முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அமலாக்கத்துறை விசாரணை வளையத்தில் டாஸ்மாக் விசாகன் இறுகும் பிடி

டாஸ்மாக் ஊழல் முறைகேடு வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரிய மனுவுக்கு மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு


டாஸ்மாக்கில் ரூபாய்.1000 கோடி முறைகேடு நடந்துள்ளது தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை சிபிஐ-க்கு மாற்றக் கோரிய வழக்கில், மத்திய மாநில அரசுகள், சிபிஐ, அமலாக்கத் துறை மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை உயர் நீதிமன்றத்தில் 


WP 18248/2025.               WP. 18374/2025 வழக்கில் பாளையங்கோட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் 

K.வெங்கடாஜலபதி @ குட்டி 

சார்பில் வழக்கறிஞர் V.R.சண்முகநாதன்ஆஜராகிய நிலையில் எதிர் தரப்பினர் 

1) THE UNION OF INDIA

2) THE STATE OF TAMIL NADU

3) THE DIRECTOR GENERAL OF POLICE

4) CENTRAL BUREAU OF INVESTIGATION

5) TAMIL NADU STATE MARKETING CORPROAITON LIMITED (TASMAC)

6) DIRECTOR

7) DIRECTORATE OF ENFORCEMENT

8) THE JOINT DIRECTOR சேர்க்கப்பட்ட நிலையில் 




பொதுநல மனுவில், தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை அதிகவிலைக்கு விற்பனை செய்தது, பார் உரிமம் வழங்கியது உள்ளிட்டவற்றில் ஆயிரம் கோடி ரூபாய் அளவில் ஊழல் முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார் கூறப்பட்டது தொடர்பாக, 2017 முதல் 2024 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் பதிவு செய்த வழக்குகளின் அடிப்படையில் அமலாக்கத் துறையினர், சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த மார்ச் மாதம் சோதனை நடத்தினர். இந்நிலையில், இந்த முறைகேடுகள் தொடர்பாக டாஸ்மாக் மற்றும் அதன் உயர் அலுவலர்களுக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்துள்ள வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும். அமலாக்கத் துறை விசாரணையை முடக்கும் நோக்கில் மாநில அரசு செயல்படுகிறது.




ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு வழக்கை நியாயமாகவும், எந்த இடையூறும் இன்றி விசாரிக்க வேண்டும் என்பதால் சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும். டாஸ்மாக் அலுவலர்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை விசாரிக்க மாநில அரசுக்கு தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் வி.லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு மத்திய, மாநில அரசுகள், சிபிஐ, அமலாக்கத் துறை, டாஸ்மாக் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்தனர். இந்த நிலையில் டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் விசாகன் வீட்டில் சோதனை நடத்தினர் அவர் தற்போது அமலாக்கத்துறை விசாரணை வளையத்தில் உள்ளார்



ஆதோடு ஒரே நேரத்தில், ரூபாய் 500 கோடி  மேல் முதலீடு செய்து, நடிகர்கள் தனுஷ், சிலம்பரசன், சிவகார்த்திகேயன், அதர்வா ஆகியோர் நடிப்பில் உருவா படங்களை தயாரித்தவரும், முதல்வர் மு.க.ஸ்டாலினின் நெருங்கிய உறவினருமான ஆகாஷ் என்பவர் வீட்டில், சட்ட விரோதப் பணப்பரிமாற்றம் தொடர்பாக, அமலாக்கத்துறை அலுவவர்கள் சோதனை நடத்தினர்.சேலம் மாவட்ட தொழில் அதிபர் பாஸ்கரன். அவரது மகன் ஆகாஷ். இவர், 'டான் பிக்சர்ஸ்' என்ற நிறுவனம் மூலமாக, சினிமா திரைப்படங்களைத் தயாரித்து வருகிறார். ஒரே நேரத்தில், ரூபாய் 500 கோடி மேல் முதலீடு செய்து, தனுஷ் நடிப்பில், இட்லி கடை சிவகார்த்திகேயன் நடிப்பில், பராசக்தி அதர்வா நடிப்பில், இதயம் முரளி மற்றும் சிம்பு நடிக்கும் ஒரு படத்தையும் தயாரித்து வருகிறார். குறுகிய காலத்தில், தமிழ் சினிமாவில் கோலோச்சி வரும் ஆகாஷின் அபார வளர்ச்சி, தமிழ் திரையுலக வட்டாரத்தையே பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. மறைந்த தி.மு.க., தலைவர் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்துவின் மகள் தேன்மொழியை, கடலுாரைச் சேர்ந்த தொழில் அதிபரும், 'கவின்கேர்' நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருமான சி.கே.ரங்கநாதன் திருமணம் செய்துள்ளார். இவர்களின் இரண்டாவது மகள் தாரணி. அவரது கணவர் தான் இந்த ஆகாஷ் என்ற நபர் 

முதல்வர் மு.க.ஸ்டாலினின் நெருங்கிய உறவினரான ஆகாஷ், தாரணி ஆகியோர், சென்னை தேனாம்பேட்டையில், கே.பி.என்.தாசன் சாலையில் உள்ள அடுக்குமாடிகா குடியிருப்பில் வசித்து வருகின்றனர். சட்ட விரோத பணப் பரிமாற்றத்தில் ஆகாஷ் ஈடுபட்டு வருவதாக, அமலாக்கத்துறை அலுவலர்களுக்கு புகார்கள் சென்றன.

அதன் அடிப்படையில், ஆகாஷ் வீட்டில் நேற்று காலை 6:00 மணியிலிருந்து சோதனை நடத்தினர்; முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றினர். ஆகாஷின் கார் ஓட்டுநரிடமும் விசாரணை நடக்கிறது. தமிழ்நாடு மாநில சந்தைப்படுத்தல் கழகத்தில் (TASMAC) நடந்ததாகக் கூறப்படும் ரூபாய் 1,000 கோடி மதுபான 'ஊழல்' தொடர்பாக, சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் உள்ள உயர் அலுவலர்கள் மற்றும் முக்கியமான தொழிலதிபர்களின் இடங்களில் அமலாக்க இயக்குநரகத்தின் (ED) அலுவலர்கள் நேற்று வெள்ளிக்கிழமை (மே மாதம் 16, ஆம் தேதி 2025) ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர் .  மத்திய நிறுவனத்தின் பல குழுக்கள் வெள்ளிக்கிழமை அதிகாலை சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள ஒரு உயர் ரகக் குடியிருப்பில் சோதனைகளைத் தொடங்கினர் . தொழிலதிபர் வீட்டில் இல்லாத நிலையில், சோதனைகளைத் தொடர்ந்தனர் மற்றும் அதே வளாகத்தில் அவருக்கோ அவரது கூட்டாளிகளுக்குச் சொந்தமான அடுக்குமாடிக் குடியிருப்புகளின் உரிமை குறித்து விசாரிக்கத் தொடங்கினர். நேற்று மே மாதம் 16-ஆம் தேதி காலை 6:30 மணியளவில், சென்னை மணப்பாக்கத்திலுள்ள டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் விசாகன் வீட்டில் சோதனையை தொடங்கிய போதே, 'கே ஸ்மார்ட்' நிறுவனத்தின் உரிமையாளர் கேசவன் தொடர்புடைய இடங்களிலும், 'டான் பிக்சர்ஸ்' நிறுவனத்தைச் சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தொடர்புடைய இடங்களிலும் சோதனையைத் தொடங்கியது அமலாக்கத்துறை.

எம்.ஆர்.சி நகரிலுள்ள பிரபலமான அடுக்குமாடி குடியிருப்புக்குள் நுழைந்த அமலாக்கத்துறை அதிகாரிகள், ஆட்சி நடத்தும் முதல்வர் குடும்பத்துக்கு மேலிடத்திற்கு மிக நெருக்கமான உறவினர் ஒருவர் வீட்டுக் கதவையும் தட்டியிருக்கிறார்கள். வீட்டில் அந்த நபர் இல்லாததால், சோதனை மட்டும் நடந்து வருகிறது. இப்படி, டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 12 இடங்களில் சோதனையை நடத்தி வருகிறது அமலாக்கத்துறை. டாஸ்மாக் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் விசாகன் ஐ.ஏ.எஸ் வீட்டுக்குள் அதிரடியாகப் புகுந்து சோதனை நடத்தியிருக்கிறது அமலாக்கத்துறை. அதோடு, விசாகனிடம் மேற்கொண்டு விசாரணை நடத்துவதற்காக தங்களுடைய அலுவலகத்திற்கும் அமலாக்கத்துறை அதிகாரிகள் அழைத்துச் சென்றுள்ளனர். இந்த நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை.!



டாஸ்மாக் ஊழல் குறித்த வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும்.!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...