நிலத்தை அளவீடு செய்வதற்கு ரூபாய். பத்தாயிரம் லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர் கைது.
கடலுார் மாவட்டம், விருத்தாசலம் வட்டம் தொரவளூர் கிராமத்தை சேர்ந்தவர் வேலாயுதம், (வயது 68), அதே கிராமத்திலுள்ள தனது நிலத்தை அளவீடு செய்வதற்கு கணணி ஆன்லைனில் விண்ணப்பித்ததன்பேரில், நிலத்தை அளவீடு செய்ய தொரவளூர் கிராம நிர்வாக அலுவலரான பண்ருட்டி, எல்.ஆர்.,புரம் தனசேகர், (வயது 33) ரூ. 10 ஆயிரம் லஞ்சம் கேட்டார்.
கொடுக்க விரும்பாதது குறித்து வேலாயுதம், கடலுார் மாவட்டம் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் புகார் அளித்தார்.
அவர்கள் அறிவுறுத்தலின் பேரில், நேற்று முன்தினம் மதியம் 2:00 மணிக்கு கிராம நிர்வாக அலுவலகத்திலிருந்த தனசேகரிடம், பினாப்தலீன் இரசாயனப் பொடி தடவிய பணத்தை, வேலாயுதம் கொடுத்த போது,
அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்சஒழிப்புத் துறை துணைக் கண்காணிப்பாளர் சத்தியராஜ் தலைமையிலான குழுவினர், லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர் தனசேகரை பணம் பெறும் கையுடன் பிடித்து, விசாரணை நடத்தி கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் சேர்த்தனர்
கருத்துகள்