தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்று நான்கு ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் இன்று மீண்டும் தமிழ்நாடு அமைச்சரவையில் இலாகா மாற்றம் செய்யப்பட்டது.
சட்டத்துறை அமைச்சராக இருந்த ரகுபதியின் இலாகா மாற்றப்பட்டது. அமைச்சர் துரைமுருகனுக்கு சட்டத்துறை கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.
அதே போல அமைச்சர் துரைமுருகன் வசமிருந்த கனிமங்கள், சுரங்கம் மற்றும் இயற்கை வளத்துறை, அமைச்சர் ரகுபதிக்கு மாற்றம் செய்யப்பட்டது. மூத்த அமைச்சரின் இலாகா மாற்றம் செய்யப்பட்டது.
பத்திரிகை ஆசிரியர்கள் சந்திப்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் எதையெதையெல்லாம் சாதனை எனச் சொன்னாரோ, அவை எதுவும் சாதனையல்ல.
முதலில்: குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூபாய் 1,000 வழங்குவது,
இரண்டாவது: பேருந்துகளில் பெண்கள் கட்டணமில்லாமல் பயணம் செய்ய அனுமதித்திருப்பது.
மூன்றாவதாக: புதுமைப் பெண் என்பதாக அரசு பள்ளி மாணவிகள் கல்லூரியில் படிக்கும் போது மாதம் ருபாய் 1,000,
நான்காவதாக: தமிழ் புதல்வன் என்பதாக அரசு பள்ளி மாணவர்கள் கல்லூரியில் படிக்கும் போது மாதம் ரூபாய் 1,000,
ஐந்தாவதாக: அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம்,
இவை மீண்டும் ஓட்டு வாங்கி ஆட்சியில் அமர்வதற்காக மக்களுக்கு வீசப்பட்ட தூண்டில் வலை எனப் பேசப்படும் நிலையில். முன் சாதனையா அல்லது பின் வேதனைமயா.
இவையெல்லாம் தேவைப்படாமல் இவ்வளவு நாட்களாக வாழ முடிந்த மக்களுக்கு, தற்போது அரசை எதிர்பார்க்க நேர்வதே ஒரு பெரும் தோல்வி தான் எனப் பேசப்படும் நிலையில்
அரசு கல்லூரிகள் அடிப்படைத் தேவைகள் கூட இல்லாமல் அல்லாடுகின்றன. கல்லூரிகளில் பேராசிரியர்களை நியமிக்க பணமில்லாத அவலங்கள் உள்ள நிலையில் இந்த ஆயிரம் ரூபாய் மட்டுமே வந்து என்ன பயன் தரும் என்பது எழுவினா ?
மது வியாபாரத்திற்காக காணுமிடமெல்லாம் மதுபானங்கள் டாஸ்மாக் மற்றும் குடிபானப் பார்களை திறந்து வைத்ததில் தமிழ்நாடு ஆண்களின் உழைக்கும் சக்தியே ஊனப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் இயக்கம் என்பதே உழைப்பில் வட இந்திய இளைஞர்களையே பெருமளவு நம்பியுள்ளது எவ்வளவு பெரிய அவலம். இதை பற்றி என்றேனும் யோசித்தார்களா என்பது குறித்து ம் அரசியல் தலைவர்கள் மத்தியில் பேசப்படுகிறது?
மாறாக அரசின் சில தோல்விகள்..எனப் பட்டியல் போட்டால் அதை எழுத்தில் சொல்லி மாளாது.
இவற்றையெல்லாம் பேசாத சில செய்தி ஜால்ரா ஊடகத்தினர் தானே அங்கு கூடினர் அதிகரிக்கும்
ஊழல் முறைகேடுகள், இயற்கை வளச் சுரண்டல்கள், சட்டம் ஒழுங்குச் சீர்கேடு, ஜாதியப் பகைமைகள் அதிகரித்திருப்பது, அடித்தள மக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரிப்பு, மத்திய பாஜக அரசின் சட்ட திட்டங்களை அமல்படுத்திக் கொண்டே எதிர்ப்பது போல நடத்திக் காட்டுவது, முந்தைய ஊழல் ஆட்சியாளர்களையும், அலுவலர்களையும் பாதுகாப்பது எனச் சொல்ல எவ்வளவோ உள்ளதை மக்கள் அறிவார்கள்.
கடந்த நான்காண்டுகளாக இதழை வாசிப்பவர்கள் இதனை நன்கு உணர முடியும்.
திமுக ஆட்சியை எதிர்க்கும் அதே சமயம் மற்ற அரசியல் கட்சிகள் அதன் தமிழ்நாடு தலைவர்கள் எதன் மீதும் தற்போது நம்பிக்கை வைக்கவும் முடியவில்லை! காரணம் பல
கருத்துகள்