துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்கும் சட்டப் பிரிவுக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை.
பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்கும் சட்டப் பிரிவுக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை.
பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்கும் ஆளுநரின் அதிகாரத்தை தடுக்கும் மாநிலச் சட்டங்களின் செல்லுபடித்தன்மையை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள பொது நல வழக்கு (PIL) மனுவை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதாக தமிழ்நாடு அரசு இன்று புதன்கிழமை (மே மாதம் 21ஆம் தேதி, 2025) சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தது.
கோடை காலத்தில் விடுமுறை நீதிமன்றத்தில் நீதியரசர்கள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் வி.லட்சுமிநாராயணன் அடங்கிய டிவிஷன் அமர்வு முன் ஆஜரான தமிழ்நாடு உயர்கல்வித் துறையின் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், உச்ச நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள தொடர்புடைய வழக்குகளைக் கருத்தில் கொண்டு இந்த இடமாற்ற மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார்.
அதோடு திருநெல்வேலி மாவட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் அலுவலகப் பொறுப்பாளராக இருந்த வழக்கறிஞர் குட்டி என்ற கே. வெங்கடாசலபதி தாக்கல் செய்த பொதுநல மனு அரசியல் நோக்கம் கொண்டது என வாதிட்டு உயர்கல்வித்துறை செயலாளர் சி. சமயமூர்த்தியும் உயர் நீதிமன்றத்தில் ஒரு குறிப்பாணையை தாக்கல் செய்தார். மனுதாரர் 56 காரணங்களுக்காக மாநில சட்டங்கள் குறித்து சவால் செய்திருந்தாலும், அவரது முதன்மையான வாதம் என்னவென்றால், மாநில சட்டங்கள் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர்கள் மற்றும் பிற கல்விப் பணியாளர்களை நியமிப்பதற்கான குறைந்தபட்ச தகுதிகள் குறித்த பல்கலைக்கழக மானியக் குழு விதிமுறைகள், 2018 ன் விதிமுறை 7.3 ஐ மீறுவதாகும். உச்ச நீதிமன்றத்தில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வழக்குகளின் ஒரு பொருளாக ஒழுங்குமுறை விதி 7.3 ன் செல்லுபடியாகும் தன்மை இருப்பதாகக் கூறிய செயலாளர், தற்போதைய பொதுநல மனுவை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றி, அங்கு நிலுவையில் உள்ள வழக்குகளுடன் சேர்த்துக் குறிப்பிடுவது மட்டுமே பொருத்தமானதாக இருக்கும் என்றார்.
மே மாதம் 19 ஆம் தேதி, 2025 அன்று இந்தியாவின் தலைமை நீதிபதி (CJI) BR கவாய் தலைமையிலான அமர்வு முன், இடமாற்ற மனுவை முன்கூட்டியே பட்டியலிடக் கோரி ஒரு குறிப்பு கொண்டுவரப்பட்டதாகவும், இடமாற்ற மனு குறித்து உயர் நீதிமன்றத்திற்குத் தெரிவிக்குமாறு மாநில அரசின் வழக்கறிஞரிடம் தலைமை நீதிபதி வாய்மொழியாகக் கேட்டுக் கொண்டதாகவும் டிவிஷன் பெஞ்சிற்குத் தெரிவிக்கப்பட்டது.
56 அடிப்படைகளையும் பூர்த்தி செய்து, விரிவான எதிர் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய மாநில அரசுக்கு போதுமான அவகாசம் வழங்காமல், கோடை காலத்தில் விடுமுறையில் உயர் நீதிமன்றம் இந்த வழக்கை விசாரிப்பதற்கு எந்த அவசரமும் இல்லை என்றும் உயர்கல்விச் செயலாளர் கூறினார்.
உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இடமாற்ற மனுவை விசாரித்து முடிக்கும் வரை, பொதுநல மனு மீதான விசாரணையை ஒத்திவைக்குமாறு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தலைமையிலான டிவிஷன் பெஞ்சை அவர் வலியுறுத்தினார். இருப்பினும் இரண்டு நீதியரசர்கள் இடைக்காலத் தடை வழங்கி உத்தரவிட்டார்கள். இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் வேறு மாநில உயர் நீதி மன்றத்திற்கு இடமாற்ற மனு நிலுவையில் இருக்கும்போது, இந்த வழக்கை சென்னை உயர் நீதி மன்ற அமர்வு விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு மூத்த வழக்கறிஞர் பி. வில்சன் ஆட்சேபனை தெரிவித்தார்.
இருப்பினும், அமர்வு இந்த வழக்கை தொடர்ந்து விசாரித்து இடைக்கால உத்தரவை பிறப்பித்தது.தமிழ்நாடு அரசு துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான சட்டங்களை அரசிதழில் வெளியிட்டிருந்தது. அந்த நகலை மனுவுடன் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அந்த அரசிதழ் தவறானது எனவும். இந்த அரசிதழ் ஜோடிக்கப்பட்டது; உண்மையானதில்லை. இந்த அரசிதழ் மனுதாரருக்கு எப்படி வந்தது என விசாரிக்க வேண்டும். அவசரமாக விசாரிக்க வேண்டும் என எந்த காரணங்களும் மனுவில் தெரிவிக்கப்படவில்லை" என வில்சன் வாதிட்டதாகத் தெரிவித்தார்.
அதேபோல் கேரளாவில் கடந்த ஆண்டு தொழில்நுட்ப பல்கலைக்கழகம், டிஜிட்டல் பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தர்களை நியமனம் செய்ய மாநில அரசு தேர்வு பட்டியலை கவர்னராக இருந்த ஆரிப் முகமது கானுக்கு அனுப்பியது. அந்த பட்டியலை அவர் தவிர்த்து, தொழில்நுட்ப பல்கலைக்கழகத்திற்கு டாக்டர் சிவப்பிரசாத், டிஜிட்டல் பல்கலைக்கழகத்துக்கு டாக்டர் சிசா தாமஸ் ஆகிய 2 பேரையும் தற்காலிக துணைவேந்தர்களாக நியமனம் செய்து உத்தரவிட்டார்.
இவ்வாறு துணைவேந்தர்களை நியமனம் செய்த ஆளுநரின் உத்தரவை ரத்து செய்யக்கோரி மாநில அரசு கேரளா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததில், மாநில அரசு பரிந்துரைத்த தேர்வு பட்டியலை தவிர்த்து, பல்கலைக்கழகங்களுக்கு தற்காலிகமாக துணைவேந்தர்களை ஆளுநர் நியமித்துள்ளார். இதனால் ஆளுனர் பல்கலைக்கழகத்தில் சட்டங்களுக்கு புறம்பாக செயல்பட்டுள்ளார். எனவே, ஆளுனரின் துணைவேந்தர்கள் நியமன உத்தரவை ரத்து செய்யவேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதி சுரேஷ்குமார் தலைமையிலான நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்தது. பல்கலைக்கழகங்களுக்கு தற்காலிகமாக துணைவேந்தர்களை நியமிக்கும் போது, மாநில அரசு வழங்கும் தேர்வு பட்டியலிலிருந்து மட்டுமே நியமனம் செய்ய வேண்டும். எனவும் துணைவேந்தர்களின் நியமனம் பொறுப்பு இன்றுடன் முடிவடைவதால், இந்த நியமனத்தை மறுபரிசீலனை செய்ய உயர் நீதிமன்றம் தலையிடவில்லை.
மேலும் கேரளா தொழில்நுட்ப பல்கலைக்கழகம், டிஜிட்டல் பல்கலைக்கழகத்துக்கு தற்காலிக துணை வேந்தர்களை நியமனம் செய்த ஆளுநரின் உத்தரவை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. காலக்கெடு நிா்ணயித்தது இப்படி ஒருங்கிணைந்த இந்திய நாட்டில் மாநிலங்களில் குழப்பம் வந்த நிலையில் மட்டுமல்ல, யூஜிசி விவகாரத்தில் இதுவரை உச்ச நீதிமன்றம் முடிவு செய்யாத நிலையில் தான் குடியரசுத் தலைவருக்கும் காலக்கெடு நிா்ணயித்த உச்சநீதிமன்றத்தின் உத்தரவு காரணமாக நீதிமன்றமே அந்த மசோதாக்களை சட்டமாக்கியும் விட்டது தான் வியப்பு.
மக்கள் ஆட்சி நடக்கும் இந்திய
குடியரசுத் தலைவருக்கும் ஆளுநருக்கும் காலக்கெடுவை உச்சநீதிமன்றமே நிா்ணயித்து விட்டதால், இவை இரண்டுமே இனிமேல் அரசியல் சாசனத் திருத்தங்களுக்கு உள்ளாகும் அமைப்புகளாகியுள்ளன. நாடாளுமன்ற இரு அவைகளின் பெரும்பான்மையில் தான் அரசியல் சாசனத்தில் இல்லாதவை, திருத்தங்கள் மூலமாக சட்டங்களாக நிறைவேற்றப்படுகின்றன. அப்படித்தான் இதுவரை 127 திருத்தங்களை நாம் அரசியல் சாசனத்தில் இணைத்துள்ளோம்.
உச்சநீதிமன்ற இரு நீதிபதிகளின் காலக்கெடு தீா்ப்பு, அரசியல் சாசனத்தில் இடம்பெறக் கூடிய திருத்தங்களா? அல்லது உச்சநீதிமன்றத் தீா்ப்பாக மட்டுமே அவை நீடிக்கக் கூடியவையா? அரசியல் சாசனத்தில் ஆளுநா் அதிகாரம் மௌனமாக்கப்பட்டுள்ளது என்பது மறுக்கமுடியாத உண்மை தான். ஆனால், அதற்கான தீா்வு உச்சநீதிமன்றமே நாடாளுமன்றத்தை விட உயா்வானது என்பதாக உருவாகி விட்டதாகாதா?
மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் மன்றமே நாடாளுமன்றம். நீதிபதிகள் நியமிக்கப்படுபவா்கள் மட்டுமே. குடியரசுத் தலைவரின் பிரதிநிதியாக ஆளுநரும் நியமிக்கப்படுபவா் தான் என்றால், நீதிபதிகளும் அப்படித்தானே?
இரு நீதிபதிகளின் இந்தத் தீா்ப்புக்கு 5 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்றத்தில் அரசியல் சாசன அமா்வின் மறு தீா்ப்புதான் தீா்வு. தான் இப்போது நடக்கும் நகர்வாக அமையும்.
கருத்துகள்