முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

திருப்புவனம் காவல் நிலையத்தில் ஆலயத் தற்காலிக பணி செய்த இளைஞர் மரணம் 6 காவலர்கள் பணியிடை நீக்கம்

காவல் நிலையத்தில் ஆலயத் தற்காலிக பணி செய்த இளைஞர் உயிரிழப்பு -  6 காவலர்கள் பணியிடை நீக்கம் 


சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் காவல் நிலையத்தில் விசாரணை நடந்தாக கூறும் நிலையில் அஜித் என்ற இளைஞர் உயிரிழந்துள்ளார்.

பணியில் இருந்த காவல துறை பணியாளர்கள் பிரபு, கண்ணன், சங்கர மணிகண்டன், ராஜா, ஆனந்த், ராமச்சந்திரன் ஆகிய நபர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் அருள்மிகு மடப்புரம் ஸ்ரீ காளியம்மன் கோவிலில் தரிசனம் செய்ய வந்த பக்தர் ஒருவரிடம் அவரது காரில் 10 சவரன் நகைகள் திருட்டுப் போனதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் கோவில் தற்காலிக ஊழியர் அஜித் என்பவரை  விசாரணைக்காக காவல்நிலையத்தில் அழைத்துச் சென்றனர்.அஜீத்குமார் வழக்கின் முழு விபரம்:

நேற்றையதினம் அஜீத்குமாரது உடல் வாங்கப்பட்ட நிலையில் (மிரட்டலின் காரணமாக) வழக்கறிஞர்களின் நீண்ட உழைப்பின் வாயிலாக மாஜிஸ்திரேட் முன்பாக சமர்பிக்கப்பிட்ட வழக்கின் முழுவிபரமிது...

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் நாடார் தெருவைச் சேர்ந்த பாலகுருநாதன் மகன் 29 வயதுள்ள அஜித் குமார் என்பவர் மடபுரத்தில் உள்ள அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பத்திரகாளி அம்மன் கோவிலில் ஒப்பந்த அடிப்படையில் காவலாளியாகப் பணிபுரிந்து வருகிறார். கடந்த 27ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் ஒரு தாயும் மகளும் ஒரு காரில் வந்தவர்கள் நடக்கமுடியாததால் சக்கர வண்டி வேண்டும் என்று கேட்டதன் பெயரில் அஜித்குமார் உதவி செய்திருக்கிறார். அவரிடமே காரின் சாவியை கொடுத்து வேறு ஒரு இடத்தில் நிறுத்தும்படி கூறியிருக்கின்றனர். கார் ஓட்டத் தெரியாத அஜித்குமார் வேறு ஒரு நண்பரின் உதவியுடன் காரை வேறு இடத்தில் நிறுத்தியிருக்கிறார். மதியம் 12 மணி போல் வழிபாடு முடிந்து திரும்பி வந்த அப்பெண்கள் கேட்டதும் மீண்டும் காரை எடுத்து அவர்களுக்கு கொடுத்து, அவர்களும் திரும்பி சென்று விட்டனர். மதியம் 2 மணி அளவில் திருப்புவனம் காவல் நிலையம் வந்த அப்பெண்கள் பர்சில் வைத்திருந்த பணம் ரூபாய் 2,500ம் பத்துப்பவுன் நகையும் காணவில்லை என்று வாய்மொழியாகப் புகார் கொடுத்திருக்கின்றனர்.

காவல் நிலையத்தில் கேட்டுக்கொண்டதன் பேரில் கோவில் நிர்வாக அலுவலர்கள் மாலை 7 மணி அளவில் அஜித்குமாரைக் காவல்நிலையத்தில் ஒப்படைத்திருக்கின்றனர். ஆய்வாளரும் சார்பாய்வாளரும் விசாரித்து மானாமதுரையில் உள்ள துணை காவல்துறை கண்காணிப்பாளரின் சிறப்புப் படையினரிடம் அஜித்குமார், அவனின் தம்பி நவீன்குமார், காரை நிறுத்த உதவி செய்த நபர் மற்றும் 2 பேர் ஆகிய ஐந்துபேரை விசாரணைக்காக கூட்டிச்சென்று திருப்புவனம் கால்நடை மருத்துவமனை அருகில் உள்ள சீச்சாச்சேரி களம், மடப்புரம் விலக்கு மாணவர்கள் விடுதிக்குப்பின்புறம், பேருந்து டிப்போ பின்புறம் உள்ள ஆற்றோரப் பாதை ஆகிய மூன்று இடங்களில் வைத்து அடுத்தநாள் மாலைவரை அடித்து விசாரணை செய்துள்ளனர். சித்திரவதை தாங்காமல் 

எல்லோரும் இருக்கும் இடத்திற்கு சென்றால் யாராவது தலையிட்டு காப்பாற்றி விடுவார்கள் என்ற நம்பிக்கையில் மடப்புரம் கோவில் உதவி ஆணையாளர் அலுவலகத்தின் பின்புறம் கூட்டி சென்றால் எடுத்துத் தருகிறேன் என்று அஜித்குமார் கூறியதைக் கேட்டு அங்கே கூட்டிச் சென்ற காவலர்கள் அங்கு உள்ள மாட்டுக் கொட்டகையில் வைத்துக் கேட்டபோது உங்கள் சித்திரவதை தாங்காமல் தான் அவ்வாறு கூறினேன், நகை திருட்டுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறியுள்ளார். அதனால் ஆத்திரம் அடைந்த காவலர்கள் அவன் காலில் ஒருவரும் தலைப்பகுதியில் ஒருவரும் ஏறிநின்று பலம் கொண்ட மட்டும் அடித்துத் தாக்கியதில் 28 ஆம் தேதி சனிக்கிழமை மாலை 7 மணிக்கு சிறுநீரகத்தில் ரத்தம் கலந்து வருவதை கண்டு கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைத்துள்ளனர். அவர்கள் ஒரு ஆட்டோவில் ஏற்றி தனியார் மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்றுள்ளனர். தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க மறுத்ததால் அரசு மருத்துவமனைக்கு சென்ற பொழுது இறந்து விட்டதாகக் கூறியுள்ளனர். உடனே அஜீத் குமாருடன் கூட்டிச்சென்ற அனைவரிடமும் கையெழுத்து வாங்கிக்கொண்டு அனுப்பி விட்டனர்.

சனிக்கிழமை இரவு 11 மணிக்கு மேல் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 29ஆம்தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு பிரேதப் பரிசோதனை 

நடைபெற்றுள்ளது. பிரேத பரிசோதனைக்கு முன் திருப்புவனம் நீதித்துறை நடுவர் இறந்துபோன அஜித் குமாரின் தாயார் மற்றும் சகோதரர் நவீன் குமார் மற்றும் சாட்சிகளிடம் விசாரணை நடத்தியுள்ளார். திருப்புவனம் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

சனிக்கிழமை மாலை 7 மணி அளவில் தற்செயலாக வேறு வழக்கிற்காக காவல்நிலையம் வந்த ஒரு வழக்கறிஞரிடம் நகையைப் பறிகொடுத்த பெண்களின் சார்பாக புகார் எழுதி வாங்கப்பட்டுள்ளது. கோவிலுக்கு வருவதற்கு முன் மதுரையில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஸ்கேன் செய்வதற்காக சென்ற பெண்மணிகள் அங்கே தங்க நகையை கலற்றி பர்ஸில் வைத்துள்ளனர். அங்கிருந்து கிளம்பும் போது நகை இருந்ததா என்பதை அவர்கள் உறுதிப்படுத்தவில்லை. 

சந்தேகத்தின் பெயரில் அவர்கள் கொடுத்த புகாரைப் பெற்று 

கைது குறிப்புகள் ஏதும் தயாரிக்காமல் ஐந்து பேரை சட்ட விரோதக் காவலில் வைத்து மூன்றாம் தர சித்திரவதைகளில் ஈடுபட்டதால் பத்தாம் வகுப்பு வரை படித்த, இதுவரை எந்தக் குற்ற வழக்கிலும் சம்பந்தப்படாத அஜித்குமார் உயிர் இழக்க நேர்ந்ததற்கு காவல்துறை அலுவலர்களே முழுக்காரணம். இந்நிலையில் காவல்துறை அலுவலர்கள் கொலைக்குற்றச்சாட்டிலிருந்து தங்களைக் காப்பாற்றிக்கொள்ள உயர் அலுவலர்கள் மற்றும் ஆளுங்கட்சி சார்ந்த பிரமுகர்கள், ஜாதியச் சங்கத்தைச் சார்ந்தவர்களை வைத்து 

கணிசமான தொகையை கையூட்டாகக் கொடுத்து தப்பிக்க நினைப்பதாக தெரியவருகின்றது. இதில் உண்மை நிலையை அறிய வழக்கின் விசாரணையை உடனடியாக சிபிசிஐடி போன்ற சிறப்புப் பிரிவினருக்கு மாற்ற வேண்டும்.  உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது சட்ட விரோதக் காவலில் நடந்த கொலைக்கு காரணமான காவலர்களை 

இடை நீக்கம் செய்வதை உறுதி செய்வதோடு பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று மக்கள் சிவில் உரிமைக் கழகம் சார்பில் கேட்டுக்கொள்கின்றது. 

மக்கள் சிவில் உரிமை கழகத்தின் மாநிலத் தலைவர் பேராசிரியர் இரா. முரளி. சிவகங்கை மாவட்டத் தலைவர் பேராசிரியர் அரச முருகபாண்டியன் தகவல்



காவல் நிலையத்தில் காவலர்கள் கொடூரமாக தாக்கி விசாரணை நடத்திய போது இளைஞர் அஜித் உயிரிழந்தார் என கூறப்படுகிறது. இந்த சம்பவத்தையடுத்து அஜித்தின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் கோவில் தற்காலிக ஊழியர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக திருப்புவனம் காவல் நிலையத்தில் பணியாற்றிய 6 தனிப்படைக் காவலர்களை பணியிடை நீக்கம் செய்து சிவகங்கை மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் ஆஷித் ராவத் உத்தரவிட்டுள்ளார். கோவில் தற்காலிக ஊழியர் உயிரிழந்தது குறித்த வெளிப்படையான விசாரணைக்கும் அவர் உத்தரவிட்டுள்ளார்.








அதன்படி காவலர்கள் பிரபு, கண்ணன், சங்கர மணிகண்டன், ராஜா, ஆனந்த், ராமச்சந்திரன் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.சிவகங்கை மாவட்டம் திருபுவனத்தில் திருட்டு சம்பவம் தொடர்பாக நேற்று போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்குமார் (வயது 28) உயிரிழந்தார். மடப்புரம் ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவிலுக்கு மதுரையைச் சேர்ந்த சிவகாமி என்ற நபர் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்ய வந்துள்ளார். சிவகாமி வயது முதிர்ந்தவர் என்பதால் கோவில் தற்காலிக ஊழியர் அஜித் வீல் சேர் கொண்டு வந்து கொடுத்துள்ளார். அப்போது அஜித்திடம் சாவியைக் கொடுத்து காரை பார்க்  செய்யுமாறு சிவகாமியின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அஜித்தும் அது தனது பணியில் லை எனக் கூறாமல் அவர்களுடைய காரை ஓரிடத்தில் பார்க் செய்துவிட்டு சாவியைக் கொடுத்துள்ளார்.



சாமியைக் கும்பிட்டு விட்டு வெளியே வந்த சிவகாமி குடும்பத்தினர் காரில் அவர்கள் வைத்திருந்த 10 பவுன் நகையைக் காணவில்லை என திருப்புவனம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்தப் புகாரின் அடிப்படையில் காவல் நிலையத்திற்கு தற்காலிக பணி இளைஞர் அஜித்தை அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது தனிப்படை காவலர்கள் மூர்க்கத்தனமாகத் தாக்கியதில் அவர் உயிரிழந்ததாக அஜித்தின் உறவினர்கள் குற்றச்சாட்டுத் தெரிவித்து அங்கு போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல் நிலையத்தில் கொடூரமான முறையில் தாக்கியதில் இளைஞர் அஜித்குமார் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக நீதிபதி தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,




சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோவில் காவலாளி அஜித் குமார் என்பவர் பெண் பக்தரின் காரில் இருந்த ஒன்பதரை பவுன் நகையைத் திருடி விட்டதாக வந்த புகாரை அடுத்து, திருபுவனம் காவல்துறை அஜித் குமாரை கைது செய்து விசாரணை செய்ததாகவும், அச்சமயத்தில் காவலரின் தாக்குதலால் அஜித் குமார் மரணம் அடைந்து விட்டதாகவும் அவரின் உறவினர்கள் இறந்த அஜித் குமாரின் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

"ஜெய்பீம் படம் பார்த்தேன். உள்ளம் உலுக்கியது" என சினிமா விமர்சனம் எழுதிய விடியா அரசின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எங்கே இருக்கிறார்?



விக்னேஷ் லாக்கப் மரணத்தின் போது, சட்டப்பேரவையிலேயே பச்சைப்பொய் பேசியவர் தானே நீங்கள்? இதற்கும் அதே போல் பொய் தான் பதிலாக வருமா?

தவறு செய்ததாக காவல்துறை கருதினால், கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்து, உரிய சட்ட நெறிமுறையை பின்பற்ற வேண்டுமே தவிர, சட்டத்தை தங்கள் கைகளில் முழுமையாக காவல்துறை எடுத்துக்கொள்ள கூடாது.

தன்னுடைய நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையைக் கூட நிர்வகிக்கத் தெரியாத பொம்மை முதல்வருக்கு எனது கடும் கண்டனம்.

திருபுவனம் காவல் நிலையத்தில் திருக்கோவில் காவலாளி அஜித் குமார் மரணம் அடைந்த நிகழ்வு குறித்து முழு உண்மையை வெளி கொண்டுவர உடனடியாக மாவட்ட நீதிபதி தலைமையில் குழு அமைத்து, முழு விசாரணை நடத்தி, இந்த மரணத்திற்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும், மேலும் இறந்தவர் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க இந்த விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசை வலியுறுத்துகிறேன். எனத்  தெரிவித்துள்ளார். காலைல 6 மணிக்கு கதவ தட்டுனாங்க. கண்ணு முன்னாடியே என் அண்ணன.....'' திருப்புவனம் காவல் நிலையத்தில் திருட்டு வழக்கு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்த விவகாரம் - கண்ணீர் மல்க நடந்ததைக் கூறிய இளைஞரின் தம்பி மற்றும் தாய் ஆகியோர் தெரிவித்துள்ளார்கள்.                     பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்:




"சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியில் காவல்துறை விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்ததாக தெரிவித்திருப்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. பத்ரகாளியம்மன் மடப்புரம் திருக்கோவிலின் தற்காலிக ஊழியர் அஜித்குமாரை விசாரணை எனும் அழைத்துச் சென்று, இணைந்து 2 போர்வையில் காவலர்கள் 7 நாட்களாக அடித்துத் துன்புறுத்தியதால் அவர் உயிரிழந்ததாக உறவினர் குற்றஞ்சாட்டி வரும் நிலையில், இது லாக்-அப் மரணமோ என்ற சந்தேகத்தை வலுவாக எழுப்புகிறது.

கடந்த வாரம் பாலியல் தொல்லை குறித்து புகாரளிக்க வந்த கர்ப்பிணி உட்பட மூன்று பெண்களை காவலர் தாக்கிய நிலையில், தற்போது தன்னையும் தன் சகோதரரையும் வண்டியில் அழைத்து செல்லும் வேளையிலும் பின்னால் கயிறு கட்டி தாக்கியதாக உயிரிழந்த அஜித்குமாரின் சகோதரர் வாக்குமூலம் அளித்திருப்பது காவல்துறையின் அதிகரித்துவரும் குரூரப் போக்கை வெளிப்படுத்துகிறது.



தி.மு.க. ஆட்சியில் காவல்நிலையத்திற்கு வந்தாலே ஏழை எளியோரின் உயிர்களுக்கு பாதுகாப்பில்லை உருவாகியுள்ளது. என்ற நிலை காவல்துறையின் அராஜகப் போக்கிற்கு மேலும் பல உயிர்கள் பலியாகும் முன், சட்டம் ஒழுங்கை தன் நேரடிக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடியாக இவ்விஷயத்தில் தீவிர விசாரணை நடத்தி, உயிரிழந்தவரின் இறப்புக்கு தக்க நியாயம் பெற்றுத்தர வேண்டும்". எனத் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து பாரதிய ஜனதா கட்சி மாநிலத்தின் தலைவர் நயினார் நாகேந்திரன், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ், உள்ளிட்ட தலைவர்கள் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ள நிலையில்.    மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவில், சிவகங்கை மாவட்டத்தின், திருப்புவனம் வட்டத்தில் மடப்புரம் மதுரையிலிருந்து 18 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் வைகை ஆற்றின் வடகரையில் அமைந்துள்ளது. மோசடி கொடுக்கல் வாங்குவதில் சிக்கல், சொத்து தகராறு, குடும்பச் சண்டைகளில் நீதி கிடைக்காது ஏமார்ந்தவர்கள் குளித்துவிட்டு ஈரத்துணியுடன் வந்து நீதியின் தேவதையாக காளியைக் கருதி அன்னையின் முன்னால் காசு வெட்டிப்போட்டு காளியிடம் முறையிடும் பழக்கம் உள்ளது.





காளியிடம் முறையிட்டபின்னர் கிழக்கு வாசல் வழியாக அவர்கள் வெளியேறுவர். மடப்புரம் கோவிலின் மூலக் கடவுளாக இருக்கும் ஸ்ரீ அடைக்கலம் காத்த ஐயனாருக்கு இருபுறமும் தலையை அரித்து பலியிட்டுக் கொள்ளும் நவகண்ட சிற்பங்கள், ஐயனாரின் கருவறையில் சப்தகன்னியரும் உள்ள கோவில் வளாகத்தில் அடைக்கலம் காத்த ஐயனார், பத்திர காளியுடன் சின்ன அடைக்கலம் காத்த சுவாமி, சின்னு, வீரபத்திரன், காணியாண்ட பெருமாள், ஐயனார், கருப்பண்ணசாமி, வினை தீர்க்கும் செல்வ விநாயகர் தனித்தனி உப சிற்றாலயங்களில் அருள்பாலிக்கும் நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இனி இந்த சம்பவத்திற்கு தக்க நீதியை அந்த தெய்வம் தான் குற்றவாளிக்கு தரவேண்டும் அதுவே உண்மையான நீதியாக அமையும்.  
இந்த நிலையில் சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அதிமுக மாவட்டச் செயலாளர் செந்தில் நாதன் மற்றும் கட்சியினர் பொதுமக்கள் உடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த நிலையில் கொலை வழக்குப் பதிவு செய்து நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென புதிய தமிழகம் கட்சியின்  நிறுவனர் தலைவர்  டாக்டர் க. கிருஷ்ணசாமி  MD, Ex.MLA,. வெளியிட்ட அறிக்கையில் 
"சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் ஒன்றியம், மடப்புரம் காளி கோவில் திருவிழாவிற்காக சென்ற பெண்மணி ஒருவரின் நகை திருட்டுப்போன புகார் சம்பந்தமாக அக்கோவிலில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்த 27 வயதுடைய அஜித்குமார் உட்பட 6 பேர் விசாரணைக்காக காவல்துறையால் அழைத்து செல்லப்பட்டுள்ளார்கள். காவல் நிலையத்திற்கு வெளியே நடைபெற்ற விசாரணையின் போது அஜித் குமார் என்பவர் மரணமெய்தி விட்டார் என்ற செய்தி மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. அவரது மரணத்திற்கான உண்மை காரணம் வெளிக்கொணரப்பட வேண்டும். சம்பவத்தில் காவலர்கள் 6 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்கள். அது தீர்வாகாது. இந்த வழக்கை உடனடியாக நீதிபதி அல்லது சப் கலெக்டர் விசாரணைக்கு ஒப்படைத்தால் மட்டுமே இதை கொலை வழக்காக பதிவு செய்ய முடியும்.
தமிழ்நாட்டில் பல காவல் நிலையங்களில் ஒரு குறிப்பிட்ட ஜாதியை சேர்ந்தவர்கள் மட்டுமே காவலர்களாகப் பணியாற்றுவதால், இதுபோன்ற பல தவறுகளுக்கு காரணமாக அமைகிறது. மேலும், ஒவ்வொரு காவல்நிலைய  மரணங்களுக்குப் பிறகும், அதை தற்காலிகமாக சமாளித்துக் கொள்ளலாம் என்று எண்ணுகிறார்களே தவிர, நிரந்தரமாக தீர்வு காண எவ்வித நடவடிக்கைகளையும் எந்த ஆட்சியிலும் எடுப்பதில்லை.
திருப்புவனம் அஜித் குமார் மரணத்திற்கு காரணமானவர்கள் முறையான விசாரணையின் மூலம் கண்டறியப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். இது போன்று ஒன்றரை வருடங்களுக்கு முன்பு சங்கரன்கோவில் வேன் டிரைவர் முருகன் காவல் துறையால் அடித்துக் கொல்லப்பட்டார். ஆனால், குற்றவாளிகளை பாதுகாக்க தான் தமிழக அரசு முயற்சி செய்கிறதே தவிர, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை நிலைநாட்ட எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்வதில்லை. அதே போன்ற ஒரு நிலைமை அஜித் குமார் மரணத்திற்கும் நடந்து விடக்கூடாது;  குற்றவாளிகளை சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க விடக்கூடாது என எச்சரிக்கிறேன். எனத் தெரிவித்துள்ளார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலபக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...