முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மதுரை கிரானைட் முறைகேடுகள் தொடர்பான அமலாக்கத் துறை வழக்கில் நீதிபதிகளின் இருவேறு தீர்ப்பு

மதுரை கிரானைட் முறைகேடுகள் தொடர்பான அமலாக்கத் துறை வழக்கில் நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்பு

மதுரை மாவட்டக் கனிம வளத்துறை அலுவலர்கள் தனியார் உடன் சேர்ந்து நடத்திய கிரானைட்  ஊழல் மோசடி தொடர்பான அமலாக்கத் துறை வழக்கில் சிபிஐ நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் வழங்கிய மாறுபட்ட தீர்ப்பு.



மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் உள்ள சுற்று வட்டாரப் பகுதிகளில் நடந்த கனிம வளத்துறை யின் கிரானைட் கற்கள் மோசடி தொடர்பாக ஒலிம்பஸ் கிரானைட் நிறுவத்தின் இயக்குனர்களான நாகராஜன், துரை தயாநிதி (முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன்) ஆகியோர் மீது கீழவளவு காவல்நிலையத்தில் கிரானைட் மோசடி குறித்து பதிவு செய்த வழக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டுவந்தது.





இந்த மோசடி தொடர்பாக அதில் நடந்த பண முறைகேடுகள் குறித்து PMLA சட்ட விதிகளின் படி அமலாக்கத்துறையும் தனி வழக்காகப் பதிவு செய்து மதுரை சிபிஐ நீதிமன்றத்தில் அறிக்கையை தாக்கல் செய்த நிலையில், ஒலிம்பஸ் கிரானைட் நிறுவனத்தின் பங்குதாரரான மதுரையைச் சேர்ந்த நாகராஜன்,

உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், “எங்கள் மீது கிரானைட் குவாரி மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது தொடர்பாக எங்கள் மீது PMLA பண மோசடிச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை மதுரை சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.



இந்த குற்றப்பத்திரிகையை  நீதிமன்றம் ஏற்றுள்ளது. இந்த வழக்கில் என்னை விடுவிக்கக் கோரி தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. அதை ரத்து செய்து என் மீதான குற்றச்சாட்டுகளையும் ரத்து செய்து உத்தரவிட வேண்டும்,” எனக் கூறப்பட்டிருந்த




மனு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பூர்ணிமா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது. இந்த வழக்கில் இரண்டு நீதிபதிகளும் தனித்தனி உத்தரவுகளைமப் பிறப்பித்தனர். நீதிபதி பூர்ணிமா பிறப்பித்த உத்தரவில், “மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் கீழவளவு பகுதியில் ஒலிம்பஸ் கிரானைட் நிறுவனம் கிரானைட் கற்களை வெட்டி எடுக்க 20 ஆண்டுகள் குத்தகைக்கு கடந்த 2008-ஆம் ஆண்டில் அனுமதி பெற்றுள்ளததன்படி அங்குள்ள நிலங்களை குத்தகைக்கு எடுத்து கிரானைட் குவாரிகளை அமைத்து செயல்படுத்தியுள்ளது.






அந்த நிறுவனம் விதிகளை மீறி ஊழல் செய்து கற்களை வெட்டி எடுத்துள்ளதாக 2011-ஆம் ஆண்டில் புகார்கள் எழுந்ததன் பேரில் அப்போதிருந்த மதுரை மாவட்ட ஆட்சியர் உ.சகாயம் சம்பந்தப்பட்ட இடத்தில் ஆய்வு செய்ததில் அந்த நிறுவனம் கற்களை வெட்டி எடுத்து ஊழல் செய்து முறைகேடாக எடுத்ததால்

அரசுக்கு ரூபாய்.5 கோடியே 48 லட்சம்  வருவாய் இழப்பு ஏற்பட்டதாக முடிவு செய்து  ஒலிம்பஸ் கிரானைட் நிறுவன குத்தகை ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. இது தொடர்பாக விசாரிக்க மாவட்டத்தில் ஆட்சியர் உ.சகாயம்  நியமி



க்கப்பட்டு, சுரங்க ஊழலை தடுக்கும் பரிந்துரைகளுடன் அறிக்கையும் தாக்கல் செய்தார். இதேபோல கனிமவளத்துறை அலுவலர் மோகன்தாஸ் சீராய்வு ஆய்வு செய்ததில், ஒலிம்பஸ் நிறுவனம் சட்டவிரோதமாக ரூபாய்.256 கோடியே 44 லட்சம் மதிப்புள்ள மலை சார்ந்த கிரானைட் கற்களை வெட்டி எடுத்ததாக தெரிவித்துள்ளதன் பேரில் மனுதாரர் உள்ளிட்டோர் மீது இந்திய வெடிபொருள் சட்டம், இந்திய தண்டனைச் சட்டப்பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்டவிரோத நடவடிக்கை மூலம் பெற்ற பணத்தை வைத்து பல்வேறு முதலீடுகள் செய்யப்பட்டு உள்ளதாகவும், மேற்கண்ட குற்றச்சாட்டுகளுக்கு தேவையான ஆதாரங்கள் இருப்பதாகவும் அமலாக்கத் துறை  தெரிவிக்கிறது. அமலாக்கத் துறை உயர் அலுவலர்கள் கூறியதைப் போல மனுதாரர் உள்ளிட்டடோர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இருப்பதாக இந்த நீதிமன்றம் கருதுகிறது. எனவே மனுதாரர் தாக்கல் செய்துள்ள சீராய்வு மனுக்கள் அணைத்தும் தள்ளுபடி செய்யப்படுகிறது” என அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.



அதேவேளையில், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவில், “சக நீதிபதி பிறப்பித்த உத்தரவை நான் பரிசீலித்தேன். இந்த வழக்கில் அவர் எடுத்த முடிவை தவறானவை என நான் ஒருபோதும் கூறமாட்டேன். ஆனால், பண மோசடி சட்டத்தின் கீழ் மனுதாரர் மீது தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகளை விசாரணை நீதிமன்றம் முறையாக பரிசீலித்ததாகத் தோன்றவில்லை. எனவே, மனுதாரர் மனு மீது விசாரணை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்கிறேன்.


இந்த விவகாரம் குறித்து விசாரணை நீதிமன்றம் மீண்டும் முறையாக விசாரிக்க வேண்டும்,” என இந்த வழக்கில் இரண்டு நீதிபதிகள் ஊழல் நடவடிக்கைகள் உள்ளதை ஏற்று  மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளனர். ஆனால் இரண்டும் ஒன்று தான் நேர்மையான தீர்ப்பு என்பதே இதில் ஒரு முன் பார்வை: அப்போது இருந்த மாவட்ட ஆட்சியர் உ.
சகாயம்


கொடுத்த ஆய்வு அறிக்கையில்,   அரசின் கருவூலத்திற்கு இழப்பு ரூபாய் .65,154.60 கோடி என மதிப்பிட்டார். மீட்புக்கு அபராதம் விதிக்கப்பட்டால், அந்தத் தொகை சுமார் ரூபாய் .1.06 லட்சம் கோடியாக இருக்கும் எனக் குறிப்பிட்டார். ”கணக்குகள். சரிபார்த்தல் நடந்த நிலையில் 

2013 ஆம் ஆண்டில், தனது. ஊழல் கண்டுபிடிப்புகளை அறிக்கையாக அரசாங்கத்திடம் சமர்ப்பித்தார், அதற்கு ஊழல் அரசியல் வாதிகள் கொடுத்த பரிசு உடனடியாக சென்னைக்கு பணி மாற்றப்பட்டார். பின்னர், சென்னை உயர்நீதிமன்றம் -ஒரு பொதுநல மனுவில் வழங்கிய உத்தரவில் இந்த மோசடி குறித்து விசாரிக்க விசாரணைக் ஆணையாளராக உசகாயத்தை நியமித்தது.


சென்னை உயர்நீதிமன்றம் கிரானைட் முறைகேடுகளை ஆய்வு செய்ய அமைத்த  ஆய்வுக் குழு சட்ட ஆணையர் உ. சகாயம் இஆப என நியமனம் செய்யப்பட்ட நிலையில் இன்று, மதுரை  மற்றும் அதைச் சுற்றியுள்ள கிரானைட் சுரங்கமானது மெய்நிகர் நிறுத்தத்திற்கு வந்துள்ளது, இதில் உசிலம்பட்டி அருகே பிராதுக்காரன்பட்டி  பி.ஆர்.பழனிச்சாமிக்கு மேலூர் நீதிமன்றத்தில் ஊழல் செய்து அப்போது ஜாமீன் வழங்கிய  மகேந்திர பூபதி என்ற நீதித்துறை நடுவர் பணி நீக்கம் செய்தது சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை குற்றவாளிக்கு  தொழில்துறையில் பல முக்கியமானவர்கள் என பார்க்கப்படும் நபர்கள் அரசியல் வாதிகள் கிரிமினல் குற்றம் செய்த நிலையில் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றனர்.

தனது அறிக்கையில், 2012-13 ஆம் ஆண்டில்  மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய் மற்றும் சுரங்கங்கள் மற்றும் தாதுக்கள் துறைகள் மற்றும் தனியார் சுரங்க நிறுவனங்களுக்கு எதிராக 98 முதல் தகவல் அறிக்கைகளை பதிவு செய்தது. இவர்களில் ஒலிம்பஸ் கிரானைட்டும் அடங்குவர், இதில் துரை தயாநிதி - அவரது தந்தை எம்.கே.அழகிரி  அப்போதைய மத்திய இரசாயனங்கள் மற்றும் உரங்களுக்கான மத்திய அமைச்சர் மற்றும் பி.ஆர். பழனிச்சாமி மற்றும் சிந்து கிரானைட்டுகளுக்கு சொந்தமான பிஆர்பி ஏற்றுமதி நிறுவனங்கள் அடங்கும். கனிம மாஃபியாக்கள் பிடியில் தமிழ்நாடு சிக்கிய நிலையில் 

 தமிழ்நாட்டின் ஊழல் அவலம் பொது வெளியில் பேசப்படுகிறது.

தற்போது 02-05-2025 கிரானைட் முறைகேடுகளை வெளிக் கொண்டு வந்த, ஓய்வு பெற்ற உ.சகாயம் இஆப அவர்களுக்கு பாதுகாப்பு விலக்கப்பட்டது 

பேசுபொருள். அவருக்கு நாமக்கல், மதுரை மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியராகவும். பல்வேறு துறைகளில் உயர் அலுவலராகவும் பணியாற்றி விருப்ப ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அலுவலர் உ.சகாயம்.

இவர், மதுரை மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றிய காலத்தில் கிரானைட் குவாரி ஊழலை வெளிப்படுத்தினார். அதையடுத்து, 2014-ஆம் ஆண்டில் சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் கிரானைட் முறைகேடுகள் குறித்து விசாரித்த சகாயம், 2015- ஆம் ஆண்டு முதல் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்த நிலையில் 

கிரானைட் குவாரி ஊழல் வழக்கு ஒருபக்கம் மதுரை நீதிமன்றத்தில் நடைபெற்றது. இவ்வாறான சூழலில், இவ்வழக்கு தொடர்பான விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு சகாயத்துக்கு மதுரை நீதிமன்றம் சம்மன் அனுப்பியிருந்த நிலையில், தமிழ்நாடு அரசு தனக்கு வழங்கியிருந்த பாதுகாப்பை விலக்கிக் கொண்டதால், மதுரை வந்தால் தன்னுடைய உயிருக்குப் பாதுகாப்பு இல்லை என்று குறிப்பிட்டு நீதிமன்றத்தில் அவர் ஆஜராகவில்லை.

அது தொடர்பாக, அரசு வழக்கறிஞருக்கு உ.சகாயம், தனக்கு பாதுகாப்பைத் திரும்பப்பெற்றது தவறு என்றும், கிரானைட் குவாரி முறைகேட்டில் ஈடுபட்டவர்களின் கடந்த கால செயல்பாடுகளைக் கருத்தில் கொள்ளாமல், தனக்கு அரசு கொடுத்த பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டிருக்கிறதென்றும், அதனால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் நீதிமன்றத்தில் ஆஜராக வாய்ப்பில்லை என்றும் கடிதம் எழுதியிருக்கிறார்இந்த நிலையில், யாருக்குப் பாதுகாப்பு அளிப்பது என்பது பற்றி உளவுத்துறை, காவல்துறையுடன் ஆலோசித்து உள்துறை முடிவெடுக்கும் என்றும், உ.சகாயத்துக்குப் பாதுகாப்பு அளிப்பது பற்றி பரிசீலனை செய்யப்படும் என்றும் தமிழ்நாடு அரசு சார்பில் விளக்கமளித்திருக்கிறது.  முடியும் வரை பாதுகாப்பு வழங்க வேண்டியது அரசின் கடமை.ஊழல் மோசடி உசிலம்பட்டி அருகில் உள்ள பிராதுக்காரன்பட்டியைச் சேர்ந்த பிஆர்பி எனும் இயற்கை வளத் திருட்டு செய்த பழனிச்சாமி  எனும் சுரங்கத் தொழில் அதிபருக்கு ஆதரவாக லஞ்சம் பெற்ற பின்னர் தீர்ப்பளித்த மேலூர் நீதித்துறை மாஜிஸ்திரேட் மகேந்திர பூபதி என்ற நபர் அப்போதே பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

சுரங்க வழக்குகளில் உயர்நீதிமன்ற உத்தரவுகளைப் பின்பற்றத் தவறியதற்காக மகேந்திர பூபதியை  சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி.என். பிரகாஷ் முதன்முதலில் கண்டித்தார், மேலும் நீதித்துறையின் அடிப்படை ஒழுக்கங்களை மீறியதற்காக அவமதிப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டார்.உயர்நீதிமன்ற வட்டாரங்களின் படி, மேலூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சட்டவிரோத சுரங்கம் காரணமாக குறைந்தது 74 நீர் தொட்டிகள் மற்றும் கால்வாய்கள் பல ஆண்டுகளாக அழிக்கப்பட்டுள்ளன, அங்கு இந்த PRP சுமார் 6,000 ஏக்கர் நிலங்களை ஆக்கிரமித்துள்ளது.மேலூரில் உள்ள ஒரு நீதித்துறை நடுவர், பிஆர்பி கிரானைட்ஸின் சுரங்க அதிபர் பிஆர் பழனிச்சாமி மற்றும் இரண்டு பேருக்கு ஆதரவாக உத்தரவு பிறப்பித்த மூன்று நாட்களுக்குப் பிறகு, சென்னை உயர் நீதிமன்றம்   இடைநீக்கம் செய்தது இப்போது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...