முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

புகார் மனுக்களுக்கு தமிழ்நாட்டில் 30 நாளில் பதில் இல்லை எனில் ரூபாய் 25,000 அபராதம்: தலைமை நீதிபதி அறிவுரை

புகார் மனுக்களுக்கு 30 நாளில் பதில் இல்லை எனில் ரூபாய் 25,000 அபராதம்: தமிழ்நாடு அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுரை.


திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த கே. சுப்பிரமணியன், ஆகஸ்ட் மாதம் 19 மற்றும் 21 ஆம் தேதிகளில் அளித்த புகார் மனுக்களை மாவட்டத்தில் ஆட்சியர் மற்றும் ஆர்.கே. பேட்டை தாசில்தார் ஆகியோர் முறையே பரிசீலிக்காததால், இது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அரசுக்கு அளித்த மனுக்களுக்கு 30 நாட்களில் பதில் அளிக்காவிட்டால் ரூபாய்.25,000 அபராதம் விதிக்க நேரிடும். 30 நாட்களில் விண்ணப்பங்களை பரிசீலிக்க வேண்டும் என்ற அரசின் அரசாணையை சுட்டிக்காட்டி எச்சரிக்கையும் விடுத்த நீதிபதி .

அரசுக்கு அளிக்கும் விண்ணப்பங்கள் மீது 30 நாட்களில் முடிவெடுக்காமல் இருப்பதால் பொதுநல வழக்குகள் அதிகரித்துள்ளன என சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி தெரிவித்தார்.

இதுகுறித்து அரசின் கவனத்திற்கு எடுத்துச்செல்வதாக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் உறுதி அளித்தார். 

அரசுக்கு அளித்த புகார் மனுக்களுக்கு 30 நாட்களில் கட்டாய பதில் அளிக்க வேண்டும் அவ்வாறு அளிக்காவிட்டால் ரூபாய்.25 ஆயிரம் அபராதம் என  சென்னை உயர்நீதிமன்றம் கூறிய நிலையில் 

உத்தரவுகளை அரசு அலுவலர்கள் முறையாகப் பின்பற்றாததால், பொதுமக்களின் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது.



2014 -ஆம் ஆண்டு அப்போதைய தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தலைமையிலான அமர்வு, பொதுமக்களின் மனுக்களை 30 நாட்களுக்குள் பரிசீலித்து, தெளிவான உத்தரவுகளுடன் பதில் அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டிருந்ததையடுத்து பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை ஒரு அரசாணை வெளியிட்டது. இதில், மனுக்கள் பெறப்பட்ட மூன்று நாட்களுக்குள் ஒப்புகை சீட்டு அளிக்க வேண்டும் மற்றும் ஒரு மாதத்திற்குள் மனுக்களை பைசல் செய்து தீர்க்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டது.

மேலும், 2018-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு அலுவலகக் கையேட்டில் திருத்தம் செய்து, மனுக்களை ஒரு மாதத்தில் தீர்ப்பது கட்டாயமாக்கப்பட்டது. ஆனால், இந்த உத்தரவுகளை அரசு அலுவலர்கள் முறையாகப் பின்பற்றாததால், பொதுமக்களின் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது.இதனால்,அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்கள், நீர்வழிகள் தவறாக பயன்படுத்தப்படுதல் போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாமல், பொது நல வழக்குகள் உயர்நீதிமன்றத்தில் அதிகரித்து வருகின்றன. இதன் உண்மையான காரணம் யாதெனில் லஞ்ச லாவண்ய ஊழல் மயம் தான் வேறில்லை, ஏழை  எளிய பஞ்சை பராரி மக்கள் போடும் பிச்சை லஞ்சத்தில் தான் பல அரசு ஊழியர்களின் தற்போது சொகுசு வாழ்க்கை வாழ்கின்றனர் முதலாவது 



வருவாய் துறை கனிம வளத்துறை சார்பதிவாளர் அலுவலகம் மருத்துவத் துறை சட்டத்துறை உணவுப் பாதுகாப்புத் துறை,

அலுவலர்கள் யாராக இருந்தாலும் அரசு பணி செய்யும் ஊழியர்கள் என்ற எண்ணம் அறவே இல்லை, தங்களை அரசின் செல்லப்பிள்ளை போலவும்,  ஒரு சர்வாதிகாரி போலவும் நினைத்து எங்கே சென்றாலும் பணப் பேய்களாகவே இருந்து வருகிறார்கள், ஊழல் தடுப்புக் கண்காணிப்புத் துறை பணம் நேரடியாக பெறும் ஊழியர்கள் மீது மட்டுமே கவனம் செலுத்துவதே காரணம். 




அரசு வேலை கிடைத்து பணி பெறுகிற வரைக்கும் இவர்கள் அலைந்து திரிந்து  வந்த நிலையில். பின்னர் அரசு வேலை கிடைத்ததும் அரசு வழங்கிய  பணியை அல்லது கடமையை சரியாக நேர்மையான முறையில் செய்யாமல் சிலர் சரியான அலுவலக நேரத்திற்கு சரியாக வராமல் வேலை பார்க்கும் இவர்கள் அரசு தன் வேலைக்கு தரக்கூடிய  மக்கள் வரிப்பணமான சம்பளத்தை மீறி அங்கு வரக்கூடிய ஏழ்மையான மக்கள் என்று கூடப் பாராமல் அவர்களுக்கு செய்ய வேண்டிய தங்கள் கடமைகளை பணம் லஞ்சமாகப் பெற்றுச் செய்கின்றனர். பணம் தராமல் இருந்தால் அவர்கள் கோரிக்கை மறுக்க முடிகிறது . அவர்கள் சாமானிய மக்கள் நம்மை என்ன செய்து விட முடியும் எனும் அசாத்திய தூணிச்சலும் ஒரு காரணமாகும் இது எவ்வளவு பெரிய கேவலம் என அவர்கள் உணரவில்லை. இந்த லஞ்சப் பணத்தில் உல்லாசமாக வாழ இவர்களுக்கு வெட்கமாக இல்லையா என மக்கள் பேசினாலும் நடவடிக்கைகள் எடுக்க பாவ புண்ணியம் பார்த்து துணிவில்லை,  ஊழல் தடுப்புச் சட்டங்கள் கடுமையாக இருந்தும் அதை செயல்படுத்தும் முறையில் தான் குறைபாடுகள் உள்ளன,  இது போன்ற லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்களுக்கு கடுமையான தண்டனையை நீதிமன்றத்தில் வழங்கும் நிலையில் அரசும்  வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்CVC ன்  PIDPI போல Vigilance & AC தீவிர நடவடிக்கை தேவை அதைத்தான் இந்த வழக்கில் நீதிமன்றம் சுட்டிக் காட்டுகிறது என அறியலாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...

சோழப் பேரரசி வானதி எழுப்பிய மூவர் கோவில்

முதலாம் இராஜேந்திர சோழரின் தாய்  வானவன் மாதேவி எனும் அரசி வானதி, சோழர்களின் வரலாற்றில் பெரும் புகழ் மாமன்னர் அருள்மொழித் தேவன் எனும் இராஜராஜசோழச் சக்கரவர்த்தி மீது இணையில்லாத காதல் மங்கை கொடும்பாளூர் இளவரசி வானதியை "பொன்னியின் செல்வன்" கதை படித்த யாரும் மறக்க முடியாது. சோழர் கடற்படையின் பரப்பை இலங்கை வரை  சென்று வென்று வந்த வரலாற்று நிகழ்வுகளின் மூலம் குறுநில மன்னர்கள் அல்லது வேளிர்  துணை நின்றார்கள் அதில் ஈழத்துப் பட்டம்  வென்ற கொடும்பாளூர் வேளிர் மகளான வானதி இளம் வயதிலேயே தாய் தந்தையை இழந்தவர். கொடும்பாளூர் சிற்றரசன் அதாவது வேளிர் சோழ சாம்ராஜ்யத்தின் சேனாதிபதி யாகவும் இருந்த சிறிய தந்தை குறுநில மன்னர் பூதி விக்ரமகேசரியால் வளர்க்கப்பட்டவர் தான் வானவன் மாதேவி எனும் அரசி வானதி. கொடும்பாளூர் பிறந்து திருக்கோவிலூரை பின்னர் ஆண்ட மலையமானின் மகள்  “மேலும் வானவன்மாதேவி மன்னர் ராஜராஜ சோழர் மறைந்த உடன் பிரிவாற்றாமல் உடன்கட்டை ஏறி தன் உயிரை மாய்த்துக் கொண்டாள். இதை திருவாலங்காட்டுச் செப்பேடுகள் மூலம் அறியலாம் ஈழத்தில் நடைபெற்ற யுத்தத்திற்காக கொடும்பாளூர்  வேளிர் கடல...