அங்கீகாரமில்லாத தனி மனைகளை வாங்கியவர்கள், எப்போது வேண்டுமானாலும் ஆன்லைன் வழியே விண்ணப்பித்து, வரன்முறை பெறலாம் அரசாணை வெளியீடு
நகர் ஊரமைப்பு வளர்ச்சி 2025 - 26 ஆம் ஆண்டிற்கான வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அறிவிப்பு எண். 5 -ல் நாள் 20.10.2016 அன்றோ அல்லது அதற்கு முன்னரோ அங்கீகாரம் இல்லாமல் விற்கப்பட்ட தனிமனையினை எந்தக் காலக்கெடுவும் இல்லாமல் இணைய வழி மூலம் விண்ணப்பித்து வரன்முறைப் படுத்திக் கொள்ளுதல் சம்பந்தப்பட்ட அரசாணை வெளியீடு. அங்கீகாரம் இல்லாத தனி மனைகள் வரன்முறைக்கு காலவரம்பு இல்லை எனவும்,
அங்கீகாரம் இல்லாத தனி மனைகள் வரன்முறைக்கு காலவரம்பு இல்லை 'தமிழ்நாட்டில் அங்கீகாரமில்லாத தனி மனைகள் வரன்முறைக்கு, காலவரம்பின்றி அவகாசம் வழங்கப்பட்டுள்ளது' என, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அறிவித்துள்ளது.
தமிழ்நாடு விவசாய நிலங்களில் நஞ்சை தவிர புஞ்சை நிலம் வீட்டு மனைகளாக மாற்றப்படுவதாக, 2016 ஆம் ஆண்டில் புகார் எழுந்ததையடுத்து நீதிமன்ற உத்தரவு காரணமாக, அங்கீகாரமில்லாத மனைகள் விற்பனை செய்துள்ள பத்திரப்பதிவுக்கு தமிழ்நாடு அரசு தடை விதித்தது.
இந்தத் தடை உத்தரவுக்கு முன், மனைகளை வாங்கியவர்களுக்கு நிவாரணமாக, நிபந்தனைகள் அடிப்படையில் வரன்முறை செய்யும் திட்டம், 2017 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது, இந்த நிலையில் விபரம் அறியாமல் இருந்தவர்கள் தங்கள் குறை தீர்க்கும் நடவடிக்கையாக
மீண்டும் இதன்படி, 2016 ஆம் ஆண்டு அக்டோபர்,ங 20 ஆம் தேதிக்கு முன் வீட்டு மனையாக விற்பனைப் பதிவு செய்யப்பட்ட மனைகள், மனைப்பிரிவுகளை வரன்முறை செய்யலாம், கடந்த 2017 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டத்தில் விண்ணப்பப்பதிவு, 2019 ஆம் ஆண்டில் முடிவுக்கு வந்ததில், விடுபட்டவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்ததனால், 2026 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30 ஆம் தேதி வரை மனைப்பிரிவு மற்றும் தனிமனை உரிமையாளர்கள் விண்ணப்பிக்கலாம் என, தமிழ்நாடு அரசு மே மாதம் 15 ஆம் தேதியில் அறிவித்தது, அதற்கு அரசாணையும் பிறப்பித்தது.
இந்த நிலையில் இந்த அரசாணையில் திருத்தம் செய்து, புதிய அரசாணையை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை தற்போது வெளியிட்டுள்ளது அதன் படி
2016 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம்., 20 ஆம் தேதிக்கு முன்னர், வீட்டு மனை என்ற பெயரில் தடையின்மை சான்றிதழ் படி பத்திரப்பதிவு செய்த அங்கீகாரமில்லாத தனி மனைகள் வரன்முறைக்கு, காலக்கெடு நிர்ணயிக்கப்படாமல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதனால், அங்கீகாரமில்லாத தனி மனைகளை வாங்கியவர்கள், எப்போது வேண்டுமானாலும் ஆன்லைன் வழியே விண்ணப்பித்து, வரன்முறை சலுகை பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்