டாஸ்மாக் வழக்கில் உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு உச்சநீதிமன்றம் நிரந்தரத் தடை விதிக்க மறுப்பு. அடுத்த விசாரணை தேதி வரையில் விசாரணை நடத்த இடைக்காலத் தடை உத்தரவு.
தாங்கள் சட்டத்தை மீறவில்லை என்று அமலாக்கத்துறை யினர் தரப்பு கூறியதை எழுத்துபூர்வமாக அடுத்த விசாரணை தேதியில் தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு. டாஸ்மாக் விவகாரத்தில் அமலாக்கத்துறையிடம் எந்த ஆதாரமும் இல்லை என்று கூறிய நிலையில் தான் தற்போது தற்காலிகமாக தடை அதை சிலர் விளம்பரத்திற்கு ஆரவாரம் செய்து பிரஸ்தாபித்து வருகிறார்கள். ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் நன்கு அறிந்த ஆதாரபூர்வமான ஊழல் டாஸ்மாக்கில் நடந்திருக்கிறது. என்பது பரவலாக பேசப்படும் நிலையில்
இதில் உச்சநீதிமன்றம் தமிழக அரசு தாக்கல் செய்த மனுவுக்கு தற்காலிகமாக ஒரு தடை ஒன்று விதித்திருக்கிறது. இதற்கு முன்பு கூட சென்னை உயர்நீதிமன்றத்தில் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு இதுபோன்று இடைக்காலத்தடை விதித்தது, பின்னர் வேறு நீதிபதிகளால் அந்தத் தடை நீக்கப்பட்டது. அதனால் இன்றைய தடை உத்தரவு இறுதித் தீர்ப்பு அல்ல.
ஒரு அரசு அலுவலர் லஞ்சம் பெறுகிறார் என்றால் அவரது வீடு மற்றும் அலுவலகம் சோதனைக்கு உட்படுத்தப்படுவது வழக்கமான ஒன்று தான். அதேபோல் ஒரு டாஸ்மாக் உயர் அலுவலர் லஞ்சம் பெறுகிறார் என்றால் அவரது அலுவலகம் சோதனைக்கு உட்படுத்தப்படுவதில் மாநிலத்தின் லோக் ஆயுக்தா மற்றும் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்சஒழிப்புத் துறை ஈடுபடலாம் மற்றும் மத்திய அரசு சார்பில் உள்ள துறை எனில் சிபிஐ ஈடுபடலாம் அலுவலர்கள் என்பவர்கள் மக்கள் வரிப்பணத்தை சம்பளமாக பெறும் நபர்கள் இதில் எங்கு கூட்டாட்சி தத்துவத்திற்கு இடையூறு வருகிறது? என அடுத்த வாய்தா வில் அரசு தரப்பில் வினா எழுப்ப முடியும். டாஸ்மாக் என்ற ஒரு அரசு சார்ந்த நிறுவனத்தின் மீது 41 வழக்கு வழக்கு மாநிலத்தின் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்சஒழிப்புத் துறை பதிவு செய்து அதுவும் மாநிலத்தின் அரச சார்பில் இயங்கும் துறை என்பது அணைவரும் அறிந்த ஒன்று. அமலாக்கத்துறை தனியாக வழக்கு பதியவில்லை அதில் பணிபுரிந்த இயக்குனர்கள் மற்றும் உயர் அலுவலர்கள் மீது தான் வழக்கு என்று ED தெளிவுபடுத்துகிற போது இந்த வாதம் பெரிய அளவில் எடுபடாது என்பதே சட்ட வல்லுநர்கள் கருத்து. அரசு ஊழியர்கள் ஆன நீங்கள் ஊழலற்றவர்களா என்பது தான் இங்கு கேள்வி. பண மோசடி குறித்து
அமலாக்கத்துறை விசாரணைக்கு எடுத்திருக்கும் வழக்குகளுக்கு மூல வழக்கு தமிழ்நாடு அரசாங்கத்தின் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) வசம் உள்ளது. இன்று சென்னை உயர்நீதிமன்றத்தால் அந்த வழக்குகளை CBI விசாரணைக்கு மாற்றி உத்தரவிடுவதற்கு 3 வார காலம் அவகாசம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்த வழக்கு CBI வசம் செல்லுமா என்பதே எழு வினா? அப்படி நடந்தால் இங்கு அமலாக்கத்துறை விட்ட இடத்தில் இருந்து சிபிஐ விசாரணையை தொடங்கும்,
அமலாக்கத்துறை கிட்டத்தட்ட 90 சதவீதம் ஆதாரங்களைத் திரட்டி விட்டதாகவே தெரிகிறது. எனவே இந்த வழக்கு சிபிஐ வசம் செல்கிற நிலையில் அமலாக்கத்துறை தொடர்ந்து விசாரிப்பதிலும் எந்த தடையும் உச்சநீதிமன்றம் ஏற்படுத்தாது அது வரை மட்டுமே இடைக்காலத் தடை. மீண்டும் திமுக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் இந்தப் பிரச்சனையை தள்ளிதான் போட்டு இருக்கிறார்களே தவிர இந்தப் பிரச்சனையை முழுவதும் தவிர்க்க முடியாது.
பல ஆண்டு காலமாக ஊழலின் ஊற்றாகத் தான் டாஸ்மாக் பணியாளர்கள் திகழ்கிறார்கள் எனபது பல தலைவர்கள் மத்தியில் விமர்சனம் எழுகிறது. டாஸ்மாக் ஊழல் போன்ற முறைகேடுகள் நடைபெறாமல் சரியான முறையில் அரசாங்க கஜானாவுக்கு பணம் சென்றிருந்தால் இந்த நேரம் தமிழ்நாடு அரசின் கடன் சுமார் 8 லட்சம் கோடியை முழுமையாக அடைந்திருக்கலாம் எனவும் பேசப்படுகிறது. அரசாங்கத்திற்கு வரவேண்டிய பணம் குறிப்பிட்ட சிலரால் சுரண்டப்பட்டு தமிழ்நாடு அரசு பெரும் கடன் சுமையில் தத்தளிக்கிறது. தனிநபர் மீது வழக்குத் தொடரலாம் ஆனால் நிறுவனம் மீது ஏன் வழக்கு தொடுத்தீர்கள், தனிநபர் செய்த விதிமீறலுக்காக ஒரு நிர்வாகம் மீது நடவடிக்கை எடுப்பதா
இங்கே தனிநபர் செய்த விதிமீறலுக்காக என்று உச்சநீதிமன்றம் குறிப்பிட்டிருப்பது சம்பந்தப்பட்ட நபரின் மீது விசாரணை நடத்தவோ வழக்குத் தொடுக்கவோ எந்தத் தடையும் இருக்காது, தப்பியோடிய இருவரையும் வெளிநாட்டில் இருந்து கொண்டு வருவார்கள், இப்போது சில கேள்விகள் கேட்டு தடை தான் விதித்திருக்கிறது உச்சநீதிமன்றம், கண்டிப்பாக அந்த கேள்விகளுக்கு பதில் அளித்து தடையை உடைக்கும் அரசின் அமலாக்கதுறை
என்ற கருத்து சட்ட வழக்கறிஞர்கள் மத்தியில் வலுவான நிலையில் உள்ளது.
கருத்துகள்