திருச்செந்தூரில் இருந்து தஞ்சாவூர் வந்த நீதிபதி பூர்ணஜெயந்த் ஆனந்த் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் என 6 பேர் வந்த கார் எட்டையபுரம் அருகில் விபத்து
திருச்செந்தூர் சென்று திரும்பிய தஞ்சாவூர் நீதிபதி பூர்ணஜெயந்த் ஆனந்த்
மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் என 6 பேர் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி ஆலயம் சென்று இன்று காலை
தஞ்சாவூருக்கு திரும்பிய நிலையில். அந்த காரை நீதிமன்ற ஊழியர் வாசுதேவன் மற்றும் ராமநாதன் ஓட்டி வந்துள்ளார். இந்த நிலையில் கார் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகேயுள்ள மேலக்கரந்தை பகுதியில் வந்த போது தூத்துக்குடியிலிருந்து அரியலூருக்கு ஜிப்சம் ஏற்றிச்சென்று கொண்டிருந்த லாரி மீது திடீரென மோதியதில் விபத்திற்குள்ளான காரின் ஒரு பகுதி லாரிக்குள் சிக்கிய நிலையில் நொறுங்கியுள்ளது. இந்த விபத்தில் வாசுதேவன் ராமநாதன், வழக்கறிஞர் தனஞ்செயன் ராமசந்திரன், பாதுகாவலர் நவீன் குமார் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். நீதிபதி பூர்ணஜெயந்த் ஆனந்த், நீதிமன்ற ஊழியர்கள் உதயசூரியன், ஸ்ரீதர்குமார் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
அது குறித்து தகவல் அறிந்த மாசார்பட்டி காவல் நிலையத்திலிருந்து சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்தவர்களை மீட்டு, அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு காவலர்கள் அனுப்பி வைத்தனர். அப்போது மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ஸ்ரீதர் குமார் உயிரிழந்ததால் உயிரிழப்பு எண்ணிக்கை 4 ஆனது. நீதிபதி பூர்ணஜெயந்த் ஆனந்த், நீதிமன்ற ஊழியர் உதயசூரியன் ஆகியோர் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனை தொடர்ந்து உயிரிழந்தவர்களின் 3 பேர் உடல் தூத்துக்குடி அரசு பொது மருத்துவமனைக்கும், ஒருவரின் உடல் அருப்புக்கோட்டை அரசு பொது மருத்துவமனைக்கும் உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைக்கப்பட்டது.
சம்பவ இடத்தினை விளாத்திகுளம் மாவட்ட உரிமையியல் நீதிபதி ஞான ஜெரீதா, தூத்துக்குடி மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், விளாத்திகுளம் துணைக் கண்காணிப்பாளர் அசோகன், கோவில்பட்டி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் கிரிஜா ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் விபத்து குறித்து மாசார்பட்டி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னால் சென்ற லாரியை முந்திச்செல்ல முயன்ற போது விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது
கருத்துகள்