பிரபல நடிகர் கவுண்டமனியின் மனைவி சாந்தி காலமானார்
அவருக்கு வயது 68 கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கபட்டு சிகிச்சையில் பலன் அளிக்காத நிலையில் இன்று காலை காலமானார். சாந்தியின் உடல் நல்லடக்கம் நாளை நடக்க உள்ளது. தமிழ் திரைப்பட நடிகர் நடிகைகள் பலரும் சாந்தியின் மறைவுக்கு நேரில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சென்னை தேனாம்பேட்டையில் எச்.ஐ.இ.டி கல்லூரி எதிரிலுள்ள நடிகர் கவுண்டமணியின் வீட்டில் தற்போது சாந்தியின் உடல் வைக்கப்பட்டுள்ளது சுப்பிரமணியன் என்ற பெயர் கொண்ட கவுண்டர் மணி கருப்பையா என்பவருக்கும் அன்னம்மாள் என்பவருக்கும் மகனாவார் 1939 ஆம் ஆண்டில் வல்லகுந்தபுரம், கிராமத்தில் தற்போது உடுமலைப்பேட்டை, தாலுகா திருப்பூர் மாவட்டத்தில் பிறந்தவர. தற்போதைய திருப்பூர் மாவட்டம் பொள்ளாச்சியிலிருந்து திருமூர்த்தி மலைக்குச் செல்லும் வழியிலிருக்கும் கிராமத்தில் இவரது ஆரம்பகாலத்தில் மேடை நாடகங்களில்
பாமரத் தமிழ்ப் பேசி எதிர் தரப்பினருக்கு கவுண்டர் செய்து பேசிய சுப்பிரமணியன் கவுண்டர் மணி என அழைக்கப்பட்டு அதுவே கவுண்ட மணி ஆனது நாடகத்தில் நடித்ததால். திரையுலகில் தடம் பதிக்க வழி செய்தது. நாடகங்களில் அல்லது படங்களில் நடிக்கும்போது, யார் என்ன பேசினாலும் அதற்கு எதிராகப் பேசி (Counter) கவனம் ஈர்ப்பது இவரது வழக்கம். அதன் காரணமாக கவுண்டர்மணி (Countermani) என சக நடிகர்கள் அழைத்தனர். 16 வயதினிலே படத்தில் நடித்த போது இவருக்கு அந்தப் பெயரைப் தலைப்பில் பயன்படுத்த வைத்தவர் இயக்குநர் கே பாக்யராஜ். அத்திரைப்படத்திலிருந்துதான் இவர் கவுண்டமணி என்ற பெயரில் அழைக்கப்பட்டார். 26 வயது முதல் திரைப்படங்களில் நடிக்கிறார் 450 திரைப்படங்களில் நடித்ததில் 10 திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்
மேலும் வில்லன், குணசித்திர நகைச்சுவை நடிகராகவும் நடிகர் செந்தில் இணைந்து நடித்த நகைச்சுவைக் காட்சிகள் பிரபலமான நிலையில் ரசிகர்கள் மனதில் என்றும் நீங்கா இடம்பிடித்தார்
சென்னை தேனாம்பேட்டையில் எச்.ஐ.இ.டி கல்லூரி எதிரே அமைந்துள்ள கவுண்டமணியின் வீட்டில் தற்போது சாந்தியின் உடல் வைக்கப்பட்டுள்ளது உடல் நல்லடக்கம் நாளை நடக்க உள்ளது. தமிழ் தெலுங்கு, மலையாள, கன்னட நடிகர் நடிகைகள் பலரும் சாந்தியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர். நடிகர் கவுண்டமணி சாந்தி தம்பதிக்கு இரு மகள்கள் உள்ளனர்
கருத்துகள்