முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்கும் சட்டப் பிரிவுக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை.

பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்கும் சட்டப் பிரிவுக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை.



பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்கும் ஆளுநரின் அதிகாரத்தை தடுக்கும் மாநிலச் சட்டங்களின் செல்லுபடித்தன்மையை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள பொது நல வழக்கு (PIL) மனுவை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதாக தமிழ்நாடு அரசு இன்று புதன்கிழமை (மே மாதம் 21ஆம் தேதி, 2025) சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தது.



கோடை காலத்தில் விடுமுறை நீதிமன்றத்தில் நீதியரசர்கள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் வி.லட்சுமிநாராயணன் அடங்கிய டிவிஷன் அமர்வு முன் ஆஜரான தமிழ்நாடு உயர்கல்வித் துறையின் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், உச்ச நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள தொடர்புடைய வழக்குகளைக் கருத்தில் கொண்டு இந்த இடமாற்ற மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார்.


அதோடு  திருநெல்வேலி மாவட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் அலுவலகப் பொறுப்பாளராக இருந்த வழக்கறிஞர் குட்டி என்ற கே. வெங்கடாசலபதி தாக்கல் செய்த பொதுநல மனு அரசியல் நோக்கம் கொண்டது என வாதிட்டு உயர்கல்வித்துறை செயலாளர் சி. சமயமூர்த்தியும் உயர் நீதிமன்றத்தில் ஒரு குறிப்பாணையை தாக்கல் செய்தார்.  மனுதாரர் 56 காரணங்களுக்காக மாநில சட்டங்கள் குறித்து சவால் செய்திருந்தாலும், அவரது முதன்மையான வாதம் என்னவென்றால், மாநில சட்டங்கள் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர்கள் மற்றும் பிற கல்விப் பணியாளர்களை நியமிப்பதற்கான குறைந்தபட்ச தகுதிகள் குறித்த பல்கலைக்கழக மானியக் குழு விதிமுறைகள், 2018 ன் விதிமுறை 7.3 ஐ மீறுவதாகும்.   உச்ச நீதிமன்றத்தில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வழக்குகளின் ஒரு பொருளாக ஒழுங்குமுறை விதி 7.3 ன் செல்லுபடியாகும் தன்மை இருப்பதாகக் கூறிய செயலாளர், தற்போதைய பொதுநல மனுவை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றி, அங்கு நிலுவையில் உள்ள வழக்குகளுடன் சேர்த்துக் குறிப்பிடுவது மட்டுமே பொருத்தமானதாக இருக்கும் என்றார்.

மே மாதம் 19 ஆம் தேதி, 2025 அன்று இந்தியாவின் தலைமை நீதிபதி (CJI) BR கவாய் தலைமையிலான அமர்வு முன், இடமாற்ற மனுவை முன்கூட்டியே பட்டியலிடக் கோரி ஒரு குறிப்பு கொண்டுவரப்பட்டதாகவும், இடமாற்ற மனு குறித்து உயர் நீதிமன்றத்திற்குத் தெரிவிக்குமாறு மாநில அரசின் வழக்கறிஞரிடம் தலைமை நீதிபதி வாய்மொழியாகக் கேட்டுக் கொண்டதாகவும் டிவிஷன் பெஞ்சிற்குத் தெரிவிக்கப்பட்டது.

56 அடிப்படைகளையும் பூர்த்தி செய்து, விரிவான எதிர் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய மாநில அரசுக்கு போதுமான அவகாசம் வழங்காமல், கோடை காலத்தில் விடுமுறையில் உயர் நீதிமன்றம் இந்த வழக்கை விசாரிப்பதற்கு எந்த அவசரமும் இல்லை என்றும் உயர்கல்விச் செயலாளர் கூறினார்.

உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இடமாற்ற மனுவை விசாரித்து முடிக்கும் வரை, பொதுநல மனு மீதான விசாரணையை ஒத்திவைக்குமாறு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தலைமையிலான டிவிஷன் பெஞ்சை அவர் வலியுறுத்தினார். இருப்பினும் இரண்டு நீதியரசர்கள் இடைக்காலத் தடை வழங்கி உத்தரவிட்டார்கள். இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் வேறு மாநில உயர் நீதி மன்றத்திற்கு இடமாற்ற மனு நிலுவையில் இருக்கும்போது, ​​இந்த வழக்கை சென்னை உயர் நீதி மன்ற அமர்வு விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு மூத்த வழக்கறிஞர் பி. வில்சன் ஆட்சேபனை தெரிவித்தார். 

இருப்பினும், அமர்வு இந்த வழக்கை தொடர்ந்து விசாரித்து இடைக்கால உத்தரவை பிறப்பித்தது.தமிழ்நாடு அரசு துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான சட்டங்களை அரசிதழில் வெளியிட்டிருந்தது.  அந்த நகலை            மனுவுடன் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அந்த அரசிதழ் தவறானது எனவும். இந்த அரசிதழ் ஜோடிக்கப்பட்டது; உண்மையானதில்லை. இந்த அரசிதழ் மனுதாரருக்கு எப்படி வந்தது என விசாரிக்க வேண்டும். அவசரமாக விசாரிக்க வேண்டும் என எந்த காரணங்களும் மனுவில் தெரிவிக்கப்படவில்லை" என வில்சன் வாதிட்டதாகத் தெரிவித்தார்.

அதேபோல் கேரளாவில் கடந்த ஆண்டு தொழில்நுட்ப பல்கலைக்கழகம், டிஜிட்டல் பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தர்களை நியமனம் செய்ய மாநில அரசு தேர்வு பட்டியலை கவர்னராக இருந்த ஆரிப் முகமது கானுக்கு அனுப்பியது. அந்த பட்டியலை அவர் தவிர்த்து, தொழில்நுட்ப பல்கலைக்கழகத்திற்கு டாக்டர் சிவப்பிரசாத், டிஜிட்டல் பல்கலைக்கழகத்துக்கு டாக்டர் சிசா தாமஸ் ஆகிய 2 பேரையும் தற்காலிக துணைவேந்தர்களாக நியமனம் செய்து உத்தரவிட்டார்.

இவ்வாறு துணைவேந்தர்களை நியமனம் செய்த ஆளுநரின் உத்தரவை ரத்து செய்யக்கோரி மாநில அரசு கேரளா  உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததில், மாநில அரசு பரிந்துரைத்த தேர்வு பட்டியலை தவிர்த்து, பல்கலைக்கழகங்களுக்கு தற்காலிகமாக துணைவேந்தர்களை ஆளுநர் நியமித்துள்ளார். இதனால் ஆளுனர் பல்கலைக்கழகத்தில் சட்டங்களுக்கு புறம்பாக செயல்பட்டுள்ளார். எனவே, ஆளுனரின் துணைவேந்தர்கள் நியமன உத்தரவை ரத்து செய்யவேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதி சுரேஷ்குமார் தலைமையிலான நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்தது. பல்கலைக்கழகங்களுக்கு தற்காலிகமாக துணைவேந்தர்களை நியமிக்கும் போது, மாநில அரசு வழங்கும் தேர்வு பட்டியலிலிருந்து மட்டுமே நியமனம் செய்ய வேண்டும். எனவும்  துணைவேந்தர்களின் நியமனம் பொறுப்பு இன்றுடன் முடிவடைவதால், இந்த நியமனத்தை மறுபரிசீலனை செய்ய உயர் நீதிமன்றம் தலையிடவில்லை.

மேலும் கேரளா தொழில்நுட்ப பல்கலைக்கழகம், டிஜிட்டல் பல்கலைக்கழகத்துக்கு தற்காலிக துணை வேந்தர்களை நியமனம் செய்த ஆளுநரின்  உத்தரவை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.               காலக்கெடு நிா்ணயித்தது இப்படி ஒருங்கிணைந்த இந்திய நாட்டில் மாநிலங்களில் குழப்பம் வந்த நிலையில் மட்டுமல்ல, யூஜிசி  விவகாரத்தில் இதுவரை உச்ச நீதிமன்றம் முடிவு செய்யாத நிலையில் தான் குடியரசுத் தலைவருக்கும் காலக்கெடு நிா்ணயித்த உச்சநீதிமன்றத்தின் உத்தரவு காரணமாக நீதிமன்றமே அந்த மசோதாக்களை சட்டமாக்கியும் விட்டது தான் வியப்பு.

மக்கள் ஆட்சி நடக்கும் இந்திய 

குடியரசுத் தலைவருக்கும் ஆளுநருக்கும் காலக்கெடுவை உச்சநீதிமன்றமே நிா்ணயித்து விட்டதால், இவை இரண்டுமே இனிமேல் அரசியல் சாசனத் திருத்தங்களுக்கு உள்ளாகும் அமைப்புகளாகியுள்ளன. நாடாளுமன்ற இரு அவைகளின் பெரும்பான்மையில் தான் அரசியல் சாசனத்தில் இல்லாதவை, திருத்தங்கள் மூலமாக சட்டங்களாக நிறைவேற்றப்படுகின்றன. அப்படித்தான் இதுவரை 127 திருத்தங்களை நாம் அரசியல் சாசனத்தில் இணைத்துள்ளோம்.

உச்சநீதிமன்ற இரு நீதிபதிகளின் காலக்கெடு தீா்ப்பு, அரசியல் சாசனத்தில் இடம்பெறக் கூடிய திருத்தங்களா? அல்லது உச்சநீதிமன்றத் தீா்ப்பாக மட்டுமே அவை நீடிக்கக் கூடியவையா? அரசியல் சாசனத்தில் ஆளுநா் அதிகாரம் மௌனமாக்கப்பட்டுள்ளது என்பது மறுக்கமுடியாத உண்மை தான். ஆனால், அதற்கான தீா்வு உச்சநீதிமன்றமே நாடாளுமன்றத்தை விட உயா்வானது என்பதாக உருவாகி விட்டதாகாதா?

மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் மன்றமே நாடாளுமன்றம். நீதிபதிகள் நியமிக்கப்படுபவா்கள் மட்டுமே. குடியரசுத் தலைவரின் பிரதிநிதியாக ஆளுநரும் நியமிக்கப்படுபவா் தான் என்றால், நீதிபதிகளும் அப்படித்தானே?

இரு நீதிபதிகளின் இந்தத் தீா்ப்புக்கு 5 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்றத்தில் அரசியல் சாசன அமா்வின் மறு தீா்ப்புதான் தீா்வு. தான் இப்போது நடக்கும் நகர்வாக அமையும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...