முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழ்நாடு மூத்த அமைச்சர் இலாகா மாற்றம்

தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்று நான்கு ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் இன்று மீண்டும் தமிழ்நாடு அமைச்சரவையில் இலாகா மாற்றம் செய்யப்பட்டது.


சட்டத்துறை அமைச்சராக இருந்த ரகுபதியின் இலாகா மாற்றப்பட்டது. அமைச்சர் துரைமுருகனுக்கு சட்டத்துறை கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.

அதே போல அமைச்சர் துரைமுருகன் வசமிருந்த கனிமங்கள், சுரங்கம் மற்றும் இயற்கை வளத்துறை, அமைச்சர் ரகுபதிக்கு மாற்றம் செய்யப்பட்டது. மூத்த அமைச்சரின் இலாகா மாற்றம் செய்யப்பட்டது. 


 பத்திரிகை ஆசிரியர்கள் சந்திப்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் எதையெதையெல்லாம் சாதனை எனச் சொன்னாரோ, அவை எதுவும் சாதனையல்ல.

முதலில்: குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூபாய் 1,000 வழங்குவது,

இரண்டாவது: பேருந்துகளில் பெண்கள் கட்டணமில்லாமல் பயணம் செய்ய அனுமதித்திருப்பது.

மூன்றாவதாக: புதுமைப் பெண் என்பதாக அரசு பள்ளி மாணவிகள் கல்லூரியில் படிக்கும் போது மாதம் ருபாய் 1,000,

நான்காவதாக: தமிழ் புதல்வன் என்பதாக அரசு பள்ளி மாணவர்கள் கல்லூரியில் படிக்கும் போது மாதம் ரூபாய் 1,000,

ஐந்தாவதாக: அரசு பள்ளி  மாணவர்களுக்கு காலை உணவு திட்டம்,

இவை மீண்டும் ஓட்டு வாங்கி ஆட்சியில் அமர்வதற்காக மக்களுக்கு வீசப்பட்ட தூண்டில் வலை எனப் பேசப்படும் நிலையில். முன் சாதனையா அல்லது பின் வேதனைமயா.

இவையெல்லாம் தேவைப்படாமல் இவ்வளவு நாட்களாக வாழ முடிந்த மக்களுக்கு, தற்போது அரசை எதிர்பார்க்க நேர்வதே ஒரு பெரும் தோல்வி தான் எனப் பேசப்படும் நிலையில் 

அரசு கல்லூரிகள் அடிப்படைத்  தேவைகள் கூட இல்லாமல் அல்லாடுகின்றன.  கல்லூரிகளில் பேராசிரியர்களை நியமிக்க பணமில்லாத அவலங்கள் உள்ள நிலையில் இந்த ஆயிரம் ரூபாய் மட்டுமே வந்து என்ன பயன் தரும் என்பது எழுவினா ?

மது வியாபாரத்திற்காக காணுமிடமெல்லாம் மதுபானங்கள் டாஸ்மாக்  மற்றும் குடிபானப் பார்களை திறந்து வைத்ததில் தமிழ்நாடு ஆண்களின் உழைக்கும்  சக்தியே ஊனப்பட்டுள்ளது.  தமிழ்நாட்டின்   இயக்கம் என்பதே உழைப்பில் வட இந்திய இளைஞர்களையே  பெருமளவு நம்பியுள்ளது எவ்வளவு பெரிய அவலம். இதை பற்றி என்றேனும் யோசித்தார்களா என்பது குறித்து ம் அரசியல் தலைவர்கள் மத்தியில் பேசப்படுகிறது?

மாறாக  அரசின் சில தோல்விகள்..எனப் பட்டியல் போட்டால் அதை எழுத்தில் சொல்லி மாளாது.

இவற்றையெல்லாம் பேசாத சில செய்தி ஜால்ரா ஊடகத்தினர் தானே அங்கு கூடினர்  அதிகரிக்கும் 

ஊழல் முறைகேடுகள், இயற்கை வளச் சுரண்டல்கள், சட்டம் ஒழுங்குச் சீர்கேடு, ஜாதியப் பகைமைகள் அதிகரித்திருப்பது, அடித்தள மக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரிப்பு, மத்திய பாஜக அரசின் சட்ட திட்டங்களை அமல்படுத்திக் கொண்டே எதிர்ப்பது போல நடத்திக் காட்டுவது, முந்தைய ஊழல் ஆட்சியாளர்களையும், அலுவலர்களையும் பாதுகாப்பது எனச் சொல்ல எவ்வளவோ உள்ளதை மக்கள் அறிவார்கள். 

கடந்த நான்காண்டுகளாக இதழை வாசிப்பவர்கள் இதனை நன்கு உணர முடியும்.

திமுக ஆட்சியை எதிர்க்கும் அதே சமயம்  மற்ற அரசியல் கட்சிகள் அதன் தமிழ்நாடு தலைவர்கள் எதன் மீதும் தற்போது நம்பிக்கை வைக்கவும் முடியவில்லை! காரணம் பல

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...