மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக, டாக்டர் அஜய் குமார் புதிதாக நியமிக்கப்பட்டார் (UPSC தலைவர்)
பதவிக்காலம் ஏப்ரல் 29, 2025 அன்று முடிவடைந்ததை அடுத்து பதவியேற்கிறார். அவருக்கு முன்பு, மனோஜ் சோனி சிறிது காலம் அந்தப் பதவியை வகித்தார், ஆனால் தனிப்பட்ட காரணங்களால் ஜூன் மாதம் 2024 ஆம் ஆண்டில் ராஜினாமா செய்தார்.
1985 ஆம் ஆண்டு கேரளாப் பிரிவைச் சேர்ந்த ஐஏஎஸ் ஆன டாக்டர் அஜய் குமார், யுபிஎஸ்சி தலைவராக நியமிக்கப்படுவதற்கு முன்பு ஆகஸ்ட் 23, 2019 முதல் அக்டோபர் 31, 2022 வரை இந்தியாவின் பாதுகாப்புச் செயலாளராகப் பணியாற்றினார். அறிக்கைகளின் படி, அவரது பதவிக் காலத்தில், அக்னிவீர் ஆட்சேர்ப்புத் திட்டம், பாதுகாப்புப் பணியாளர்களின் தலைமைத் தளபதியை உருவாக்குதல் மற்றும் ஆயுதத் தொழிற்சாலைகளை பெருநிறுவனமயமாக்குதல் உள்ளிட்ட முக்கியமான பாதுகாப்பு சீர்திருத்தங்களில் பங்கு வகித்தார்
அஜய் குமார் கான்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (IIT) கல்வியைத் தொடங்கினார், அங்கு அவர் மின் பொறியியலில் BTech பெற்றார். குறிப்பிடத்தக்க வகையில், QS உலக பல்கலைக்கழக தரவரிசை 2024 ன் படி, IIT கான்பூர் உலகளவில் 278 வது இடத்தில் உள்ளது. கூடுதலாக, இந்தியாவில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு (NIRF) 2024 ல் இந்த முதன்மையான பொறியியல் நிறுவனம் 5 வது இடத்தைப் பிடித்துள்ளது.
இளங்கலைப் படிப்பிற்குப் பிறகு, அஜித் குமார் அமெரிக்காவில் உயர்கல்வி பயின்றார். வளர்ச்சி பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார், அதைத் தொடர்ந்து மினசோட்டா பல்கலைக்கழகத்தின் கார்ல்சன் மேலாண்மைப் பள்ளியில் வணிக நிர்வாகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.மினசோட்டா பல்கலைக்கழகம் QS உலக தரவரிசை 2024 இல் 150–200 வரிசையில் இடம் பெற்றுள்ளது, மேலும் அதன் வணிகப் பள்ளி ஆராய்ச்சி மற்றும் கொள்கை சார்ந்த ஆய்வுகளுக்காக உலகளவில் மதிக்ப்படும்
யுபிஎஸ்சியின் புதிய தலைவர் அஜய் குமார்: ஐஐடி-கான்பூரில் இருந்து அமெரிக்காவில் ப பிஎச்டி பட்டம் பெற்றவர் -
கருத்துகள்