முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

242 பேருடன் பயணம் செய்த ஏர் இந்தியா விமானம் AI171 பயங்கர விபத்து

அஹமதாபாத்தில் 242 பேருடன் பயணம் செய்த ஏர் இந்தியா விமானம் AI171 பயங்கர விபத்து.


உலகின் பாதுகாப்பான விமானங்களில் ஒன்றான போயிங் 787 விபத்துக்குள்ளான நிகழ்வு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஒரு பயணி மட்டும் நல்வாய்ப்பாக வெளியே குதித்து தப்பித்துள்ளார். விமான நிலைய ஓடுபாதையில் இருந்து மேலே எழும்பியதும் தொடர்ந்து மேல் நோக்கி செல்ல முடியாமல், விமானம் கீழே விழுந்து வெடித்துச் சிதறியுள்ளது. அகமதாபாத் விமான நிலையத்தின் சிசிடிவி காட்சியில் பதிவான விபத்தின் காட்சி மூலம் தெளிவாகிறது.



ஓடுபாதையில் இருந்து மேலே எழும்பியதும் தொடர்ந்து மேல் நோக்கி செல்ல முடியாமல், விமானம் கீழே விழுந்து வெடித்துச் சிதறியுள்ளது

அகமதாபாத் விமான விபத்து - சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் சார்பில் செயல்பட்டுவரும் கட்டுப்பாட்டு அறை 

தொடர்புக்கு: 011-24610843 | 9650391859 தொலைபேசி மூலம் தகவல் தெரிவிகிறது 






.கொடூரமான குஜராத் மாநிலத்தில் அஹமதாபாத் விமான விபத்துக்கு குஜராத் மாநில முன்னாள் முதலமைச்சரும், பாரதிய ஜனதா கட்சியின் பஞ்சாப் மற்றும் சண்டிகர் மாநில மேலிடப் பொறுப்பாளருமான விஜய் ரூபானி  உயிரிழந்தார் 

விமானத்தில் பயணித்த 242 நபரில் ஒருவரான விஷ்வாஸ் குமார் என்ற நபர் மட்டுமே காயங்களுடன் தப்பிப் பிழைத்ததை உறுதிப் படுத்தியுள்ளார். 




குஜராத் மாநிலம்  அஹமதாபாத் ஏர்- இன்டியா விமான விபத்தில் இதுவரை 204 உடல்கள் மீட்கப் பட்டிருக்கிறது. விபத்துக்குள்ளான விமானத்தில் மொத்தம் 242 நபர்கள் இருந்துள்ளனர். எது யாருடைய உடல் என அடையாளம் காண முடியாதபடி பெரும்பாலான உடல்கள் தீயில் கருகிப் போயுள்ளது தான் இறப்பை விட கூடுதல் சோகம். மரபணு மூலம் உடல்களை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது, அரசு நிர்வாகம். "விபத்துக்குள்ளான விமானத்தில் சுமார் 1,25,000 லிட்டர் எரிபொருள் இருந்ததனால் ஏற்பட்ட உயர் வெப்பநிலையால் யாரையும் காப்பாற்ற முடியவில்லை.






நான் விபத்து நடந்த இடத்திற்குச் சென்று பார்வையிட்டேன். சடலங்களை மீட்கும் பணி கிட்டத்தட்ட முடிவடைந்துவிட்டது. குடும்ப உறுப்பினர்களின் DNA மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. DNA பரிசோதனைகளுக்குப் பிறகு, உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும்." -  என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தகவல் 





கடந்த ஆறு வருஷமா லண்டனில் வேலையில்.. உள்ளவரோட மனைவி டாக்டர் Komi Vyas. 2 நாள் முன்னர் தான் தனது வேலையை  ராஜினாமா பண்ணிருக்காங்க.. கணவர் மற்றும் 3 குழந்தைகளோடு லண்டனில் செட்டில் ஆகுற பிளான்ல இன்னைக்கு விபத்துக்குள்ளான விமானத்தில் கிளம்பியிருக்காங்க அந்த ஐந்து பேரும் இப்போது உயிரோடு இல்லை...

அவங்க இன்று Flight கிளம்பியபோது எடுத்த last selfie புகைப்படம் சமூக வலைதளங்களில் வருகிறது



ஒருசேர உலகநாடுகள் அனைத்தும் அனுதாபத்தைத் தெரிவித்தபடி இருக்க, விமான விபத்து குறித்து போயிங் விமான அலுவலர்கள் விசாரிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். 

விமானம் எரிந்தபடி விழுந்து நொறுங்கிய இடத்தில் மாணவர் விடுதி ஒன்றிருக்க மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த மருத்துவக் கல்லூரி மாணவர்கள் பரிதாபமாக அதில் சிக்கி பழியாகியுள்ளனர். அந்த வகையில் ஐந்து மாணவர்கள் அநியாயமாக இறந்து போக எஞ்சிய 41 விடுதி மாணவர்கள் மருத்துவ மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டிருக்கிறார்கள். 

இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த யாரும் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என அஹமதாபாத் காவல்துறை ஆணையர் ஜி.எஸ்.மாலிக், தெரிவித்திருக்கிறார்.

குறிப்பிட்ட ஏர் இந்தியா விமான நிறுவனம் சார்ந்த பங்குச்சந்தை மொத்தமாக சரிந்ததாக செய்திகள் வந்து கொண்டிருக்கிறது.




மனித உயிர்களை காவு கொடுக்கும் ஒவ்வொரு நிகழ்வுகளுக்குப் பின்னாலும் ஒரு புதியபாடத்தை கற்றுக் கொள்கிறது ஆட்சியதிகாரம். 

புதிய பாடத்துக்கு அப்பாலும் கொடூர நிகழ்வுகள் நிகழாமல் இல்லை. இதைத்தான் காலம்தோறும் உணர்த்துகிறது, நிகழ்வுகள். 

அஹமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமானத்தில் ஏற்கனவே 246  பயணிகள் இருந்திருக்கின்றார்கள்.




விமானம் குடியிருப்புப்பகுதியில் வீழ்ந்து நொருங்கியிருக்கின்றது இந்தக் கட்டிடம்  ஒரு Medical college என்றும் அதன் ஒரு பகுதி மாணவர்கள் Canteen  என்பதால் சாப்பிட்ட தட்டுகளும் உணவுகளும் அப்படியே மேசை மீது இருக்கின்றன ஆகவே பயணிகளைத் தாண்டி அங்குள்ள  சாமானிய மக்களும் விபத்தில் சிக்கியிருக்கின்றார்கள்..






நீண்ட தூரப் பிரயாணம் இந்தியாவின் அஹமதாபாத்திலிருந்து - இங்கிலாந்து நாட்டின் இலண்டன் என்பதால் அதிக அளவிலான எரிபொருளும் இருந்திருக்கும். Boeing 787 ரக விமானங்களின் fuel capacity கிட்டத்தட்ட ஒரு லட்சம் லிட்டருக்கும் அதிகமாக இருக்கலாம் அது கீழே வீழ்ந்து நொருங்கும் போது ஏற்பட்ட அனர்த்தத்தினால் மிகப்பெரிய அளவு விமானம் தீப்பிடித்து எரிந்திருக்கின்றது.

விமான அனர்த்தத்தை முன்கூட்டியே அறிந்த விமானி May Day Call கொடுத்திருக்கின்றார்.  May Day call என்பது விமானங்களில் அதிக பட்ச அவசர நிலையை குறிப்பிடும் ஒரு வார்த்தைப் பிரயோகமாகும். மிகப்பெரிய அனர்த்த நிலையின் போது விமானி May day May day என்று அழைப்பில் குறிப்பிடுவார்.



விமானத்தில் அதிகளவு பயணிகள் இருந்தமையாலும் குடியிருப்பு பகுதியில் வீழ்ந்து தீபற்றி எரிந்தமையாலும் உயிரிழப்புகள் அதிகமாகலாம் விபத்தின் புகைப்படங்களைப் பார்க்கும் போது விபத்தின் கனதி தெரிகின்றது.

எதிர்காலத்தில் இவ்வாறான விபத்துகள் ஏற்படுவதை தவிர்ப்பது தான் உயிரிழந்தவர்களிற்கு செலுத்தும் அஞ்சலியாகும். 




அரசு பொது நிறுவனங்களை தனியாருக்கு மாற்றம் செய்து கொடுத்த மத்திய அரசு விமானங்களின் இயங்கு தன்மையை பரிசோதிக்காமல் இயக்கிய ஏர் இந்தியா நிறுவனமே இதற்கு முழுப் பொறுப்பை ஏற்க வேண்டும். 

இருந்தும் இவ்வாறான நிகழ்வுகளில் முக்கியமாக சில விஷயங்களை விவாதிக்க வேண்டியது அவசியம்.. முதலாவது விமானம் ஓடுதளத்திலிருந்து மேலே சென்ற 16வது நொடியில் சக்கரம் தரையிலிருந்து மேலே எழுகிறது.. 


சுமார் 35 வது நொடி வரை சீராக மேலே செல்கிறது. 

(விமானத்தில் செல்லும் எந்த ஒரு நபரும் இந்த நொடி வரை ஆபத்தை உணர்ந்திருக்க வாய்ப்பில்லை) 

சரியாக 35 வது நொடியிலிருந்து 54 வது நொடியில் கீழ்நோக்கி தாளப்பறந்த நிலையில் விபத்தாகிறது.

ஆகவே விமானம் பறந்த 16வது நொடி முதல் 54வது நொடி வரை 38 நொடிகள் வானில் பறந்துள்ளது அதில் 19 நொடி மேல்நோக்கியும் இன்னொரு 19 நொடி கீழ்நோக்கியும் பறந்துள்ளது.




தற்போது விமானத்தின் எமர்ஜென்சி கதவு (MidAir) நடு வானில் திறக்க இயலாதவாறு வடிவமைக்கப்பட்டது.. (Cabin Pressure) காரணமாக  நடுவானில் திறப்பது பேராபத்தை உருவாக்கும் என்பதால் திறக்காதவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. அப்படியே கேபின் பிரஷ்ரை மீறி திறக்க வேண்டுமாயின் மிக அதிக சக்தி தேவைப்படும். தரையில் திறப்பதற்கே பயிற்சி பெற்றவர்களுக்கு 20 முதல் 90 வினாடிகள் தேவைப்படும் (air slider deployment) முழுவதுமாக தயாராக. 

இப்படி ஏகப்பட்ட கேள்விகள் எழுகிறது.. அந்த 19 நொடிகளில் ஒருவர் தப்பித்துள்ளார்.விமானி சுமீத் சபர்வால் 


அஹமதாபாத்தில் இருந்து லண்டன் சென்ற விமானம் தரையில் விழுந்து நொறுங்கி தீப்பிடித்து எரிந்த விபத்தில் விமானத்தை இயக்கிய விமானி. சுமீத் சபர்வால் மும்பை பவாய் ஹிரானந்தானி பகுதியில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். அவர் விமானத்தை இயக்குவதில் நீண்ட அனுபவம் உடையவர் அவர் 8 ஆயிரத்து 200 மணி நேரம் விமானத்தை இயக்கிய அனுபவம் கொண்டவர். மேலும், மும்பையை அடுத்த பன்வெல்லைச் சேர்ந்த பணிப்பெண் மைதிலி பாட்டீல் (வயது 23) உயிரிழந்தார் . மைதிலி பாட்டீல் பன்வெல் தாலுகா நாவா கிராமத்தை சேர்ந்தவர். கடந்த 2 ஆண்டுகளாக விமானப் பணிப்பெண்ணாக உள்ளார்.

அதேபோன்று மும்பையை சேர்ந்த ஏர் இந்தியா ஊழியர் அபர்ணா மகாதிக் (வயது 42) உயிரிழந்து உள்ளார்.இதேபோல மும்பையை அடுத்த தானே மாவட்டம் பத்லாப்பூரில் வசித்து வரும் ஏர் இந்தியா விமான ஊழியர் தீபக் பாதக் என்பவரும் உயிரிழந்தார். இவர் 11 ஆண்டுகளாக ஏர் இந்தியாவில் வேலை பார்த்து வருகிறார். இந்தியாவில் இதற்கு முன்பு நடந்த பயணிகள் விமான விபத்துகள் குறித்து ஒரு பார்வை:-




1962 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 7 ஆம் தேதி:- மும்பையிலிருந்து லண்டன் நோக்கிப் புறப்பட்ட விமானம், விமானியின் கட்டுப்பாட்டை இழந்து வடகிழக்கே உள்ள மலை மீது மோதிய விபத்தில், 117 பயணிகளில் 94 பேர் கொல்லப்பட்டனர். இந்த விபத்தில் இந்திய அணுசக்தி ஆணையத்தின் தலைவர் டாக்டர் ஹோமி ஜஹாங்கிர் பாபாவும் உயிரிழந்தார். அடுத்ததாக 

1973 ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் தேதி:- சென்னையிலிருந்து டெல்லி நோக்கிச் சென்ற விமானம், இரவு 9.50 மணிக்கு புயல் மழை காரணமாக உயர் மின்சார அழுத்தக் கம்பியில் சிக்கி விமானத்தில் பயணித்த 65 பேரில் 48 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

1976  ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 12 ஆம் தேதி:- மும்பையிலிருந்து சென்னைக்கு வந்த விமானம் இயந்திரம் செயலிழந்ததால் விமானத்திலிருந்த 89 பயணிகள், 6 விமானப் பணியாளர்கள் என 95 பேரும் பலியானார்கள். விளவங்கோடு தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பொன்னப்ப நாடார், நடிகை ராணி சந்திரா, அவரது தாயார் காந்திமதி, சகோதரிகள் அம்புலி சீதா, நிம்மி, அவரது குழுவில் இடம்பெற்றிருந்தவர்களும் உயிரிழந்தனர்.

1978 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் தேதி:- மும்பையிலிருந்து துபாய்க்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம்,  மும்பை பாந்த்ரா கடற்கரையில் விழுந்ததில் 213 பயணிகளும் உயிரிழந்தனர். 

1990 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி:- மும்பையிலிருந்து பெங்களூரு நோக்கிச் சென்ற இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் தரையிறங்கியபோது விபத்துக்குள்ளானதில் விமானத்தில் பயணம் மேற்கொண்ட 146 பேரில் 92 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.




1996 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 12 ஆம் தேதி:- சௌதி ஏர்லைன்ஸ் - கஜகிஸ்தான் விமானங்கள் டெல்லி அருகே சர்கி தாத்ரி என்ற பகுதியில் நடுவானில் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 349 பேர் உயிரிழந்தனர். 

2000 ஆண்டு ஜூலை மாதம் 17ஆம் தேதி:- கொல்கத்தாவில் இருந்து டெல்லி நோக்கி சென்ற இந்தியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் இருந்த 55 பயணிகள், தரையில் இருந்த 5 பேர் என மொத்தம் 60 பேர் கொல்லப்பட்டனர்

2010 ஆம் ஆண்டு மே மாதம் 22 ஆம் தேதி:- துபாயிலிருந்து கர்நாடக மாநிலம் மங்களூரு விமான நிலையம் வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விபத்துக்குள்ளானதில் விமானத்தில் பயணம் செய்த 166 பேரில் 158 பயணிகள் பலியானார்கள்.



2020 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 7 ஆம் தேதி:- துபாயிலிருந்து கேரளா மாநிலம் கோழிக்கோடுக்கு கொரோனா காலத்தில் வந்த விமானம் விபத்துக்குள்ளானதில் பயணம் செய்த 190 பேரில் 21 பயணிகள் மரணம் அடைந்தனர். 110 பேர் காயம் அடைந்தனர். இது கடந்த கால நிகழ்வுகள் ஆகும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...