென்று மீண்டும் இருதரப்பினருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில், ஓருவரையொருவர் தாக்கிக் கொண்டனர் எனவும் இருதரப்பினருக்குமிடையே ஏற்பட்ட மோதலில் ஒரு கூரை வீடு எரிக்கப்பட்டும், அரசு பேருந்தின் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் மத்தியில் பேசுகையில் தெரியவருகிறது. மேற்படி சம்பவமானது குடிபோதையில் இருதரப்பு இளைஞர்களிடையே ஏற்பட்ட மோதல் என விசாரணையில் தெரியவருகிறது. இச்சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர்களைப் பிடித்து விசாரணை நடைபெற்று வருகிறது. எனவே தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என புதுக்கோட்டை மாவட்டக் காவல்துறை சார்பில் செய்தி வெளியாகின.
புதுக்கோட்டை வடகாடு பகுதியில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டதாகவும் தகவல் புதுக்கோட்டை வடகாடு பகுதியில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் திருவிழா தொடர்பானது இல்லை என்றும் வேறு காரணம் என்றும் காவல்துறை தகவல் மூலம் விளக்கமளித்துள்ளது
கருத்துகள்