சகுரா அறிவியல் உயர்நிலைப் பள்ளித் திட்டம் 2025ற்காக இந்தியாவிலிருந்து 20 மாணவர்களை பள்ளிக் கல்வித்துறைச் செயலாளர் ஜப்பானுக்கு அனுப்பி வைத்தார்
கல்வி அமைச்சகத்தின் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறையின் செயலாளர் திரு சஞ்சய் குமார், இந்தியாவிலிருந்து சகுரா திட்டம் 2025 இல் பங்கேற்க ஜப்பானிற்கு அழைக்கப்பட்ட 20 பள்ளிக் குழந்தைகள் அடங்கிய குழுவை அந்நாட்டிற்கு வழி அனுப்பி வைத்தார். பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறையின் இணைச் செயலாளர் திருமதி அர்ச்சனா சர்மா அவஸ்தி, என்சிஐஆர்டி-இன் இணை இயக்குநர் பேராசிரியர் பிரகாஷ் சந்திர அகர்வால் மற்றும் கல்வி அமைச்சகத்தின் பிற அதிகாரிகளும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய திரு. சஞ்சய் குமார், ஜப்பான் போன்ற வளர்ந்த நாட்டை ஆராய்வதற்கான ஒரு பொன்னான வாய்ப்பை இந்த நிகழ்ச்சி வழங்குகிறது என்று கூறினார். எதிர்கால கண்டுபிடிப்பாளர்களை வடிவமைப்பதிலும் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதிலும் அதன் ஆழமான தாக்கத்தை அங்கீகரித்து, இந்த சகுரா அறிவியல் பயணத்தின் மகத்தான முக்கியத்துவத்தை அனைத்து மாணவர்களும் அவர்களுடன் வரும் ஆசிரியர்களும் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்வது அவசியம் என்று அவர் மேலும் வலியுறுத்தினார்.
இந்தக் குழுவில், ஜப்பான் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், 2025 ஜூன் 15 முதல் 21வரையிலான காலத்திற்கு, இந்தியாவில் இருந்து 20 பள்ளி மாணவர்கள் மற்றும் 2 மேற்பார்வையாளர்களையும், மேலும் மூன்று நாடுகளிலிருந்து (மலேசியா, தைவான் மற்றும் உக்ரைன்) பங்கேற்பாளர்களையும் அழைத்துள்ளது. இந்த 20 மாணவர்கள் (7 சிறுவர்கள் மற்றும் 13 சிறுமிகள்) அந்தமான் & நிக்கோபார் தீவுகள், லடாக், மிசோரம், நாகாலாந்து மற்றும் திரிபுராவில் உள்ள ஜவஹர் நவோதயா வித்யாலயாக்கள் மற்றும் அரசுப் பள்ளிகளைச் சேர்ந்தவர்கள்.
கருத்துகள்